search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 25 lakh each to students"

    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 மாணவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. #Everest #MahaGovt
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 பேர் பயணத்தை முடிக்கவில்லை.


    இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் போலீசில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்தார்.

    நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். #Everest #MahaGovt
    ×