search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்த்து"

    • தி.மு.க. மாணவரணி அமைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் வாழ்த்து பெற்றனர்.
    • துணை அமைப்பாளர்களாக மூவேந்திரன், மருதுபாண்டியன், ஜெய்லானி, கண்ணன், செந்தமிழ்அரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    தி.மு.க. மதுரை தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாணவரணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பாளராக பாண்டிமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக மூவேந்திரன், மருதுபாண்டியன், ஜெய்லானி, கண்ணன், செந்தமிழ்அரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட செயலாளர் மாணவரணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமன், மகிழன், மாநில விவசாய அணி துணைசெயலாளர் கொடிசந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், ஒன்றிய செயலாளா்கள் ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், தனசேகரன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சிதலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன், நகர துணைசெயலாளர் செல்வம், இளைஞரணி அமைப்பாளர் விமல், துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ஜெகதீஷ், பேரூர்செயலாளர் வருசை முகமது, பிரதிநிதிகள் ரஞ்சித்குமார், தொ.மு.ச. முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது.
    • சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.

    கடலூர்:

    மகளிர் போலீஸ் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து கோடியக்கரை வரை மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு போலீஸ் துறையில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட போலீசார் பாய்மர படகில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தக் குழுவினர் சென்னையில் இருந்து கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.

    இப்பயணக்குழு இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாய்மர படகு பயணத்தை கடலூர் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ரோட்டரி சங்க பிறையோன், கருணாகரன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மாறுபாடற்ற உறுதியான நிலைப்பாடுகளால் லல்லுபிரசாத் ஒரு சமரசமற்ற சமூகநீதிப் போராளியாகத் திகழ்கிறார்.
    • பல்லாண்டுகள் அவர் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வட இந்தியாவில் மண்டல் அரசியலை வலுப்படுத்த வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதுபெரும் அரசியல் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவருமான லல்லுபிரசாத் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.

    மனிதர்களின் மரியாதைக்கு (இஜ்ஜத்) அவர் அளித்த முக்கியத்துவமானது அவரது அரசியலை தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்துக்கு மிக நெருக்கமானதாக்குகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடானாலும், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காகக் குரல் கொடுப்பதானாலும், மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதானாலும் தாம் எடுத்த மாறுபாடற்ற உறுதியான நிலைப்பாடுகளால் லல்லுபிரசாத் ஒரு சமரசமற்ற சமூகநீதிப் போராளியாகத் திகழ்கிறார்.

    அவரது 76-வது பிறந்தநாளில், மேலும் பல்லாண்டுகள் அவர் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வட இந்தியாவில் மண்டல் அரசியலை வலுப்படுத்த வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
    • குமாவத் தனது வலைதள பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை’. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் ஒவ்வொரு பதிவும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.

    இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

    இவற்றை செதுக்கிய சிற்பி மூர்த்திகர் நரேஷ் குமாவத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்தி உள்ளார். குமாவத் தனது வலைதள பதிவில், 'புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை'. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவை ஆனந்த் மகிந்திரா மறு பதிவு செய்து, 'அற்புதமான பணி, அற்புதமான மரியாதை, வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். 'கம்பீரமான கலை படைப்பு' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பரமக்குடி யாதவா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.

    பரமக்குடி

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ-496 மதிப்பெண்களும், மாணவர் அபிஷேக்-494 மதிப்பெண்களும் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்விக்குழு சார்பில் பரிசு வழங்கி பாராட்டினர்.

    இதில் கல்வி குழுத் தலைவர் மலேசியாபாண்டியன், கல்விக்குழு செயலாளரும், தாளாளருமான அழகர்சாமி, பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் பாஸ்கரன், துணைச் செயலாளர் செல்லக்காரி, கல்வி குழு உறுப்பினர்கள் போஸ், சந்திரசேகரன், ஹரிகிருஷ்ணன், முதல்வர் பூமாதேவி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.

    • ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள்.
    • மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்!

    உங்களுடைய அன்பு குழந்தை தூங்கும்போது அருகில் சென்று அதிக ஓசை இன்றி ஆனால் திருத்தமாக கீழ்க்கண்ட வாசகத்தை சொல்லுங்கள்.

    *என் மகனே(மகளே)! நீ வாழ்க!

    *நீ நல்ல முயற்சி உடையவனாக இருக்கிறாய்!

    *உடல் நலம் மிக்கவனாக இருக்கிறாய்!

    *நல்ல சூழ்நிலை பெற்றவனாக இருக்கிறாய்!

    *நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்!

    *நன்கு உழைப்பவனாக நீ வளர்கின்றாய்!

    *வாழ்வில் வெற்றி பெறுகின்ற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கின்றாய்!

    *நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பி இருக்கிறது!

    *உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது!

    *நீ அருளாற்றல் பெற்றவனாக நல்ல அறிவுடனும் நலத்துடனும் வாழ்க வளமுடன்!

    என அனுதினமும் அவனை வாழ்த்துங்கள்.

    அவன் ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள். அவனது ஆல்ஃபா மனநிலை அதனை ஏற்று, அவனது ஆழ்மனம் தூண்டப்படும். ஆழ்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக அவனுள் மாற்றங்கள் நிகழும். உடன்பாட்டுச் சூழல் தோன்றும். இதை சொல்லச் சொல்ல உங்கள் கண்ணோட்டமும் மாறும். அவன் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும். உங்கள் பேச்சும், தொணியுமே மாறும், சூழல் மாறும்! எண்ண அலைகள் உங்கள் குழந்தையை தாக்குவதற்கு பதிலாக, அவனை தழுவி அன்பு செய்யும்! மனம் மாறும்! மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்! வாழ்த்தி வாழ்த்தி பாருங்கள் ! வளத்தை சேருங்கள் !

