search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
    • நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், "கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.

    "எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனான நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று பேசினார்கள்.

    இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

    அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்றும் நடராஜன் பேசினார்.

    இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார்.
    • தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்-மெர்சி தம்மதியின் மகள் பிரியா. இவரது கணவர் பியூஸ் பால். பிரியாவுக்கு ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.

    ஆகவே அவர் திருமணமான பிறகும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவர் திருச்சூர் மாவட்டம் இருஞ்சாலக்குடா கிறிஸ்து கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். அவரது ஆய்வு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நீடித்தது.

    தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார். அவரது ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முனைவர் பட்டம் பெற பிரியா தகுதியானார்.

    இந்நிலையில் பிரசவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பிரியா பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் டாக்டர் பட்டத்தை பெற முடியாமல் போனது. டாக்டர் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்டநாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை, அவருடைய மகளிடம் வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆய்வறிக்கை சமர்ப்பித்த வர் இல்லாதநிலையில், பிரியாவின் பட்டத்தை யூ.கே.ஜி.படிக்கும் அவரது மகளிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து பிரியாவின் டாக்டர் பட்டம், யூ.கே.ஜி. படித்துவரும் அவரது மகள் ஆன்ரியா பெற உள்ளார்.

    இந்த தகவலை கேரள மாநில உயர்கல்வித்துறை மந்திரி பிந்து தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆராய்ச்சி தாயின் நீண்ட நாள் கனவை அவரது மகள் ஆன்ரியா பெறப்போகிறார் என்பது நமக்கு என்றென்றும் மறக்க முடியாக நினைவாக இருக்கும். பிரியா இல்லாத நேரத்தில் அவரது முயற்சிகள் மற்றும் அற்புதமான சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துவோம். இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் “எழுத்தறிநாதர்“ என்ற பெயர் பெற்றார்.
    • பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன.

    விஜயதசமியைக் கல்வித் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

    பல குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக இருக்கவும், கையெழுத்து திருந்தவும்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலுக்கு அழைத்து செல்லலாம்.

    இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு அரசர் தனது கணக்கு பிள்ளையை கோவில் கணக்குகளை எடுத்து வருமாறு பணித்தார்.

    அந்நேரத்தில் அவர் கணக்கை சரிவர எழுதி முடிக்கவில்லை.

    எப்படி கணக்கை முடித்துக் கொடுப்பது என்று தெரியாமல் விழித்தபடியே சன்னதியில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

    ஆனால் மறுநாள் காலையில் அரசர் கணக்கு பிள்ளையை அரண்மனைக்கு அழைத்து பாராட்டினார்.

    கணக்கு பிள்ளைக்கோ எதுவும் புரியவில்லை.

    இதுவரை பார்த்த கோவில் கணக்குகளிலேயே நீங்கள் சமர்ப்பித்த கணக்குதான் மிகச் சரியாக இருந்தது என்று சொன்னார் அரசர்.

    கணக்குப்பிள்ளை கணக்குப் பேரேட்டை வாங்கிப் பார்த்தார்.

    பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன.

    சிவபெருமானே தன்னைப் போல அரசரிடம் வந்து கணக்கை காட்டிய உண்மையை உணர்ந்தார் கணக்கர்.

    இந்த உண்மையை அரசரிடம் தெரிவித்ததோடு கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி நின்றார்.

    அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் "எழுத்தறிநாதர்" என்ற பெயர் பெற்றார்.

    ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில் எழுதுகிறார்கள்.

    தினமும் இந்த வழிபாடு இக்கோவிலில் நடக்கிறது.

    பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இங்கு அர்ச்சனை செய்தால் நன்கு பேசும் திறன் உண்டாகிறது.

    • தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

     திருப்பூர்:

    சுதந்திரப் போராட்டத் தியாகி கொடி காத்த குமரனின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு, தியாகி குமரன் அறக்கட்டளையின் சார்பாக, திருப்பூர் குமரனை நினைவு கூறும் வகையில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டு உரையாற்றுகையில், இங்கு வந்துள்ள தாய்மார்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளைப் போலவே, உங்கள் மருமகள்களையும் உங்கள் பிள்ளைகளாக நினைத்து வழி நடத்த வேண்டும். அது மட்டுமல்லாது, படிப்பு ஒன்றே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டு ஆண், பெண் என உங்களின் இரு குழந்தைகளையும் நன்றாக படிக்க வையுங்கள். கல்வி ஒன்றே அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்றார். மேலும், சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். 

    • கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது.
    • கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள்.

    நாம் பயின்ற பள்ளிகளுக்கும், இப்போது இயங்கும் பள்ளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகளை திட்டக்கூடாது, துன்புறுத்தக்கூடாது... என்பது போன்ற பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கிறது. இவை வருங்காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், மாண்டிசோரி கல்வி முறையே எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பெற்றோர்களின் கவனமும் மாண்டிசோரி பள்ளிகள் மீது பதிந்திருக்கிறது.

    இந்த காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், போட்டி நிறைந்த சமூகத்தை சமாளிக்கும் வகையில் வளர, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்கு செல்வதால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்ளும்படியாக வளர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    சமூக பொறுப்புகளையும், சமூக ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும்தான் மாண்டிசோரி கல்வி முறையின் தூண்கள் என்பதால்... பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மாண்டிசோரி பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.

    தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது. ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன. எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

    • தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.
    • ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு.

    மாண்டிசேரி எனப்படும் மழலை ஆசிரியர் பயிற்சி பற்றியும், இதன் முக்கியத்துவம் பற்றியும் சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.

    * மாண்டிசேரி கல்வி முறை

    மரியா மாண்டிசேரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டிசேரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டிசேரி பள்ளி மற்றும் மாண்டிசேரி ஆசிரியர்களின் நோக்கம். இது சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி முறை. வெகுசுலபமாகவே, கற்றுக்கொள்ள முடியும்.

    * மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி

    10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் இளங்கலை படிப்பு முடித்தவர்கள் வரை மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற முடியும். 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ இன் மாண்டிசேரி பயிற்சியும், பிளஸ்-2 படித்தவர்கள், அட்வாண்ஸ்ட் மாண்டிசேரி படிப்பும் படிக்கலாம். இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற விரும்புபவர்கள் அடிப்படை மற்றும் அட்வாண்ஸ்ட் பயிற்சிகளை பெற்று, ஆசிரியர் தகுதி பெறலாம்.

    * மாண்டிசேரி ஆசிரியர் பணி

    நன்கு வளர்ந்த குழந்தைகளை கையாள்வதை விட, மழலைகளை கையாள்வது கொஞ்சம் கடினமானது. சவாலானது. வழக்கத்தை விட நிதானமும், பொறுமையும் அவசியம். இதோடு, தினந்தோறும் புதிது புதிதாக கற்றுக்கொண்டு குழந்தைகளை வழிநடந்த முடியும் என்று எண்ணுபவர்கள், மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெறலாம்.

    * வேலைவாய்ப்பு

    நகர்ப்புறங்களில் மாண்டிசேரி பள்ளிகள் அதிகமாகவே தென்படுகின்றன. 'பிளே ஸ்கூல்' போன்றவற்றிலும், மாண்டிசேரி பயிற்சி முடித்திருக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், இயல்பான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், மாண்டிசேரி பயிற்சியின் மூலம் அவர்களது திறனையும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில், மாண்டிசேரி பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

    * எப்படி வேறுபடுகிறது?

    வழக்கமான பள்ளிகளில் ஆசிரியர் முதன்மையாக இருப்பார். அவர் சொல்வதை கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு மாண்டிசேரி கல்விமுறையில் குழந்தைகள் முதன்மையாக இருப்பர். ஆசிரியர் பின்னணியில் இருந்து அவர்களை வழிநடத்துவார். இதில் மனப்பாட முறை கிடையாது. யோசனை செய்து பதில் அளிக்க வேண்டும். நன்றாக கவனித்து (Observe) தானே கற்று கொள்வதால் ஆழ் மனதில் (subconscious) பதியும். கரும்பலகை முறை கிடையாது. பார்த்து எழுதும் முறையும் கிடையாது. எல்லாமே செயல்முறை கல்வியாகவே கற்றுக்கொடுக்கப்படும்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும். தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.

    ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன.

    எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

    வீட்டுக்கு சென்றால் தாயுடன் நேரம் செலவழிக்க, வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். இப்படி பொதுவான கல்வி முறைக்கும், மாண்டிசேரி கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதேபோல, இவை அனைத்தையும் கையாள்வதிலும் சிரமங்கள் உண்டு.

