என் மலர்
நீங்கள் தேடியது "Everest"
- அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.
- எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார்.
போபால்:
எவரெஸ்டின் அடிவார முகாம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு ஏக சிரமப்படுவார்கள். ஆனால் 5½ வயதே ஆகும் பிரிஷா, இந்த உயரத்தை தொட்டு, பிரமிப்பூட்டி இருக்கிறார்.
பிரிஷாவின் பூர்வீகம் மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் என்றாலும், மகாராஷ்டிர மாநிலம் தானேயில் தனது பெற்றோர், 2 சகோதரிகளுடன் வசிக்கிறார்.
மும்பையில் ஐ.டி. என்ஜினீயராக பணிபுரியும் லோகேஷ், ஒரு மலையேற்ற வீரரும்கூட. அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.
அதையடுத்து அவருக்கு மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை தந்தை லோகேசும், தாய் சீமாவும் வழங்கியிருக்கிறார்கள். அதன் விளைவாக, பிரிஷா தனது 2½ வயதிலேயே மலையேறத் தொடங்கிவிட்டார். தனது 3 வயதில், மகாராஷ்டிரத்திலேயே உயரமான சிகரமான கால்சுபாயை தொட்டுவிட்டார்.
அந்த வழியில், எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார்.
தினமும் 5, 6 மைல் தூரம் நடப்பது, ஏரோபிக்ஸ் பயிற்சி, தனது அடுக்குமாடிக் குடியிருப்பு படிகள், பூங்கா சுவரில் ஏறுவது என்று தயாரானார்.
கடந்த மே 24-ந்தேதி நேபாளத்தின் லுக்லாவில் இருந்து தனது தந்தையுடன் மலையேற்றத்தை தொடங்கிய பிரிஷா, இம்மாதம் 1-ந்தேதி எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தார். அங்கு இந்திய தேசியக்கொடியுடன் பெருமிதத்தோடு 'போஸ்' கொடுத்தார்.
'இவ்வளவு உயரமான இடத்தை எட்டுவதற்கு பெரியவர்களான மலையேற்ற வீரர்களே மிகவும் சிரமப்படுவார்கள். பலருக்கு மூச்சுத்திணறல், தலைவலி, மலைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் பிரிஷா கஷ்டங்களை எல்லாம் எளிதாக கடந்து இந்த சாதனையை படைத்துவிட்டாள்' என்று பூரிப்பாய் சொல்கிறார் தந்தை லோகேஷ்.
அடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் பிரிஷா ஏறுவார் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த குட்டிப்பெண், மலையேற்றத்தில் கெட்டிதான்!
- முத்தமிழ்செல்வி கடந்த ஏப்ரல் 2- ந்தேதி சென்னையில் இருந்து காட்மாண்டு சென்றார்.
- முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச் செல்வி ''ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்'' மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டு சென்னையில் இருந்து புறப்பட்டு நேபாளம் சென்றார்.
நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.
இவர் கடந்த ஏப்ரல் 2- ந்தேதி சென்னையில் இருந்து காட்மாண்டு சென்றார். ஏப்ரல் 5-ந்தேதி கேம்பிற்கு பயணத்தை தொடங்கினார். ஏப்ரல் 19-ந்தேதி லோபுச் பகுதி உயரத்தை (20075அடி 6119 மீட்டர் உயரம்) அடைந்தார். மே-18-ந்தேதி மவுண்ட் எவரெஸ்டுக்கு பயணத்தை தொடங்கினார். மே-23-ந்தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார்.
உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த முத்தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை 28-3-2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
இந்நிலையில், சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு அமைச்சரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வ அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எவரெஸ்ட் சிகரம் ஏறும் பெண்ணுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
- தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதி பெற்றுள்ள இவருக்கு, மாணிக்கம் தாகூர்
எம்.பி. வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
33 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழ்ப்பெண் என்ற பெருமையை பெற்றுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ளது.
கடந்த மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்பத்தூர் அருகேயுள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 விநாடியில் இறங்கி சாதனை படைத்தீர்கள்.
இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக காஷ்மீரில் லடாக் பகுதியில் சுமார் 5,500 அடி உயர பனிமலை உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளீர்கள்.
தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றிருக்கும் தங்களை வாழ்த்துகிறேன். தங்களின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.
இன்று 10-வது நாள் மலையேறும் பயணம் மேற்கொண்டுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும், மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக நேபாள அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. உரிய அனுமதி பெற்று, ஷெர்பாக்களின் வழிகாட்டுதலின்படி மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சீசனில் இதுவரை 16 பேரை இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அளவிற்கு எவரெஸ்டில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணம், நேபாள அரசு அளவுக்கு அதிகமாக பெர்மிட்டுகளை வழங்குவதுதான் என கூறப்படுகிறது. பெர்மிட்டுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என மலையேற்ற வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், அதிக பெர்மிட்டுகள் வழங்குவதும் மட்டும்தான் உயிரிழப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை நேபாள அரசு மறுத்துள்ளது.
இதுபற்றி நேபாள சுற்றுலாத்துறை இயக்குனர் டாண்டு ராஜ் கிம்ரே கூறுகையில், “இந்த ஆண்டு இதுவரை 381 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர். ஆனால், வானிலை மோசமாக இருந்ததால், சில பாதைகளில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் மலையேற்ற வீரர்கள் காத்து நின்றனர். அப்போது உடல்நலக் குறைவால் சிலர் உயிரிழந்தனர். இது மட்டுமல்லாமல் மோசமான வானிலை உள்ளிட்ட பிற காரணங்களாலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம். காணாமல் போனவர்கள் விரைவில் நலமுடன் திரும்பவும் பிரார்த்தனை செய்கிறோம். இமயமலையில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்வது சாகசமான மற்றும் சிக்கலான பயணம். இந்த பயணம் மேற்கொள்ள முழுமையான விழிப்புணர்வு தேவை. இதில் விபத்துகள் தவிர்க்க முடியாதவை” என்றார்.
நவீன காலத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல், காற்றுமாசு உள்ளிட்ட காரணங்களால் எதிர்வரும் காலங்களில் பனிமலைகள் முழுவதும் உருகி நீராக மாறக் கூடும் என சில ஆய்வுகள் கூறி வருகின்றன.
இதற்கிடையில் எவரெஸ்ட் பகுதியில், உயரும் வெப்பநிலை குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதில் 1922ம் ஆண்டு முதல் இன்று வரை 200க்கும் மேற்பட்ட மலையேறும் வீரர்கள் எவரெஸ்ட் மலையில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பலரது உடல்கள் பனியில் புதைந்து மீட்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் 2100ல் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், பனிப்பாறைகள் உருகி நேபாளத்தில் தூத்கோசி ஆற்றின் நீரோட்டப்போக்கை மாற்றிவிடும், வெள்ள அபாயத்தில் மலைவாழ்வினங்கள் அதிகம் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் 75 சதவீதம் மலைகள் உருகி முற்றிலும் மறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது எவரெஸ்ட் மலைப்பகுதிகளில் வெப்பநிலை அதிகமானதையடுத்து, அப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி, அங்கு ஏற்கனவே புதையுண்ட சடலங்கள் அதிகம் தென்படுகின்றன. அவற்றை மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.
இது குறித்து நேபாளத்தின் மலையேறும் சங்கத்தினர் கூறுகையில், 'பனிப்பாறைகளின் இடையில் சிக்கி இருக்கும் சடலங்களை மீட்க, மீட்பு படையினர் அங்கு ஆபத்தான முறையில் முகாமிட்டு மீட்டு வருகின்றனர். எங்கள் சங்கத்தின் சார்பில் 2008 முதல் இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு அதிகமாக செலவிடப்படுகிறது. எனவே மத்திய அரசு, இந்த மீட்பு நடவடிக்கைகளை மேலும் விரிவுப்படுத்த வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார். #EverestGlaciersMelt #deadbodiesrecovered
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 பேர் பயணத்தை முடிக்கவில்லை.

இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் போலீசில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்தார்.
நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். #Everest #MahaGovt
சீனாவைச் சேர்ந்த சியா போயு மலையேறும் வீரராவார். இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்தார்.
