search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்த்து"

    • மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்
    • 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் விசாலாட்சி பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பெத்தலகம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வெளியூருக்கு செல்கின்றனர்.

    முன்னதாக அவர்கள் நீலகிரி எம்.பி ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பிருமான விசாலாட்சி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் திரண்டு வந்தனர்
    • பொன்னாடை அணிவித்து ஆசிபெற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கோவைக்கு புறப்பட்டு வந்தனர்.

    அங்கு அவர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    இதில் முன்னாள் எம்.பி கே.ஆர்.அர்ஜுணன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்டசெயலாளர் அக்கீம்பாபு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் மாதன், குந்தா கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எஸ்.வசந்தராஜன், இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தருமபுரியில் உரிமைத் தொகை பெற்ற மகளிருக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து மடல் அனுப்பும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
    • வருவாய்த்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 15 ந்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மூன்று லட்சத்து 92 ஆயிரம் மனுக்கள் மகளிரிடத்தில் பெறப்பட்டது. இதில் தகுதி உள்ளவருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை பெற்ற மகளிருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து கடிதம் அவர்களது முகவரிக்கு அனுப்புவதாக அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிருக்கு முதலமைச்சர் கையொப்பமிட்ட வாழ்த்து மடல் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையைச் சார்ந்த கிராம நிர்வாக உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மகளிருக்கு வாழ்த்து மடல் அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மகளிர் உரிமை தொகை பெற்றவர்களுக்கான வாழ்த்து மடல், தபால் மூலமாக அவர்களது முகவரிக்கு வீடுகளுக்கே அனுப்பும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. 

    • மேலூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சியம்மன் கோவிலில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கல்யாண சுந்த ரேஸ்வரர் காமாட்சியம்மன் (சிவன் கோவில்) அறங்காவலர் குழு தலைவராக, முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் குழு உறுப்பினர்களாக காந்திஜி பூங்காவை சேர்ந்த ஸ்தபதி மகேந்திரன், மேலூர் மலம்பட்டி விஜயபாண்டியன், மற்றும் முன்னாள் சொக்கம்பட்டி கவுன்சிலர் கலையரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாள பட்டி பேரூ ராட்சி தலைவர் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலும் மேலும் யூனியன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி, ராஜராஜன், உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி, அர்ச்சகர் தட்சிணா மூர்த்தி, பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    நீலகிரி மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி தலைவராக ஜாகிர் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி தலைவராக தலைமை கழக பேச்சாளரும், நகரமன்ற உறுப்பினருமான ஜாகிர் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

    இவருடன் துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் மாவட்டசெயலாளர் பா.மு.முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் ரவிக்குமார், செயற்குழு உறுப்பினர் முஸ்தபா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

    • அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து பெற்றனர்.
    • அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக எஸ்.என்.பாபுராஜ் நியமிக்கப் பட்டுள்ளார்.

    சிவகாசி

    விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதியதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாள ரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பரிந்துரையின் பேரில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகி களை நியனம் செய்துள்ளார்.

    அதன்படி அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக எஸ்.என்.பாபுராஜ் நியமிக்கப் பட்டுள்ளார். இதேபோன்று விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிர மணியன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பலராம் நியமிக்கப்பட்டு உள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பிலிப்வாசு, மாவட்ட மாணவரணி செய லாளராக ராஜபாளையம் ராஜ்குமார், மாவட்ட கலைப்பிரிவு செயலாளராக என்.சி.ஓ.காலனி மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினராக ராஜபாளையம் ஜான்சன், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளராக சையது சுல்தான், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்களாக வெற்றி, கலைச்செல்வி, மாவட்ட விவசாய பிரிவு பொருளா ளராக ராஜபாளையம் சவுந்தரராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக திருத்தங்கள்

