search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிவாசல்களில் புனித இரவு தொழுகை
    X

    பள்ளிவாசல்களில் புனித இரவு தொழுகை

    • பள்ளிவாசல்களில் புனித இரவு தொழுகை நடந்தது.
    • திரளானோர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ரம்ஜான் மாதத்தில் லைலத்துல் கத்ரு எனப்படும் புனித இரவில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து இரவு முழுவதும் தூங்காமல் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி , பெரியபட்டணம், பனைக்குளம், திருப் புல்லாணி உள்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதி களிலும் உள்ள ஜும்மா பள்ளி வாசல்களில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து நறுமணம் பூசி தொழுகை மற்றும் சிறப்பு துஆவில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், திருக்குர்ஆன் ஓதி சிறப்பு துஆ செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு பள்ளிவாசல்களில் விடிய விடிய இஸ்லாமிய மக்கள் திருக்குர்ஆன் ஓதி இறைவனை தொழுதனர்.

    அனைத்து ஊர்களிலும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிகாலை அனைத்து பள்ளி வாசல் களிலும் நோன்பு நோற்பதற்காக சகர் உணவு வழங்கப் பட்டது. பெண்களுக்கான தொழுகை மதரசாக்களிலும், வீடுகளிலும் நடந்தது.

    Next Story
    ×