    * சிறந்த பயிற்சி

    இப்போது மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பல இடங்களில் வழங்கப்படுகிறது. ஆனால் அங்கீகாரம் பெற்ற, முன் அனுபவம் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறுவது, திறமையை வளர்த்து கொள்ளவும், சுலபமான பணிவாய்ப்பு பெறவும் வழிவகுக்கும்.

    * கட்டணம்

    பயிற்சி நிறுவனங்களுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். அதிகபட்சம், ரூ.20 ஆயிரத்திற்குள், ஒரு வருடத்திற்குள் பயிற்சியை முடித்துவிடலாம்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு
    • விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2022 - 23 ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார். பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு எச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற பிட்ஸ் பிலானி கல்லூரியில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டரிங், டிசைனிங்) பட்டப் படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் மேனேஜ்மெண்ட் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராகவும், 2022 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் 60 சதவீதமும், 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்புக்கான செலவுகளை தாட்கோ ஏற்கும். இத் திட்டத்தில் ஆண்டு ஊதியமாக ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் வரையிலும், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப் பயிற்சியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    • நம்முடைய தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றன.
    • நிறைய பெற்றோர் தங்களின் குழந்தைகள் மூலமாக கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள்.

    முன்பை விட, இப்போது பள்ளிகள் அதிகமாகிவிட்டது. புதுப்புது கல்வி முறைகளும், பாடத்திட்டங்களும் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டன. இந்நிலையில், குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்க இருக்கும் பெற்றோர்களின் மனதில் எழும் இயல்பான சில கேள்விகளுக்கு, மருத்துவர் மற்றும் கல்வியாளராக பணியாற்றும் பார்கவி மூலம் விடையளிக்க முயன்றிருக்கிறோம்.

    புதுக்கோட்டையை சேர்ந்தவரான இவர், மருத்துவர். ராஜஸ்தான் மெடிக்கல் கல்லூரியில், மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் கற்றுக்கொடுத்து டீச்சிங் எனப்படும் கற்பித்தல் பணியையும் கற்றுக்கொண்டிருக்கிறார். இவர், இப்போது குழந்தைகளின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்து, அதை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளார். அவர் நம்முடைய கேள்விகளுக்கு விடைக்கொடுக்கிறார்.

    * இப்போது என்னென்ன கல்வி முறைகள் நடைமுறையில் இருக்கிறது?

    நம்முடைய தமிழ்நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றன. சி.பி.எஸ்.இ., தமிழ்நாடு ஸ்டேட் போர்ட், மெட்ரிகுலேஷன், இன்டர்நேஷனல் பாக்காலுரேட் (ஐ.பி.), ஐ.ஜி.சி.எஸ்.இ. போன்ற கல்வி முறைகள், எல்லோருக்கும் பரீட்சயமான கல்வி முறைகளாக திகழ்கின்றன. அதேசமயம், மாண்டி சோரி, ரெஜியோ எமிலியா, வால்டோர்ப், பேங்க் ஸ்டீரீட் இப்படியான மழலையர் கல்வி முறைகள்.... கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகின்றன. இவற்றோடு மெட்ரிகுலேஷன் தரத்திலான டெக்னோ பள்ளிகளும் அதிகம் முளைத்துவிட்டன.

    * எந்த கல்வி முறை சிறப்பானதாக இருக்கும்?

    இப்போது எல்லா கல்வி முறைகளும், அப்டேட் ஆகிவிட்டன. சில கல்வி முறைகள் அப்டேட் ஆகிக்கொண்டு இருக்கின்றன. அதனால், எது சிறந்தது என குறிப்பிடுவது, தேர்ந்தெடுப்பது கடினம்தான். இருந்தாலும், பள்ளிக்கும், வீட்டிற்குமான தொலைவு, கல்வி கட்டணம்... போன்றவைதான், பள்ளி தேர்வை நிர்ணயிக்கின்றன.

    முடிந்தவரை, செயல்முறை கல்வி அதிகமாக இருக்கும் கல்விமுறைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. சி.பி.எஸ்.இ., தமிழ்நாடு ஸ்டேட் போர்ட், மெட்ரிகுலேஷன், இன்டர்நேஷனல் பாக்காலுரேட் (ஐ.பி.), ஐ.ஜி.சி.எஸ்.இ. போன்ற கல்வி முறைகள் சிறப்பானதாக இருக்கும்.

    * குழந்தைகளின் கற்றல் திறனையும், புரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் எப்படி மேம்படுத்த முடியும்?

