search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழுகை"

    • விசுவக்குடியில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
    • இமாம் முஹம்மது சுலைமான் தலைமையில் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    மழை பெய்ய வேண்டி விசுவக்குடியில் சிறப்பு தொழுகை நடத்த ஜமாத்தார்கள் முடிவு செய்தனர். அதன்படி விசுவக்குடி பகுதியில் வறட்சி நீங்க, மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசலின் இமாம் முஹம்மது சுலைமான் தலைமை தாங்கி நடத்தினார். அதனைத்தொடர்ந்து பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

    • பக்ரீத் பண்டிகைைய முன்னிட்டு அரியலூர் மாவட்ட பள்ளி வசால்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது
    • தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

    அரியலூர்,

    பக்ரீத் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அரியலூர் மார்க்கெட்டில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசல், மஸ்ஜிதே உமர் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் இஸ்லாமிய மரபுபடி குர்பானி கொடுப்பதற்காக, ஏழை-எளிய மக்களுக்கு ஆட்டு இறைச்சியை பங்கிட்டு கொடுத்து மகிழ்ந்தனர்.பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் உலக அமைதிக்காவும், அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் நோய்நொடி இல்லாமல் நன்றாக வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    இதில் அரியலூர் ராமலிங்க நகர் திடலில் தவ்ஹீத ஜமாஅத் சார்பில் நடைபெற்ற தொழுகையில் அந்த அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு,மனித நேயம் மிக்க மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் நிர்வாகிகள் அலாவுதீன் சபியுல்லா சையது ரசீது மற்றும் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் திருமானூர் செந்துறை, ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
    • குர்பானி வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 200க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இன்று காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேலான பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்க ளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தொடர்ந்து பள்ளிவா சலில் பேஷ் இமாம்கள் பக்ரித் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பயான் (சொற்பொழிவு) நடைபெற்றது. பின்பு உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொட ரவும் சிறப்பு துவா (பிரார்த்தனை) நடை பெற்றது.

    இதை தொடர்ந்து வீடுகளில் ஆடு, மாடுகள் குர்பானிக்காக அறுக்கப் பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்க ளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர்.

    ராமநாதபுரத்தில் வெளிப்பட்டணம், சின்னக்கடை, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும், கீழக்கரையில் தெற்குத்தெரு, நடுத்தெரு, பழைய குத்பா பள்ளி, வடக்குத்தெரு, மேலத்தெரு உள்பட 13க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதே போல் பனைக்குளம், என்ம னங்கொண்டான், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், ராமேசுவரம், பெருங்குளம், பெரிய பட்டினம், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிவா சல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொ ருவர் கட்டியணைத்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தொண்டி

    தொண்டியில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் ஈடு பட்டனர். மேலும் முஸ்லிம் கள் ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக் களை தெரிவித்து கொண்ட னர். மேலும் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    விருதுநகர்-சிவகங்கை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன், காரேந்தல், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டி கையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தி லும் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழு கையில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
    • மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

    கீழக்கரை

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாத புரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் இன்று காலை தாய்கார்டன் இடத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட செயலாளர் தினாஜ்கான் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும், முதிய வர்களும், குழந்தைகளும் திடலில் நடைபெற்ற இந்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நிருபர்களிடம் கூறுகையில், இறைத்தூதர் இப்ராஹிமின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாக இந்த பெருநாளின் பல வணக்கங்கள் அமைந்துள் ளன, தொழுகைக்கு பிறகு அவரவர் சக்திக்குட்பட்டு பலி பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சியை சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக தர உள்ளோம், இந்த பெருநாளில் அனைவரும் நல்வாழ்வு பெறவும் அழகிய வாழ்க்கையை வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தோம்,

    மனிதருக்கு மனிதர் தியாக உணர்வை வளர்த்துக் கொள்வதையே இப் பெருநாள் வலியுறுத்துகிறது என்றார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர், இப்ராஹீம்சாபிர், செய லாளர் தினாஜ்கான் மற்றும் நிர்வாகிகள் கீழக்கரை தெற்கு கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையில் திராளனோர் கலந்து கொண்டனர்.
    • ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது

    காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையில் திராளனோர் கலந்து கொண்டனர். தொழுகையை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்-சிறுமிகளும் தொழுகைக்காக அங்கு வரத் தொடங்கினர். 6.30 மணியளவில் மாநில செயலாளர் செங்கை பைசல் தலைமை தாங்கி சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுன் கிளைத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர் அணியினர் செய்து இருந்தனர்.

    இதேபோல் பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு, பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் தாஹா, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி , மக்காநகர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, தவ்ஹீத் நகர் முஜாஹித் பாத்திமா நகர் பள்ளி திடலில் அபூதல்ஹா இக்பால் நகர் ரய்யான் திடலில் ரய்யான்மைதீன் , மஹ்மூதாநகர் ரபீக் ராஜா மதினா நகர் பள்ளி திடல், அப்துல் அஜீஸ் என நகரில் 9 இடங்களில் தொழுகை நடை பெற்றது .

    முன்னதாக தொழுகை பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் கங்கா மேற்பார்வையில் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

    தொழுகைக்கு பின்னர் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 3 இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி தலைமையிலும், கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும், பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லாஹ் உமரி தொழுகை நடத்தியும் குத்பா பிரசங்கம் செய்தனர். இந்த தொழுகையில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் சேக் உதுமான் , செயலர் முஹம்மது காசீம் என்ற சின்ஸா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜபருல்லாஹ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதேபோல் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீராணம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசு தேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தொழுகை நடைபெற்றது.