    - வேதாத்திரி மகரிசி     

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சிவகிரி டாக்டர் செண்பகவிநாயகம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
    • நிகழ்ச்சியின்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    சிவகிரி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை. தலைமை கழக நிர்வாகிகளாக புதிதாக நியமனம் செய்யப்பட்ட தி.மு.க. மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் சிவகிரி டாக்டர் செண்பகவிநாயகம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

    இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி., தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில மருத்துவ அணி தலைவர் மருத்துவர் கனிமொழி, என்.வி.என்.சோமு, மாநில மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பாராட்டினார்.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம்
    • ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.


    கடலூர்:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம் . ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று விருத்தாசலம் ஆலடி ரோட்டில் அமைந்துள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து உற்சாகத்துடன் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் .

    • ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
    • பசும்பொன் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பிருந்து அறநெறியுடன் பிறருக்கு ஈதல் வேண்டும் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் போதித்த நன்நெறிகளை கடைபிடித்து ரம்ஜான் பெருநாளை திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். அனை வருக்கும் எனது சார்பிலும், அ.தி.ம.மு.க. சார்பிலும் ரம்ஜான் வாழ்த்துக்களை உவகையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திராவிட மண்ணில் மத நல்லிணக்கத்தோடு திராவிட இயக்கம் ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகிற சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து சமய நல்லிணக்கத்தை பேணிக்காத்து வருவது திராவிட இயக்கங்களின் தலையாய கடமையாகும்.தமிழ் மண்ணில் திராவிட மாடல் அரசை திறம்பட நடத்தி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து வருவதோடு குறிப்பாக சிறுபான்மை மக்களான கிறிஸ்துவ, இஸ்லாமிய, பழங்குடி, பட்டியல் இன மக்களை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு அரணாக, கேடயமாக, பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகிறது,

    சாதி, சமய மோதல்களை தவிர்த்து ஒன்றுபட்ட திராவிட சமூகமாக சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, மனிதநேயம் மலர்ந்திட சபதமேற்று ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டா டுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முஸ்லிம்களுக்கு தொழுகை விரிப்பை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா, ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரதவீதியில் உள்ள சிக்கந்தர்தர்ஹா பள்ளி வாசல் நிர்வாகிகளான சீனியர் ஒஜீர்கான், செயலாளர் ஆரிப்கான், துணைச் செயலாளர் மாபூப்பாட்ஷா, ஆகியோர் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தொழுகை விரிப்புகள் மற்றும் மலைமீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்ஹாவின் புகைப்படத்தை யும் ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றியசெயலாளர் நிலையூர்முருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கவிஞர் ப.மோகன்தாஸ், கலைப்பிரிவு இணைச்செய லாளர்கள் பாலகிருஷ்ணன், சவுந்தரம், சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர் அலி மற்றும் சாகுல்ஹமிது, இளைஞரணி சேக்முகமது நஜீர், பைசல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • எவரெஸ்ட் சிகரம் ஏறும் பெண்ணுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
    • தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதி பெற்றுள்ள இவருக்கு, மாணிக்கம் தாகூர்

    எம்.பி. வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    33 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழ்ப்பெண் என்ற பெருமையை பெற்றுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ளது.

    கடந்த மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்பத்தூர் அருகேயுள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 விநாடியில் இறங்கி சாதனை படைத்தீர்கள்.

    இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக காஷ்மீரில் லடாக் பகுதியில் சுமார் 5,500 அடி உயர பனிமலை உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளீர்கள்.

    தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றிருக்கும் தங்களை வாழ்த்துகிறேன். தங்களின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.

    இன்று 10-வது நாள் மலையேறும் பயணம் மேற்கொண்டுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலை வாழ்த்துவார் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டியில் கூறியுள்ளார்.
    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் முறையூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்  பெரியகருப்பன் வழங்கினார்.

    இதில் தமிழரசி எம்.எல்.ஏ. பேசுகையில், பெண் பிள்ளைகளை பெற்றெடுப்பதில் நீங்கள் தயக்கம் காட்டினால் என்றால் ஆண்-பெண் விகிதாச்சாரம் என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றம் பெண் பிள்ளைகள் இல்லை என்று சொன்னால் ஆண்கள் திருமணம் முடிக்கும் போது பெண்களே இருக்கமாட்டார்கள்.   ஆகையால் பெண் பிள்ளை களை பெற்றெடுப்பதில் தயக்கம் காட்டவேண்டாம் என்றார்.

    பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாராட்ட வேண்டும் என்பதற்காக முதலமைச்சரோ, அமைச்சர்களோ செயல்பட தேவையில்லை. மக்களுடைய தேவைகளை உணர்ந்து அந்த தேவைகளை பூர்த்தி செய்து அதன் மூலம் மக்கள் பாராட்டினால் அதுதான் நல்ல அரசுக்கு அடையாளம்.  இப்படிப்பட்ட   நல்ல அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலையே வாழ்த்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணைஇயக்குநா் ராம் பிரகாஷ், குடும்ப நலத்துறை இணை இயக்குனர் முருகேஸ்வரி, பிரான்மலை ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவ அதிகாரி நபீஸா பானு, முறையூர் ஊராட்சி மன்ற தலைவர்  சுரேஷ், சிங்கம்புணரி ஒன்றியச்செயலாளர் பூமிநாதன், சிவபுரி சேகர், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, மருத்துவர்கள் பரணிதரன், ராஜ்குமார், மற்றும் வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×