search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எவரெஸ்ட் சிகரம் ஏறும் பெண்ணுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து
    X

    எவரெஸ்ட் சிகரம் ஏறும் பெண்ணுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து

    • எவரெஸ்ட் சிகரம் ஏறும் பெண்ணுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
    • தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதி பெற்றுள்ள இவருக்கு, மாணிக்கம் தாகூர்

    எம்.பி. வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    33 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழ்ப்பெண் என்ற பெருமையை பெற்றுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ளது.

    கடந்த மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்பத்தூர் அருகேயுள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 விநாடியில் இறங்கி சாதனை படைத்தீர்கள்.

    இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக காஷ்மீரில் லடாக் பகுதியில் சுமார் 5,500 அடி உயர பனிமலை உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளீர்கள்.

    தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றிருக்கும் தங்களை வாழ்த்துகிறேன். தங்களின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.

    இன்று 10-வது நாள் மலையேறும் பயணம் மேற்கொண்டுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×