    • நாளை பக்ரீத் பண்டிகை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
    • குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை ஜூன் (29-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரத்தில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா மைதானத்தில் நடை பெறுவது வழக்கம். இந்த முறை சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மைதானம் ஈரமாக இருப்பதால் இங்கு நடைபெற இருந்த தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக நகர் முழுவதும் ஆங்காங்கே அமைந்துள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொழுகை முடிந்ததும் குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    நாளை காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் பள்ளிவாசல்கள் மற்றும் திறந்த வெளி மைதானங்க ளிலும் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. சொந்த ஊர்களில் நடைபெறும் தொழுகையில் கலந்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடவும், வளை குடா நாடுகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக மக்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    • ஒருவரை ஒருவர் ஆர தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்
    • பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

    திருச்சி, 

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக ஈகைத்திருநாள் எனும் நோன்பு பெருநாள் தொழுகை இன்று தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் முதியவர்களும் கலந்து கொண்டு தங்களின் பெருநாள் தொழுகையை நபிகள் நாயகம் காட்டிய வழியில் நிறைவேற்றினர். சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மற்றும் அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

    • பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
    • இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது.

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

    அதன்படி நேற்று பிறை தெரிந்ததை முன்னிட்டு இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு தஞ்சை மாநகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபம் முன்பு (உருது ஸ்கூல் திடல்) இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாநகர கிளை தலைவர் அப்துல்லா, செயலாளர் ஜியாவூதீன், பொருளாளர் சலீம், நிர்வாகிகள் முகமது முஸ்தபா, காலித், செய்யது முஸ்தபா, மாவட்ட மாணவரணி செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் கிளை இமாம் மாவட்ட பேச்சாளர் சேக் அப்துல் காதர், ரமலான் மாதம் நோன்பு குறித்தும், பண்டிகையின் நோக்கம் குறித்தும் பேசினார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெ ண்கள், சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    முடிவில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி வாசல்கள், திறந்தவெளி இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    • நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    மதுக்கூர்:

    இன்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கீற்று சந்தை அருகில் உள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஏராளமான முஸ்லீம்கள் நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து தொழுகையில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதில் பெண்கள் உட்பட சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஹாஜா ஜியாவுதின் மார்க்க பயான் தொழுகையுடன் நிறைவு பெற்றது.

    • ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது.
    • 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    சரவணம்பட்டி,

    ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

    ரமலான் பண்டிகையையொட்டி கோவையை அடுத்த சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் உள்ள மதரஸா மஸ்ஜிதேநூர் பள்ளி வாசலில் முன்பு உள்ள சாலையில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஈரோடு:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு விரதம் இருந்தனர்.

    30 நாட்களாக விரதம் இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களது ஒரு வருட சேமிப்பில் இரண்டரை சதவீதம் ஏழை மக்களுக்காக ஜகாத் எனும் இஸ்லாமிய வரியை செலுத்துவார்கள்.

    அதனைத்தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டி கையையொட்டி காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து தொழுவதற்கு முன்பு ஏழை மக்களின் வீட்டிற்கு சென்று ஒரு நபருக்கு 90 ரூபாய் என்ற அடிப்படையில் பித்ரா என்னும் வரியை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ரம்ஜான் சிறப்பு தொழு கையில் பங்கேற்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 40 ஈத்கா மைதானங்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 240 -க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இன்று காலை ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை ஹாஜி முகமது ஜிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஏராளமான சிறுவர்களும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதற்காக வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.

    இதேபோல் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது.

    இதில் ஈரோடு பெரியார் நகரில் நடந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பிரியா ணியை தங்களது உறவினர்க ளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கோபியில் ஈதுஹா பள்ளி வாசலிலும், சாமிநாதபுரம் பள்ளிவாசலி லும் ஊர்வ லமும், சிறப்பு தொழுகையும் நடை பெற்றது. இஸ்லாமி யர்கள் தொழுகை முடிந்தவு டன் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து க்களை பரிமாறிக் கொண்ட னர்.

    அந்தியூர் பர்கூர் சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து அந்தியூர் பெரிய ஏரி சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்திற்கு இஸ்லாமியர்கள் டாக்டர்.சாகுல் ஹமீது தலைமையில், சையத் சையது கவுஸ் இமாம் முன்னிலையில் ஊர்வ லமாக சென்று ரம்ஜான் சிறப்பு தொழுகை செய்த னர்.

    பின்னர் கட்டி தழுவி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் சத்தியமங்கலம் மணி கூண்டு திடலில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்ப ட்டோர் புறப்பட்டு ஊர்வல மாக சென்று பழைய மார்க்கெட் வீதி, கோட்டு வீராம்பாளையம் ஆகிய முக்கிய இடங்களில் ஊர்வல மாக சென்று கோட்டு வீராம்பாளையம் அருகே உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    • மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது.
    • ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மதுரை

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று- ரமலான் மாத நோன்பு. நோன்பின்போது அவர்கள் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

    ரமலான் மாதம் முதல் நாள் தொடங்கி 30 நாட்க ளும் கடுமையாக நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்கள், மற்றொரு கடமையான ஏழை-எளியோருக்கு ஜகாத் உதவிகளை வழங்கி வரு வார்கள்.

    ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படும். அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தி னர். இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து 'ஈதுல் பித்ர்' என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது. அதன்படி மாப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். ரம்ஜான் சிறப்பு தொழுகை முடிவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா தொற்று போன்ற பேரிடர்கள் நீங்க வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு துஆ செய்தனர்.

    ×