    முருகேசன். பழனிமுரு கன். ராஜபாளையம் பால சுப்பிரமணியராஜா. சிவகாசி எஸ்.புதுப்பட்டி ஈஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளராக செண்பக வேல், காசிராஜ், கருப்பசாமி, காமராஜ், பழனிவேல், சோலைமலை, குருசாமி, மாவட்ட பொரு ளாளராக கோட்டைபாண்டி. மாவட்ட புரட்சி தலைவி பேரவை தலைவராக கமல்குமார், துணைத்தலைவராக காசி, மாவட்ட இணைச் செயலா ளராக முத்துக்குமார், மணி கண்டன், மாவட்ட துணைச் செயலாளராக தங்கப் பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை தலைவர்களாக சரவணன், தினேஷ்பாபு, இணைச் செயலாளராக சிவா, மாவட்ட பொருளாள ராக வடிவேல் சித்தன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவராக ராஜ பாளையம் சுபா, துணைச் செயலாளராக ராஜபாளை யம் கனகலட்சுமி. விஜயா, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளராக ஜெயராம், கவுதமன், மாவட்ட பொருளாளராக மாரிக்கனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவராக லாசர் இணைச் செயலாளராக முருகன் துணைச் செயலா ளராக குமார், வெள்ளிராஜ், மாவட்ட பொருளாளராக வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக வெற்றி, கலைச்செல்வி, மாவட்ட சிறுபான்மை பிரிவு நலப் பிரிவு துணைத் தலைவர்க ளாக மிக்கேல் ராஜ், சாகுல் ஹமீது, இணைச் செயலா ளர்களாக முகமது ஆசிமிக்கேல் ராஜ், துணைச் செயலாளர் ஜலில் முகமது காலிப். மாவட்ட பொரு ளாளராக ஹிதாயத்துல்லா, மாவட்ட இலக்கிய அணி தலைவராக மரியதாஸ் இ ணைச் செயலாளராக செந்தில்குமரன் துணை செயலாளராக ராஜேஷ் கண்ணா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவராக ஞானகிரி மாவட்ட பொரு ளாளராக முத்துவிஜயன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக விக்னேஷ் துணைச் செயலா ளராக பிறபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக மாயாண்டி இணை செய லாளராக பேச்சிமுத்து, துணை செயலாளராக வல்லவராஜா, ஜெஸ்வந்த் ராவ், கணேசன், கருப்பசாமி, செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவராக ராமசுப்பிர மணியன் மாவட்டத் துணைச் செயலாளராக தங்கமணி மாவட்ட கலைப் பிரிவு இணைச் செயலாள ராக சரவணன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனாடு ஊராட்சி புதுகாலணியில் கடந்த 50 ஆண்டுகளாக சாலைவசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தேனாடு ஊராட்சி புது காலனி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் இ.எம்.ராம்குமார், அந்த பகுதியில் உடனடியாக ரோடு போட வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி தேனாடு புது காலணியில் சாலைபணிகள் தொடங்கியது. நிகழ்ச்சி யில் தேனாடு ஊராட்சிமன்ற துணைத்தலைவர் அம்ச வேணி, மாவட்ட தொழி லாளர் அணி தலைவர் (எல்.பி.எப்) முருகன், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், நீலகிரி மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி துணை அமைப்பாளர் விக்னேஷ், இளைஞர்அணி சிவனேசன், புதுகாலனி வார்டு உறுப்பினர் வில்சன், கிளைச் செயலாளர் ராஜேந்திரன், தினேஷ், சக்திவேல்,விநாயகம், மணியப்பன், முருகன், கருணா, சிவகுமார், கமல், ஜோதி, நாகேந்திரன், திருச்செல்வம், அல் போன்ஸ், வினோத், விகன்ஸ், சசி, சிவா, அனந்தன், சுவிதா, லக்ஷ்மி, நேசமணி, மகாலக்ஷ்மி, சண்முகசுந்தரி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது தேனாடு புதுக்காலனியில் ரோடு வசதி அமைத்து தர ஏற்பாடு செய்த கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • வி.பி.எம்.பி.வடிவேல்-வி.சுதா இல்ல திருமண விழாவில் மணமக்களை திரளானோர் வாழ்த்தினர்.
    • சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி தாலுகா கருமாத் தூர் கிராமம் வடக்கம்பட்டி தொழிலதிபர் வி.பி.எம்.பி.வடிவேல்-வி.சுதா தம்ப தியரின் மகள் வி.கீர்த்திகா–வுக்கும், ஈரோடு குன்னூர் தொழிலதிபர் வி.மகேஸ்வ ரன்-எம்.பானுமதி ஆகியோ ரது மகனுமான எஸ்.வி.எம்.அருண் என்பவ ருக்கும் பெரியோர்களால் திரும ணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி வி.கீர்த்திகா -எஸ்.வி.எம்.அருண் ஆகி யோரது திருமண விழா நேற்று முன்தினம் (10-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கருமாத் தூர் மூணாண்டிபட்டி, மதுரை தேனி மெயின் ரோடு, அருள் ஆனந்தர் கல்லூரி அருகிலுள்ள வி.கே.எஸ்.வடிவேல் ஹைடெக் மகாலில் நடைபெற்றது.