    கண்களால் பார்த்து படிப்பது ஒரு ரகம். இது டெக்னோ பள்ளிகளில் நடக்கும். டிஜிட்டல் திரைகளில் ரைம்ஸ் பாடல்கள், கதைகள் ஓடவிட்டு குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி கற்றுக்கொடுப்பார்கள். அதேபோல கண்களால் பார்த்து படிப்பதுடன், அதை கைகளால் செய்து பார்த்தும், வரைந்து படிப்பதும் மற்றொரு ரகம். உதாரணத்திற்கு, வானவில் பற்றி கற்றுக்கொடுக்கும்போது 6 வண்ணங்கள் இருக்கும், ஒவ்வொரு வண்ணத்திற்கு ஒவ்வொரு பெயர் இருக்கும் என்று சொல்லிக்கொடுப்பதை விட, வண்ண பெயிண்டுகளை கையில் கொடுத்து, அவர்களை வானவில் வரைய சொல்லி, கற்றுக்கொடுக்கும் செய்முறை கல்வி மற்றொரு ரகம். விஷூவல் கல்வியை விட, செய்முறை கல்விக்குதான் ஆற்றல் அதிகம். அதுதான், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும்.

    * ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனும், குழந்தைகளின் கல்வி கற்றல் திறனும் முன்பும், இப்போதும் எப்படி இருக்கிறது?

    முன்பை விட, ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன் அதிகரித்திருக்கிறது. இப்போது ஆசிரியர்கள் சிறப்பாக கல்வி கற்றுக்கொடுக்கிறார்கள். குறிப்பாக, வீடியோ காட்சிகள், மாதிரி உபகரணங்களை கொண்டு குழப்பமான பாடங்களையும் எளிதாக கற்றுக்கொடுக்கிறார்கள். அதேபோல குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வமும், அதிகரித்திருக்கிறது. ஆர்வமாக கல்வி கற்கிறார்கள். அதேசமயம், மாணவர்கள்-ஆசிரியர்கள் இவ்விருவரின் கல்வி பயணத்திற்குள், பெற்றோரின் தலையீடும் இப்போது அதிகரித்திருக்கிறது. காரணமில்லாமல் விடுமுறை எடுப்பது, குழந்தைகளுக்கு ஆதரவாக தேர்வுகளை தவறவிடுவது, குழந்தைகளை அடிக்கக்கூடாது, கண்டிக்கக்கூடாது, திட்டக்கூடாது... என நிறைய கண்டிஷன்களை முன்வைப்பது, அவன் படிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை அவனை கண்டிக்க வேண்டாம் என்பது போன்ற பல தலையீடுகள் அதிகரித்துவிட்டன. இது ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க உதவாது என்பதையும், தங்களுடைய குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க முடியாது என்பதையும் பெற்றோர் மறந்துவிடுகின்றனர்.

    * சமீபகால கல்விமுறை, குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறதா?

    நிச்சயமாக, டிஜிட்டல் பள்ளிகளில் டிஜிட்டல் திரை மூலம் பாடம் நடத்தப்படுவதாலும், வீடுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்திருப்பதாலும் குழந்தைகளின் கண் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்படுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் டிஜிட்டல் கல்வி முறைகளே, பாதிப்பான கல்வி முறைகளாக மாறி வருவதை எவராலும் மறுக்க முடியாது.

    * எல்லா கல்வி முறையிலும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?

    ஆம்...! இப்போது எல்லா கல்வி முறையிலும், எல்லா பள்ளிகளிலும் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் விளையாட்டு அனுபவம், குழந்தைகளின் மன நலம் மற்றும் உடல்நல ஆரோக்கியத்திலும், மூளை வளர்ச்சியிலும் அதிக பங்காற்றுவதால், அதை எல்லா பள்ளிகளும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

    * கல்வி அறிவு இல்லாத பெற்றோர், சர்வதேச கல்வி முறையில் குழந்தைகளை சேர்க்க முடியாது என்ற கருத்து உண்மையா?

    இது, பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்ப மாறுபடும். நிறைய பள்ளிகள், இந்த கருத்தை பொய்யாக்கி உள்ளன. அதேசமயம், சில பள்ளிகள் இந்த கருத்தை உண்மை என நிரூபித்துள்ளன. ஆனால், நிறைய பெற்றோர் தங்களின் குழந்தைகள் மூலமாக கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். ஒருசில பெற்றோர், குழந்தைகள் வாயிலாகவே ஆங்கிலம்-இந்தி மொழி பேசும் பழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

    * கற்றல் திறன், கற்பித்தல் திறன் சார்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களுடைய ஆசை என்ன?

