search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டி"

    • இந்தியா, பிரேசில், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
    • மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டம் வென்ற திருநங்கை தீர்த்தா பல்வேறு சோதனைகளை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    திருநங்கைகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ்-2023 போட்டி டெல்லியில் நடந்தது. இதில் இந்தியா, பிரேசில், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

    27 வயதான கேரள மாநிலம் எர்ணாகுளம் தெற்கு பரவூரை சேர்ந்த திருநங்கை தீர்த்தா என்பவரும் பங்கேற்றார். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பொது அறிவு, நடத்தை மற்றும் திட்டங்கள் தயாரிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டி மொத்தம் 4 நாட்கள் நடைபெற்றது. இறுதியில் அந்த போட்டியில் கேரள திருநங்கை தீர்த்தா வெற்றி பெற்று கர்வி மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டம் வென்ற திருநங்கை தீர்த்தா பல்வேறு சோதனைகளை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார். திருநங்கை என்பதால் அவர் பள்ளி நாட்களில் பல்வேறு கேலிகளை சந்தித்துள்ளார். 

    பள்ளி வாழ்க்கையை போன்று கல்லூரியில் என்ஜினீயரிங் படித்த போதும் பல கசப்பான அனுபவங்களை அனுபவித்து இருக்கிறார். அதன் மத்தியில் படித்து என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். கடைசியாக தனது தோழிகள் சிலருடன் குடியேறினார்.

    அவர்களின் மூலமாகவே மெட்ரோவில் தீர்த்தாவுக்கு வேலை கிடைத்தது. 2020-ல் தான் பாலியல் அறுவை சிகிச்சை அவருக்கு முழுமையான முடிந்திருக்கிறது. தன்னை கேலி பேசியவர்கள் மத்தியில் வெற்றி பெற்றவராக திகழ வேண்டும் என்பதை தீர்த்தா தனது நோக்கமாக கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதுவே தன்னை திருநங்கைகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் போட்டியில் பட்டத்தை வெல்ல செய்திருக்கிறது என்று தீர்த்தா தெரிவித்திருக்கிறார். தனக்கு சினிமாவில் நடிப்பது, தனது வாழ்க்கை அனுபவங்களை ஆங்கிலத்தில் விவரிக்கும் புத்தகம் எழுதுவது என்ற இரு கனவுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    தி.மு.க. அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலை வாழ்த்துவார் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டியில் கூறியுள்ளார்.
    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் முறையூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்  பெரியகருப்பன் வழங்கினார்.

    இதில் தமிழரசி எம்.எல்.ஏ. பேசுகையில், பெண் பிள்ளைகளை பெற்றெடுப்பதில் நீங்கள் தயக்கம் காட்டினால் என்றால் ஆண்-பெண் விகிதாச்சாரம் என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றம் பெண் பிள்ளைகள் இல்லை என்று சொன்னால் ஆண்கள் திருமணம் முடிக்கும் போது பெண்களே இருக்கமாட்டார்கள்.   ஆகையால் பெண் பிள்ளை களை பெற்றெடுப்பதில் தயக்கம் காட்டவேண்டாம் என்றார்.

    பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாராட்ட வேண்டும் என்பதற்காக முதலமைச்சரோ, அமைச்சர்களோ செயல்பட தேவையில்லை. மக்களுடைய தேவைகளை உணர்ந்து அந்த தேவைகளை பூர்த்தி செய்து அதன் மூலம் மக்கள் பாராட்டினால் அதுதான் நல்ல அரசுக்கு அடையாளம்.  இப்படிப்பட்ட   நல்ல அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலையே வாழ்த்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணைஇயக்குநா் ராம் பிரகாஷ், குடும்ப நலத்துறை இணை இயக்குனர் முருகேஸ்வரி, பிரான்மலை ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவ அதிகாரி நபீஸா பானு, முறையூர் ஊராட்சி மன்ற தலைவர்  சுரேஷ், சிங்கம்புணரி ஒன்றியச்செயலாளர் பூமிநாதன், சிவபுரி சேகர், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, மருத்துவர்கள் பரணிதரன், ராஜ்குமார், மற்றும் வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×