    விழாவுக்கு எட்டுநாடு இருபத்தி நான்கு கிராமம், கருமாத்தூர் பதினெட்டுப் பட்டி கிராம பொதுமக்கள், வடக்கம்பட்டி இரண்டு தகப்பன் மக்கள் தலைமை தாங்கினர். வ.பால்ச்சாமி நாடார்-பா.மஞ்சனை அம்மாள் மகன்கள், தொழி லதிபர்கள் பி.துரைப்பாண்டி -டி.பெத்தம்மாள், பி.வெள்ளையப்பன்-வி.அனுசுயா தேவி, ஈரோடு, குன்னூர் நாடார் உறவின் முறை சங்க தலைவர் எஸ்.வேலுச்சாமி நாடார்-வி.காளீஸ்வரி மற்றும் தாய்மா மன்கள் முன்னிலை வகித்த னர்.

    திருமண விழாவில் அரசி யல் கட்சியினர், தொழிலதி பர்கள், உற்றார், உறவினர் கள், கல்வியாளர்கள், முக் கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    முன்னதாக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவு டி.வி. புகழ் மூக்குத்தி முருகன், பூஜா, ஸ்ரீநிதி, மீத்துஸ்ரீ, ஸ்ரீநிதி ஆனந்த் ஆகியோர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடு களை வி.கே.எஸ்.பட்டாசு தொழிற்சாலை தொழிலா ளர்கள், வி.கே.எஸ். கம்பி மத்தாப்பு கம்பெனி தொழி லாளர்கள், வி.கே.எஸ். விவசாய பண்ணை தொழி லாளர்கள், வி.கே.எஸ். வடி வேல் ஹைடெக் திருமண மண்டப தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் மாவீரர் பூலித்தேவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள்.

    சென்னை:

    மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன்முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள்.

    அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்கமாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தகவல் தொழில்நுட்ப அணியின் களப்பணிகள் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தயா. இளந்திரையன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வளவனூர் ப. அன்பரசு, துணை அமைப்பாளர்கள் சாம்பசிவம், கிருஷ்ணராஜ், பாலாஜி, சசி ரேகா பிரபு, தொகுதி நிர்வாகிகள் தேவா, குரு ராமலிங்கம், மகாலட்சுமி செந்தில், ரகுபதி, கதிரவன், நாராய ணமூர்த்தி, குமரவேல், மூகாம்பிகை நாராயணன், புளிச்சப்பள்ளம் ராதிகா சித்தானந்தன், கோட்டக்குப்பம் ஜாகிர், திருக்கோயிலூர் தொகுதி விக்னேஷ், ஆசைத்தம்பி பரிமளம், திருநாவுக்கரசு, மேகநாதன், நவீன் குமார், விக்னேஷ், அகமது ஷெரிப், சுப ஸ்ரீ, செல்வகுமார், தேவன், மோகன், ராஜேஷ், சசிகலா கபிரியேல், அபுபக்கர், கோமதி பாஸ்கர், சந்திரசேகர், செல்வகுமார், அருண், வள்ளி ராஜேஷ், முத்தமிழ், இராமு, சுப்புலட்சுமி மணிகண்டன், அரவிந்தன், கபிலன், புஷ்பராஜ், மனோஜ் குமார், மணிகண்டன், பூவராகவன், சரவணன், யுவராஜ், சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சரிடம் வாழ்த்து தெரிவித்தனர்.
    • தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பத்தூர்

    தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணனும், துணைத் தலைவராக ஜான்பீட்டரும், அமைப்பாளராக அஜித் குமார், துணை அமைப்பா ளர்களாக நெடுஞ்செழியன், புகழேந்தி, சதீஷ்குமார், சிவசுப்பிரமணியன், ராஜ்குரு மற்றும் சீமான் சன் சுப்பையா ஆகியோரை பொதுச் செயலாளர் நியமனம் செய்துள்ளார்.

    நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் திருப்பத்தூரில் கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். புதிய நிர்வாகிகள் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர்.

    • விருதுநகர் இளம்பெண் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
    • ரஷ்ய நாட்டின் எல்பரஸ் சிகரத்தில் ஏறும் முயற்சியில் முத்தமிழ் செல்வி ஈடுபட்டுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் நாராயணன்-மூர்த்தி அம்மாள். இவரது மகள் முத்தமிழ் செல்வி(வயது33). இவர் சென்னையில் ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார். மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்செல்வி அதற்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை கடந்த மே 23-ந்தேதி முத்தமிழ்செல்வி ஏறி சாதனை படைத்தார். இதற்காக ஏற்கனவே தமிழக அரசு அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது. இந்த நிலையில் முத்தமிழ்செல்வி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    தனது 2-வது முயற்சியாக தற்போது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ரஷ்ய நாட்டின் எல்பரஸ் சிகரத்தில் ஏறும் முயற்சியில் முத்தமிழ் செல்வி ஈடுபட்டுள்ளார்.

    ×