    குழந்தைகளை, எந்த வகையிலும் பாதிக்காத தொழில்நுட்பங்களை கொண்டு, ஆர்வத்தை தூண்டும் வகையிலான கல்வி முறையை கட்டமைப்பதும், அதற்கேற்ற கற்பித்தல் திறனை வளர்ப்பதும்தான் என்னுடைய ஆசை. இப்போது வரை, ஆய்வின் மூலம் கற்றுணர்ந்த சில நுட்பங்களை பல பள்ளிகளுக்கு சென்று, கற்பித்து வருகிறேன்.

    • எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன படிப்புகளை படிக்கலாம்? என்பது பற்றி பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கம் அளித்தார்.
    • கூடுதல் வெற்றி பெறலாம்.

    மதுரை

    எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன படிப்பு படிக்கலாம் என்று பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பொதுவாக மாணவர்கள் அவரவர் சொந்த விருப்பப் படியும், ஆர்வத்தின் அடிப் படையிலும் உயர் கல்விகள் தேர்ந்தெடுத்து படித்தால் அதிவேக முன்னேற்றம் அடையலாம். இருந்தாலும் அவர வர் ராசிப்படி ராசிக் கேற்ற குணங்கள், தன்மை அடிப்படையில் உயர் கல்வியை தேர்ந்ெதடுத்து படித்தால், மேலும் முன்னேற்றம் அடையலாம் என்பது ஜோதிட நம்பிக்கையாகும்.

    அதன் அடிப்படையில் மேஷ ராசிக்காரர்கள் கணிதம் எந்திரவியல் அரசியல் படிப்புகளையும், ரிஷப ராசியினர் கலை, இலக்கியம், ஜோதிடம் மருத்துவ துறையிலும், மிதுன ராசியினர் ஆசிரியர் பயிற்சி, பட்டய கணக்கு, ஆராய்ச்சி படிப்புகளையும், கடக ராசிக்காரர்கள் மருத்துவம், அறிவியல், நீர், கடல் சார்ந்த படிப்பு களை யும், சிம்ம ராசிக்காரர்கள் மின்னியல், சட்டம், அரசியல் சார்ந்த படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

    இதேபோல் கன்னி ராசிக்காரர்கள் ஆசிரியர் பயிற்சி , பட்டய கணக்கு, மனோ வியல் படிப்பு களையும், துலாம் ராசிக் காரர்கள் சட்டம் நீதித்துறை, வணிகம் சார்ந்த, படிப்பு களையும், விருச்சிகம் ராசிக் காரர்கள் நெருப்பு, மின்னி யல், பாதுகாப்பு சம்பந்தப் பட்ட துறைகளையும், தனுசு ராசிக்காரர்கள் சித்த மருத்துவம், ஜோதிடம், மனோவியல் துறைகளையும், மகரம் ராசிக்காரர்கள் ஆசிரியர் பயிற்சி, கணிதம், அரசியல் சார்ந்த படிப்பு களையும், கும்ப ராசிக் காரர்கள் மின்னியல், எந்திரவியல் சார்ந்த படிப்பு களையும், மீன ராசிக் காரர்கள் கலைத்துறை அரசியல் அறிவியல் மருத்துவம் சார்ந்த படிப்பு களையும் தேர்ந்தெடுத்தால் கூடுதல் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
    • தொழில்நுட்பத்தில் சிக்கலைத் தீர்க்கும் நுட்பங்கள் குறித்த படிப்புகள் உள்ளன.

    கணினியை மையப்படுத்தி, உருவாக்கப்பட்டிருக்கும் சில டிஜிட்டல் படிப்புகளையும், அதன் சிறப்புகளையும் இந்த தகவல் தொகுப்பில் தெரிந்து கொள்வோம். செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தகவல் தொழில்நுட்பம், வங்கிகள் என அனைத்து துறைகளிலும் வேலைகளிலும் இன்று ஆன்லைனில் ஒரே நேரத்தில் அனைவரும் கையாளக் கூடிய விஷயங்கள் அனைத்துக்கும் காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை படிப்புகள் உள்ளன. பட்டயப் படிப்பு முடித்தவர்கள், சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம்.

    நிரலாக்கம், இயற்கணிதம், புள்ளியியல், அல்காரிதம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிக்கலைத் தீர்க்கும் நுட்பங்கள் குறித்த படிப்புகளும் உள்ளன. பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் இதற்கென தனித்துவம் பெற்ற கல்லூரிகள் உள்ளன.

