search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    உங்கள் குழந்தையை வாழ்த்துங்கள்...
    X

    உங்கள் குழந்தையை வாழ்த்துங்கள்...

    • ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள்.
    • மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்!

    உங்களுடைய அன்பு குழந்தை தூங்கும்போது அருகில் சென்று அதிக ஓசை இன்றி ஆனால் திருத்தமாக கீழ்க்கண்ட வாசகத்தை சொல்லுங்கள்.

    *என் மகனே(மகளே)! நீ வாழ்க!

    *நீ நல்ல முயற்சி உடையவனாக இருக்கிறாய்!

    *உடல் நலம் மிக்கவனாக இருக்கிறாய்!

    *நல்ல சூழ்நிலை பெற்றவனாக இருக்கிறாய்!

    *நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்!

    *நன்கு உழைப்பவனாக நீ வளர்கின்றாய்!

    *வாழ்வில் வெற்றி பெறுகின்ற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கின்றாய்!

    *நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பி இருக்கிறது!

    *உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது!

    *நீ அருளாற்றல் பெற்றவனாக நல்ல அறிவுடனும் நலத்துடனும் வாழ்க வளமுடன்!

    என அனுதினமும் அவனை வாழ்த்துங்கள்.

    அவன் ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள். அவனது ஆல்ஃபா மனநிலை அதனை ஏற்று, அவனது ஆழ்மனம் தூண்டப்படும். ஆழ்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக அவனுள் மாற்றங்கள் நிகழும். உடன்பாட்டுச் சூழல் தோன்றும். இதை சொல்லச் சொல்ல உங்கள் கண்ணோட்டமும் மாறும். அவன் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும். உங்கள் பேச்சும், தொணியுமே மாறும், சூழல் மாறும்! எண்ண அலைகள் உங்கள் குழந்தையை தாக்குவதற்கு பதிலாக, அவனை தழுவி அன்பு செய்யும்! மனம் மாறும்! மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்! வாழ்த்தி வாழ்த்தி பாருங்கள் ! வளத்தை சேருங்கள் !

    - வேதாத்திரி மகரிசி

    Next Story
    ×