என் மலர்
நீங்கள் தேடியது "Mountain Peak"
- தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர்.
- காம்யா என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.
உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற, சிறந்த உடல்தகுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும்.
ஆனால் தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.
இதே போல் சில நாட்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாளத்தை சேர்ந்த பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்
மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான அவர் மே 12 முதல் 25 வரையிலான காலகட்டத்தில் 3 முறை எவரெஸ்ட் சிகரத்தில் எறியுள்ளார்.
எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறுவது மிகவும் சிரமமானது. சிலரால் மட்டும் தான் இந்த சாதனையை படைக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது தினமும் இந்த சாதனையை பலர் படைத்தது வருகின்றனர்.
இதற்கு காரணம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு எண்ணற்றோர் ஆர்வம் காட்டுவதும் தான்.
இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் எண்ணற்றோர் மலை ஏறும் காட்சியை சதீஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஒரு போக்குவரத்து காவலரை பணி நியமனம் செய்து விடலாம் என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
- 7 வதாக அண்டார்டிக்காவில் செயின்ட். வின்சென்ட் மலை சிகரத்தை எட்டியுள்ளார்
- காம்யா கார்த்திகேயன் மற்றும் அவரது தந்தைக்கு இந்தியக் கடற்படை வாழ்த்து தெரிவித்துள்ளது.
குறைந்த வயதில் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறிய பெண் என்ற சாதனையை மும்பையைச் சேர்ந்த17 வயது சிறுமி காமியா கார்த்திகேயன் படைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நேவி சில்ட்ரன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் காம்யா கார்த்திகேயன்,
ஆப்பிரிக்காவின் மவுண்ட் கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவின் மவுண்ட் எல்ப்ரஸ், ஆஸ்திரேலியாவின் மவுண்ட் கோஸ்கியுஸ்கோ, தென் அமெரிக்காவின் மவுண்ட் அகோன்காகுவா, வட அமெரிக்காவின் மவுண்ட் டெனாலி, மற்றும் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் ஆகியவற்றின் சிகரங்களை எட்டினார்.

இந்நிலையில் தற்போது 7 வதாக அண்டார்டிக்காவில் செயின்ட். வின்சென்ட் மலை சிகரத்தையும் எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
டிசம்பர் 24 அன்று சிலி நேரப்படி 1,720 மணி நேரத்தில் தனது தந்தை சிடிஆர்எஸ். கார்த்திகேயனுடன் அண்டார்டிக்காவில் உள்ள வின்சென்ட் மலை உச்சியை அடைந்தார் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த முக்கியமான மைல்கல் சாதனையை படைத்த காம்யா கார்த்திகேயன் மற்றும் அவரது தந்தைக்கு இந்தியக் கடற்படை வாழ்த்து தெரிவித்துள்ளது.