    டிஜிட்டல் மார்க்கெட்டிங்- எஸ்.இ.ஓ.டிஜிட்டல்

    மார்க்கெட்டிங் என்பது எஸ்.இ.ஓ. எனப்படும் சர்ச் என்ஜின் ஆப்டிமேஷன் பணியையும் உள்ளடக்கியது. தங்கள் நிறுவனங்களின் இணையதளங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன, கூகுள் தேடலில் முன்னுரிமை கிடைக்க வழிகள், சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்தப் படிப்பு உதவும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இது குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். கணினிமயமாக்கலில் எஸ்.இ.ஓ. பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. எனினும் புதிதாக பணியைத் தொடங்குபவர்கள் அதிக ஊதியத்தை எதிர்பார்க்க முடியாது.

    நெட்வொர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி

    எந்தவொரு துறை வளர்ச்சி அடைகிறதோ அந்த அளவுக்கு அச்சுறுத்தல்களும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் முழுக்க முழுக்க தொழில்நுட்பங்கள் மூலமாக இயங்கும் கணினியில் அதே மாதிரியான மற்றொரு தொழில்நுட்பம் மூலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் வரும். எனவே, வேறு யாரும் நமது தரவுகளை பயன்படுத்தாத வண்ணம் பாதுகாக்கவே நெட்ஒர்க் அண்ட் சைபர் செக்யூரிட்டி படிப்புகள் பயன்படுகின்றன.

    பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகள் முதல் ஆன்லைன் வணிகம் வரை அனைத்தும் இதில் அடங்கும். இதற்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளும் தற்போது அதிகம் இருக்கின்றன.

    மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட்

    ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் பொருட்டும், ஆன்லைன் தளங்களைப் போலவே செல்பேசிகளுக்கான செயலிகளும் அதிகரித்துவிட்டன. செல்பேசியில் பயன்படுத்துவதெற்கென பிரத்யேகமாக செயலிகள் வடிவமைக்கப்படுகின்றன.

    'அப்ளிகேஷன் டெவலப்பர்' எனும் இந்த பணியில் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., விண்டோஸ் போன்ற ஓ.எஸ். தொழில்நுட்பங்களில் இணையதளங்களுக்கான செயலிகளை வடிவைமைக்க வேண்டும்.

    இதற்காக சி, சி++, ஜாவா போன்ற கணினி மொழிகளை அறிந்திருக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான ஒரு பட்டப்படிப்பை முடித்த பின்னர் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த படிப்பை படிக்கலாம்.

    வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட்

    வணிக நிறுவனங்களுக்காகவோ தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவோ ஓர் இணையதளத்தை உருவாக்கும் வேலையே வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட். மொபைல் செயலிகளுக்கே அடித்தளமாக இருப்பவை இணையதளங்களே.

    சிறு, குறு தொழில் செய்வோரும் தங்கள் பொருள்களை ஆன்லைனில் விளம்பரப்படுத்த, விற்க இணையதளங்கள் அவசியம். எனவே, வருங்காலத்தில் வெப் டிசைனிங் அண்ட் டெவலப்மென்ட் படிப்பின் தேவை அதிகமாகவே இருக்கும். இதற்காக பி.எச்.பி, பைதான், ஏ.எஸ்.பி.நெட், ஜாவா, அடோப் போட்டோஷாப் போன்றவற்றைப் படிக்க வேண்டும். கணினி அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பு முடித்து இதனையும் சான்றிதழ் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.

    வி.எப்.எக்ஸ். அண்ட் அனிமேஷன்

    ஆன்லைன் கேமிங் துறை, 3-டி தொழில்நுட்பம் ஆகியவற்றில் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷனின் பயன்பாடு பெரிதும் முக்கியமானது. இதற்காக வி.எப்.எக்ஸ். மற்றும் அனிமேஷன் படிப்புகளை முடித்த பின்னர் மாயா, அடோப் போட்டோஷாப் மற்றும் சினிமா 4-டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது உங்கள் திறமைகளை வளர்க்க உதவும். இது தொடர்பான டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.

    கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்

    ஒரு மென்பொருள் இயங்க கணினி சரியான நிலையில் இருக்க வேண்டும். தரவுகளை செயல்படுத்தும் மதர்போர்டுகள், சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் என கணினியின் செயல்பாடுகளைக் கண்காணித்து சரி செய்யக் கூடிய பணியைச் செய்ய விரும்புபவர்கள், பட்டப்படிப்பை முடித்த பிறகு கணினி வன்பொருள் படிப்பை முடிக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை படிக்க வேண்டியதிருக்கும்.

