search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறைமுகம்"

    • சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவைச் சேர்ந்த மலையாள மக்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து கேரள கடல்சார் வாரியம் விழிஞ்சம், கொல்லம், பேப்பூர் மற்றும் அழிக்கால் துறை முகங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கப்பல் சேவைகளை இயக்க முடிவு செய்தது. இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.

    அதன்பேரில் கப்பல் சேவைகளை தொடங்க 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கேரள கடல்சார் வாரியத் தலைவர் என்.எஸ்.பிள்ளை தலைமையில் கொச்சியில் நாளை (27-ந் தேதி) முதல் கட்ட விவாதம் நடைபெற உள்ளது. இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டால், பயண நேரம் அதிகரித்தாலும், அதிக சரக்குகளை கொண்டு செல்லமுடியும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம் பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிரா மங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி பரபரப்பாக காணப்பட்டு வரும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.

    அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன் விற்பனை தொடங்கியது. வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் இன்று 450 ரூபாய்க்கும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், வஞ்சிரம் மீன் 800 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கானாங்கத்தை கிலோ 200 ரூபாய்க்கும், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் நெத்திலி மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை அதிகரித்து காணப்பட்டாலும் விலை யை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    • பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன.

    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகி சாம்பல் ஆகின. இந்த தீ விபத்திற்கு இளம் யூடியூபர் தான் காரணம் என்றும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சிலருடன் பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், யூடியூபருக்கு எதிரான சிலர் அவருக்கு சொந்தமான படகு ஒன்றில் தீ வைத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படகு தீப்பிடித்து எரிவதை பார்த்த உள்ளூர் வாசிகள், அதன் நங்கூர கயிறை அறுத்து நீரில் தள்ளினர்.

    எனினும், பலத்து காற்று வீசியதால் தீப்பிடித்த படகு மற்ற படகுகளுடன் உரசியதால் கிட்டத்தட்ட 40-க்கும் அதிக படகுகள் சேதமடைந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட படகுகள் அனைத்திலும் டீசல் முழுமையாக நிரப்பப்பட்டும், கடலில் சமைக்க பயன்படுத்துவதற்காக கியாஸ் சிலிண்டர்களும் வைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக தீ மளமளவென பரவியது.

    தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தது. இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சீதிரி அபல்ராஜூ தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்கு பிறகு பேசிய அமைச்சர், "துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன. 9 படகுகள் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு படகுக்கான முழு தொகையில் இருந்து 80 சதவீதம் வரை இழப்பீடாக படகுகளின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டு விடும். இது முதலமைச்சரின் முடிவு."

    "இந்த துறைமுகத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ. 150 கோடியை ஒதுக்கீடு செய்தோம், இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துறைமுகம் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது வரை எந்த அரசாங்கமும் இந்த துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது அரசாங்கம் தான் இதனை நவீன வசதிகளுடன் மேம்படுத்த நிதி ஒதுக்கி இருக்கிறது," என்று தெரிவித்தார். 

    • நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    தெற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதித்தனர்.

    இதனால் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வேதாரணியம், ஆற்காட்டுதுறை உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

    மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வா தாரம் பாதித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    மீன் வரத்து இல்லாததால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.
    • மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி பெர்த்தில் கண்டெய்னர் லாரியை டிரைவர் குமரேசன் என்பவர் இன்று அதிகாலை ஓட்டி சென்றார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது. உடனடியாக அங்கிருந்த துறைமுக பணியாளர்கள், டிரைவர் குமரேசனை மீட்டனர். காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாலை 6 மணியளவில் படகுகள் நிற்கும் பகுதியில் அவரது உடல் மிதந்துள்ளது
    • பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும்

    குளச்சல் :

    நாகர்கோவில் கோட்டார் இளங்கடையை சேர்ந்தவர் தாசன். இவரது மகன் சகாய சுரேஷ் (வயது 35).

    இவர் முட்டம் தனியார் மீன்பிடித் துறைமுகம் அருகில் உள்ள ஒரு மரைன் சர்வீஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.பிணமாக மிதந்தார்திருமண மாகாத சகாய சுரேஷ், சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் படகுகள் நிற்கும் பகுதியில் அவரது உடல் மிதந்துள்ளது. இதனை பார்த்த துறைமுக காவலர் சந்திரன், குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சகாய சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் சகாய சுரேசுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததும், அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், விசைப்படகுகளில் வேலைக்கு சென்ற நேரத்தில் வலிப்பு வந்து தவறி கடலில் விழுந்ததில் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை.
    • பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ள சின்னமுட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல்பங்கு அமைக்கு ம்பணிதொடங்கியது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் சின்னமுட்டம் புனிததோமையார் ஆலயம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.

    போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதைத் தொடர்ந்து இன்று 11- வது நாளாக பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தெருக்களில் இன்றும் 3-வது நாளாக கருப்புக் கொடி கட்டப்பட்டு உள்ளது.இதனால்அங்கு பெரும்பரபரப்பும் பதட்ட மும்நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு இன்றும் ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.

    போராட்டத்தில ஈடு பட்டுள்ள மீனவர்க ளுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு
    • சமரச பேச்சுவார்த்தையால் நேற்று மாலை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சின்ன முட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கு அந்த பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் புனித தோமையார் ஆலயம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்ட னர். அவர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் நேற்று மாலை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக சின்ன முட்டம் புனித தோமையார் ஆலயம் முன்பு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பெட்ரோல் பங்க் கட்டு மான பணிகளை தடுத்து நிறுத்த கோரி அவர்கள் கோஷமிட்டனர். இதனால் மீண்டும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து அங்கு இன்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களு டன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த வாரத்தை தொடர்ந்து ஞாயிற்றுகிழமையான இன்றும் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது.
    • வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    கடந்த வாரத்தை தொடர்ந்து ஞாயிற்றுகிழமையான இன்றும் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மீன் வரத்து தொடர்ந்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து விற்கப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் இன்று 450 முதல் 500 ரூபாய் வரை விற்கப்பட்டது.

    சங்கரா மீன் வழக்கமாக 200 முதல் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 400 முதல் 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ரூபாய் 150-க்கு விற்கப்பட்ட ஓரவகை மீன் 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வச்சிரா மீன் 800 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பன்னி சாத்தான் மீன் வழக்கமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 600 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல் நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 200 ரூபாய்க்கும், கானாங்கத்தை மீன் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக விற்பனை நடந்தாலும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    • மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது
    • பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை )கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் இன்று 500 முதல் 550 ரூபாய் வரை விற்கப்பட்டது.

    பன்னி சாத்தான் மீன் வழக்கமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 600 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 200 ரூபாய்க்கும், கானாங்கத்தை மீன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். 

    • துறைமுகம் அமைத்து தொண்டி நவீனப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயங்கள் உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள பழஞ் சிறப்பும், வரலாற்று பெருமையும் வாய்ந்த ஊர் தொண்டி. சோழ நாட்டிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையான சேது மார்க்கத்தில் ராமேசுவரம் செல்லும் பண்டைய பெரு வழியில் இது அமைந்துள்ளது. கடலால் துண்டிக்கப்பட்ட இடம் என்ற பொருளில் தொண்டி என்று அழைக்கப்படுகிறது. முதலாம் ராஜராஜ சோழன் பெயரால் இது பவித்திர மாணிக்கப்பட்டினம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

    தொண்டியில் உள்ள பாண்டியர் கல்வெட்டுகளில் இது ''தொண்டியான பவித்திர மாணிக்கப் பட்டினம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க காலத்தில் கேரளாவில் அரபி கடற்கரையில் அமைந்த தொண்டி என்ற பட்டினம் சங்க இலக்கியங்களிலும் வெளி நாட்டார் குறிப்பு களிலும் குறிப்பிடப்படும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சேரமன்னருக்குரிய துறைமுக பட்டினமாகும்.

    ஆனால் வங்க கடற் கரையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த தொண்டி சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி 400-ல் இருந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த துறைமுக நகராக விளங்கி யுள்ளது. இலங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் அகில், துகில், ஆரம், கற்பூரம் முதலிய பொருட்கள் தொண்டியில் வணிக சரக்குகளாக வந்து இறங்கிய தாகவும், அவற்றின் வாசம் கொண்டல் என்னும் கிழக்கு காற்றால் மதுரை வரை வந்து சேர்ந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது.

    கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் நின்றசீர் நெடுமாறனை (கூன்பாண்டியன்) புகழ்ந்து பாடிய பாண்டிக் கோவையில் இது பாண்டிய மன்னருக்குரிய தொண்டி என்ற பெயரில் "மீனவன் தொண்டி", "மாறன் தொண்டி" என்று குறிப்பிடப் படுகிறது. யாப்பருங்கலக் காரிகை என்ற நூலில் இது "வரகுணன் தொண்டி" என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் நந்திவர்மனை பற்றிய நந்திக்கலம்பகம் என்ற இலக்கியத்திலும் இது பாண்டியருக்கு உரியதாக குறிப்பிடப்படுகிறது. வணிக முக்கியத்துவமும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்த இத்துறை முகபட்டினத்தைக் கைப்பற்றுவதற்கு கி.பி 12-ம் நூற்றாண்டில் பாண்டியர் சிங்கள மன்னர்கள், சோழர் ஆகியோருக்கிடையே போர்கள் நடைபெற்றதாக மகாவம்சமும் சோழரின் ஆர்ப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கின்றன.

    இத்தனை சிறப்பு வாய்ந்த தொண்டியின் தொன்மையை அறியும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1980-ல் தொண்டியின் வடபுறமுள்ள தொண்டியம்மன் கோவில் மேட்டில் அகழாய்வு செய்தது. இப்பகுதியை பாண்டிய மன்னர்கள் இடைக்கால பாண்டிய நாட்டில் தொண்டி மிகச்சிறந்த துறைமுகமாக விளங்கியதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டியது.

    மேலும் இந்த ஆய்வில் தொண்டி சீன நாட்டோடு தொடர்பு கொண்டிருந்ததை வெளிப்படுத்தும் சீனிட்டுச் செலான் வகை பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் முதலாம் ராஜராஜன், நாயக்கர் கால காசுகளும் கிடைத்தன. தொண்டியில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு பிற்காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிற்கால பாண்டியர் கல்வெட்டு இதனை நகரீசுவரர் கோவில் என்று குறிப்பிடுகிறது.

    மேலும் தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளையில் பாண்டிய மன்னன் பெயரில் அழைக் கப்பட்ட 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது. இதனை தெரிவிக்கும் வகையில் பாறைக்கல்வெட்டும் உள்ளது. இக்கோவிலை ரெத்தினம் பிள்ளை வகையறா வாசு குடும்பத்தினர் இன்றும் பராமரித்து வருகின்றனர். மேலும் இது போல கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயங்கள் பல உள்ளது.

    தொண்டிக்கு வடக்கே பழம்பெருமை வாய்ந்த காவல் தெய்வமான தொண்டியம்மன் கோவில் உள்ளது. தொண்டியில் உள்ள குடிநீர் குளமான கைக்குளவர் குளம் தற்போது கக்கிளான் குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் வீரபாண்டியன்

    (கி.பி.1198) கல்வெட்டு "காளி கணத்தான்குளம்" என்ற பெயரில் வணிக வீரர் தொடர்பால் இக்குளம் தோற்றுவிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. இக்குளத்தைச் சீர்திருத்தி இதற்குரிய மடையை மருது சேர்வைகாரர் செய்வித்துள்ளதை இங்குள்ள கி.பி.1795 -ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று தெரி விக்கிறது.நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செட்டி நாட்டு பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை தொண்டி துறைமுகம் வழியாகவே கொண்டு வந்துள்ளனர். தூத்துக்குடியில் துறைமுகம் வந்த பின் புகை வண்டி, ெரயில் பாதை என வளர்ச்சியடைந்த பின் தொண்டி துறைமுகம் தனது வரலாற்றை இழந்து தற்போது மீன்பிடி கிராமம் போல் ஆனது. மேலும் இங்கு கப்பல்படையும் இருந்தது.

    இங்கு கடலியல் மற்றும் கடலோரவியல் கல்லூரி இருந்தும் இல்லாதது போல் உள்ளது. ஆனால் கட்டண கடற்கரை பூங்கா உள்ளது. அரசு பொது மருத்துவமனை, அரசு நூலக கட்டிடம், அரசு போக்குவரத்து பணி மனை என எல்லாம் இப்பகுதி மக்களின் கனவாகவே உள்ளது. அரசும், தொல்லியல் துறையும், சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் பழமை சிறப்பு வாய்ந்த தொண்டியை பழமை மாறாமல் துறைமுகமாக்கி, நவீனப்படுத்தப்படுமா? என்பதை இந்த பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

    • இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது.
    • சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.

    கடலூர்:

    மகளிர் போலீஸ் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து கோடியக்கரை வரை மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு போலீஸ் துறையில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட போலீசார் பாய்மர படகில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தக் குழுவினர் சென்னையில் இருந்து கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.

    இப்பயணக்குழு இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாய்மர படகு பயணத்தை கடலூர் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ரோட்டரி சங்க பிறையோன், கருணாகரன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×