இந்த பரிகாரம் செய்தால் சொந்தவீடு நிச்சயம் அமையும்

செவ்வாய் பகவானை வழிபட விரைவில் சொந்த வீடு அமையும்.ஒன்பது செவ்வாய் அபிஷேக செய்து வழிபட வீடுகட்டும் கனவு நிஜமாகும்.
இந்த பரிகாரம் செய்தால் சொந்தவீடு நிச்சயம் அமையும்
Published on

* சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமை செய்யாய் ஓரையில் செவ்வாய் பகவானை நினைத்து அர்ச்சனை செய்து வர விரைவில் சொந்த வீடு அமையும்.

* நிலம் அமைத்து வீடு அமைய தாமதம் ஆகும்போது திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்து அந்த ஆலயத்திலேயே ஆறு மணிநேரம் தங்கி அங்குள்ள கடல் நீரை எடுத்து வந்து மஞ்சள் கலந்து வீட்டு கட்டும் இடத்தை சுற்றி தெளிக்க வேண்டும்.

* வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய் அன்று அபிஷேகம் செய்து வணங்கிவர வீடுகட்டும் கனவு நிஜமாகும்.

* வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரத்தை தானமாக கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

* ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்க கொடுத்தால் வீடு வாங்கவும், வீடு கட்டவும் வாய்ப்புகள் அமையும் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com