    டேலி அண்ட் எம்.எஸ். ஆபீஸ்

    எம்.எஸ். ஆபீஸ் என்பது கணினியில் வேலை செய்வதற்கான அடிப்படை அறிவாகும். அதுபோன்று அக்கவுண்ட்ஸ் பணிகளைச் செய்வதற்கு அவசியம் டேலி படிக்க வேண்டும். அதிகபட்சமாக மூன்று மாதங்களில் கற்றுக்கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்த பின்னர் இந்த பயிற்சிகளையும் கற்றுக் கொண்டால் எளிதாக வேலை கிடைக்கும்.

    • ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம்.
    • மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும்.

    கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரு நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஜாதி, மத, இன, பொருளாதார வேறுபாடில்லாமல் சென்றடைய வேண்டும். இவ்வகையில் பார்க்கும்போது இந்தியா ஓரளவிற்கு முன்னேறி வருகிறது எனலாம். அதே நேரத்தில் இன்னமும்கூட இந்தியாவின் சில குக்கிராமங்களில் குழந்தைகள் பல கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது என்பதையும் நோக்க வேண்டும். உயர்கல்வி பற்றின விழிப்புணர்வு எல்லாத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும்.

    நம் கல்வித் திட்டம் ஒரு மனிதனை சுயசார்புடையவனாக வளர்க்க வேண்டும். இவ்வுலகில் சக மனிதர்களோடு வளைந்து கொடுத்து, அதாவது அனைவரின் கருத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதே நேரத்தில் நேர்மை தவறாமல் எப்போதும் மகிழ்வுடன் வாழ வழிகாட்ட வேண்டும். தனிமனித வளர்ச்சிக்கும் ஒரு நாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப, அரசியல் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பது கல்விதான். இந்த கல்வி சிறப்பாய் செம்மையாய் இருக்கும் பட்சத்தில் நாட்டின் வருங்காலம் ஒளிமயமாகும் என்பது வெளிப்படையான உண்மை.

    சர்வகலாசாலையில் பல பட்டங்களை பெறுவது மட்டுமே கல்வியல்ல என்பதை உணர்தல் வேண்டும். கற்றல் என்பது எந்த கணப்பொழுதும் நிகழக்கூடியது. எனவே நாம் எப்போதும் கற்பதற்கு தயாராய் இருக்க வேண்டும் என மாணவப் பருவத்திலேயே நமக்கு அறிவுறுத்தும்படி நம் பள்ளிக் கல்வி அமைய வேண்டும்.

    ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம். பிறகே ஆசிரியரின் பங்கு. சொல்லப் போனால் ஒரு மனிதனை செதுக்குவதில் மேற்படி இருவருக்குமே, இரண்டு சிற்பிகளுக்குமேதான், முக்கிய பங்கு. ஆனால் தற்போது நிலைமை குழந்தைகள் சரியானபடி பயிலாதபோது ஒருவர் மேல் மற்றவர் குறை சொல்லி தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். இந்நிலை முற்றாக மாறவேண்டும். புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்து விடாமல் புத்திசாலி என நம்பும் பலரின் அறியாமை மாற வேண்டும்.

    மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு செயல்முறை படுத்தும்போது அவரவரின் புத்துருவாக்கத்திற்கு அதில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்விதான் முதுகெலும்புள்ள, சுயசிந்தனையை வளர்க்கக்கூடிய ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடக்கூடிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய மனிதனை உருவாக்கும். ஒவ்வொரு மனிதனிடமும் அறிய திறமைகள் பொதிந்துள்ளன. அதை வெளிக்கொண்டு வருபவர்தான் உண்மையான ஆசிரியர் என்கிறார் விவேகானந்தர் எனவே நன்றாக படிக்கும் மாணவர்களை மற்றும் படித்த பெற்றோர்களின் குழந்தைகளை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி காண்பிப்பதில் ஆசிரியருக்கு என்ன பங்கு இருக்கிறது. எனவே கல்வி கற்க சிரமப்படும் மாணவர்களை நன்கு பயிற்றுவித்து அவர்களை நன்கு தேர்ச்சி பெற செய்வதில்தான் ஒரு ஆசிரியரின் வெற்றி இருக்கிறது என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர வேண்டும்.

