search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவரணி"

    • தி.மு.க. மாணவரணி அமைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் வாழ்த்து பெற்றனர்.
    • துணை அமைப்பாளர்களாக மூவேந்திரன், மருதுபாண்டியன், ஜெய்லானி, கண்ணன், செந்தமிழ்அரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    தி.மு.க. மதுரை தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாணவரணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பாளராக பாண்டிமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக மூவேந்திரன், மருதுபாண்டியன், ஜெய்லானி, கண்ணன், செந்தமிழ்அரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட செயலாளர் மாணவரணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமன், மகிழன், மாநில விவசாய அணி துணைசெயலாளர் கொடிசந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், ஒன்றிய செயலாளா்கள் ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், தனசேகரன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சிதலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன், நகர துணைசெயலாளர் செல்வம், இளைஞரணி அமைப்பாளர் விமல், துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ஜெகதீஷ், பேரூர்செயலாளர் வருசை முகமது, பிரதிநிதிகள் ரஞ்சித்குமார், தொ.மு.ச. முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் பாசிசத்தை நுழைய விடாத வகையில் மாணவரணி மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
    • மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் மருதுபாண்டி தலைமையில் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் மாணவரணி, இளைஞர் அணிகளுடன் இணைந்து செயல்படுகிறார். இந்தி திணிப்பு போராட்டத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது தி.மு.க. மாணவர் அணி தான். அப்போது மாணவ

    ரணியில் இருந்தவர்கள் தான் தற்போது அரசியலில் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளனர்.

    கல்லூரிகளில் மாணவரணியில் இருப்பவர்கள் திராவிட மாடலை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் உணர்வு பூர்வமாக இந்தியை எதிர்க்கும் ஒரே இயக்கம் தி.மு.க. மட்டுமே ஆகும். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்க இருக்கிறார்.

    பாசிசத்தை தமிழகத்தில் நுழைய விடாத வகையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சிறக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதல் மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,வழக்கறிஞர் கலாநிதி, மாணவர் அணி இணை, துணை அமைப்பாளர்கள் அதலை செந்தில்குமார், பூவை ஜெரால்டு, மண்ணை சோழராஜன், சேலம் தமிழரசன், உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×