    முழுமையான கல்வி என்பது ஒருவனுக்கு முதலில் தான் என்கிற தன் முனைப்பை அழிக்கும். ஜாதி, மத பேதங்களை அவனுள்லிருந்து அறவே நீக்கும். இந்தியா என் நாடு என்பதைவிட இந்த உலகம் என் வீடு எனும் பரந்த மனப்பான்மையை ஏற்படுத்தும். பல புத்துருவாக்கங்களுக்கான வீரிய வித்துக்களை விதைப்பவனாக மாற்றும். இப்படிப்பட்ட கல்வியை கொணர்வது நம் அனைவருடைய சமூக பொறுப்பு.

    • இந்தத் தேர்வை எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
    • கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும்.

    ரஷியா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஆங்கிலப் புலமை ஒரு பொருட்டல்ல. கல்விக்கும் தொழிலுக்கும் தாய்மொழியே அவர்களுக்குப் போதுமானதாக உள்ளது. இந்திய நிலைமை அப்படியல்ல. இங்கே ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழி. பல மொழி பேசும் மக்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், ஆங்கிலமே வெவ்வேறு மொழி பேசும் மக்களை இணைக்கிறது.

    அத்துடன், இந்தியாவில் இருந்து படிப்புக்காகவோ வேலைக்காகவோ வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகம் உள்ளது. அதற்குக் கல்வி அறிவும் தொழில் அறிவும் மட்டும் போதாது. ஆங்கில மொழிப் புலமையை நிரூபிக்கும் வண்ணம் ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். அதனால்தான், ஓராண்டுக்குச் சுமார் 30 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.

    சர்வதேச அளவில் ஒருவரின் ஆங்கில மொழிப் புலமையைப் பரிசோதித்து மதிப்பீடு செய்யும் அமைப்பே இந்த ஐ.இ.எல்.டி.எஸ். இந்த மதிப்பீடின்றி மேலை நாட்டுக் கல்லூரிகளில் நுழையவே முடியாது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

    கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என்று இந்தத் தேர்வு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பேசுதல் தவிர்த்து மற்ற மூன்று பகுதி களுக்கான தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறும்.

    கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும். அந்தப் பகுதியில் நான்கு ஒலிப்பதிவுகள் ஒலிபரப்பப்படும். அந்த ஒலிப்பதிவுகளில் நடைபெறும் உரையாடல்களை சார்ந்து கேள்விகள் கேட்கப்படும்.

    வாசிப்புப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும். நீண்ட கட்டுரையும் குறுகிய கட்டுரையும் வாசிப்பதற்கு கொடுக்கப்படும். பின்பு அதிலிருந்து 40 கேள்விகள் கேட்கப்படும். உங்கள் கிரகிக்கும் திறனையும் வாசிக்கும் தன்மையையும் அந்தக் கட்டுரையில் பொதிந்திருக்கும் கருத்துகளை நீங்கள் புரிந்துகொள்ளும் பாங்கையும் பரிசோதிக்கும் வண்ணம் அந்தக் கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    எழுதுதல் பகுதியில் உங்கள் இலக்கணத்திறனும் நீங்கள் பயன்படுத்தும் சொற்களின் செறிவும் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும்.

    பேச்சுப் பகுதிக்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் தரப்படும். இந்தத் தேர்வில் மட்டும்தான் நீங்கள் தேர்வாளரை எதிர்கொள்வீர்கள்.

    இந்த நான்கு பகுதிகளுக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த நான்கு பகுதிகளில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரியே உங்கள் ஒட்டுமொத்த மதிப்பெண். அந்தச் சராசரி ஏழுக்கு மேல் இருந்தால்தான், நல்ல பல்கலைக்கழகத்தில் உங்களால் சேர முடியும்.

    கூச்சம் வேண்டாம்

    ஆங்கிலத்தில் பேசும்போது, சொல்ல வரும் கருத்தில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். தொடக்கத்தில் மொழியின் இலக்கணத்திலோ உச்சரிப்பிலோ கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலத்தில் பேசும்போது எழும் கூச்சத்தை/அச்சத்தைக் கடப்பதற்கு இதை முயன்றாலே போதும். மொழி என்பது வெறும் ஊடகமே. அறிவுக்கும் மொழியின் புலமைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இந்த அடிப்படை புரிதல் இருக்குமேயானால், ஆங்கிலப் புலமை நமக்கு எளிதில் கைகூடிவிடும்.

    ×