search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    • அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார்.
    • பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஓரையூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் மினி பஸ் டிரைவர், அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார். இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் பஞ்சாயத்து துணை தலைவர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்சென்னை பெண்ணிடம் விசாரணை

    கே.கே. நகர், 

    திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, மஸ்கட் ஓமன் துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும் அதே போன்று பெங்களூர் சென்னை புதுடெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண் அந்த மெசேஜை அனுப்பியிருந்தார். அதில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    ஆயினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை தொடர்ந்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களூக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சவுந்தர்யா சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்

    கடலூர்:

    பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 26 ) சிவில் என்ஜியர் இவரது மனைவி சவுந்தர்யா (24). இவர் சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிறது. திருமணமான ஒரு சில நாட்களிலிருந்து கணவர் சூர்யா மற்றும் சூர்யாவின் தந்தை ஏழுமலை தாய் கலைமணி, சகோதரர்கள் லோகேஷ் ,சர்வேஷ் ஆகியோர்கள் வரதட்சணையாக ரூ.10 லட்சம் பணம் கேட்டு சவுந்தர்யாவை ஆபாசமாக திட்டி காரை ஏற்றிக் கொன்று விடுவதாக மிரட்டி வாழவிடாமல் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி செய்து சவுந்தர்யாவின் கணவர், மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போட்டோ எடுக்க முயன்றபோது ரவிபிரகாஷ் மீது கல்வீசி தாக்கினர்
    • கோவையில் ரகளையில் ஈடுபட்ட 3 திருநங்கைகள் கைது

    கோவை,

    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிபிரகாஷ் (வயது 31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ரவிபிரகாஷ் சம்பவத்தன்று இரவு சாய்பாபாகாலனியில் உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க சென்றார். அப்போது அவரது செல்போனை யாரோ சிலர் அபேஸ் செய்து விட்டனர்.

    எனவே அதிர்ச்சி அடைந்த ரவிபிரகாஷ் உடனடியாக சாய்பாபா காலனி போலீசில் புகார் அளிக்க சென்றார்.

    அங்கு போனின் ஐ.எம்.இ.ஐ நம்பர் வேண்டும் என்று போலீசார் கேட்டு உள்ளனர். எனவே ரவிபிரகாஷ் வேறு வழியின்றி வீடு திரும்பினார்.

    இந்தநிலையில் அவர் தொலைந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசியவர், உன் போன் என்னிடம் தான் உள்ளது. ரூ.10 ஆயிரம் உடன் வா என்று நிபந்தனை விதித்து உள்ளார்.

    தொடர்ந்து ரவிபிரகாஷ் பூ மார்கெட்டுக்கு சென்றார். அங்கு 3 திருநங்கைகள் இருந்தனர். அவர்கள் ரூ.10 ஆயிரம் கேட்டனர். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என ரவிபிரகாஷ் கூறினார்.

    அப்போது ரூ.3000 கொடுத்து விட்டு போனை வாங்கி செல் என்று மிரட்டினார்கள். ரவிபிரகாஷ் ரூ.1500 தருவதாக கூறியும் ஒப்புக்கொள்ளவில்லை.

    எனவே அவர் 3 பேரையும் போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை ரோட்டில் வீசியெறிந்து கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை திருடி ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. தொடர்ந்து 3 திருநங்கைளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
    • பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.

    பணம் கேட்டு மிரட்டல்

    இவரது பட்டறை அருகில் சந்தோஷ் என்பவர் புல்லட் மோட்டார் சைக்கிள் சரிசெய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது உறவினர் கார்த்திக் (25). சந்தோஷ் மூலம் கார்த்திக், சுரேசிடம் அறிமுகம் ஆனார். இதனால் 2 பேரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக், சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்பதும், அவரும் பணத்தை கொடுத்து சில நாட்களுக்கு பிறகு திரும்ப வாங்குவார், வழக்கம் போல சம்பவத்தன்று கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான அருண் (30), அனேக் (28) ஆகியோர் சுரேஷ் பட்டறைக்கு வந்தனர். பின்னர் சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்டனர்.

    அப்போது அவர் பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    சிறையில் அடைப்பு

    அப்போது கார்த்திக் தப்பியோடி விட்ட நிலையில் அங்கிருந்த அருண், அனேக் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து போலி துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வந்தனர். அவரும் நேற்று போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர்.
    • மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மீன்பிடிக்க செல்கிறார்கள். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் அச்சத்தில் தவித்து வருகிறார்கள்.

    இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை படகுகளுடன் சிறைப்பிடித்து செல்வதும், மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசுவதும் காலங்காலமாய தொடர்கிறது. இதனை தடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இயற்கை சீற்றம் காரணமாகவும், மீன்பாடு அதிகமாக கிடைக்காததாலும் செலவுகளை மிச்சப்படுத்த குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 70 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதில் கச்சத்தீவு-நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்திருந்த ராமேசுவரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சுற்றி வளைத்தனர். உடனே வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான மீனவர்களை மிரட்டும் வகையில், சிங்கள கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர். இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறிய கடற்படை வீரர்கள் கடலில் விரித்திருந்த மீன் பிடி வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    பின்னர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு இன்று கரை சேர்ந்தனர். ஏற்கனவே மீன்பாடு மிகவும் குறைந்த நிலையில் ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு சென்றால், சிங்கள கடற்படையினர் அட்டூழியத்தால் தினம் தினம் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று மீனவர்கள் கண்ணீருடன் கூறினர்.

    ஆனால் இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் போலீஸ் நிலையத்திலோ, மீன்துறை அதிகாரிகளிடமோ புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    • சொத்துக்களை அபகரிப்பதற்காக மெக்கானிக் மிரட்டுவதாக குற்றச்சாட்டு
    • ஆசிரியையை மிரட்டியவர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

    கோவை, 

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள பெரிய நகரை சேர்ந்தவர் டேவிட் ராஜன். இவரது மனைவி அம்பிகாபதி (வயது 50).

    இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறி யிருப்பதாவது:-

    நான் சிக்கலாம்பா ளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இந்தநி லையில் எனது மாமனார் ஐசக் அவருக்கு பாத்தியப்பட்ட சொத்தினை அவரது மனைவி பெயருக்கு எழுதி கொடுத்தார். இதனை எனது மாமியார் என் கணவரின் பெயருக்கு மாற்றினார். எனது கணவர் இறந்த பின்னர் இந்ந சொத்தினை நான் அனுபவித்து வருகிறேன்.

    இந்தநிலையில் எனது மாமனாரின் முதல் மனைவியின் மகன் ஜோசப் என்பவரது மகன் சொலவம்பாளையத்தை சேர்ந்த மெக்கானிக் சாலமோன் ஜான்சன் (43) என்பவர் எனது கணவரின் சொத்தை அபகரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் அவர் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் என்னை தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். மேலும் எனது செல்போனுக்கு வாய்ஸ் ரெக்காடர் மூலமாக இழிவு படுத்தும் தகாத வார்த்தைகளை பேசி அனுப்புகிறார்.

    கடந்த ஜூலை மாதம் சாலமன் ஜான்சன் எனக்கு சொந்தமான கட்டடித்தில் வாடகைக்கு இருப்பவர்களை மிரட்டி காலி செய்யுபடி மிரட்டி உள்ளார். பின்னர் கடைக்கு தீ வைத்து சேதத்தை ஏற்படுத்தினார். இது குறித்து கடையில் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.சம்பவத்தன்று நான் பள்ளியில் இருந்த போது அங்கு சாலமன் ஜான்சன் கையில் பெட்ரோல் கேனுடன் வந்தார். பின்னர் அவர் உனது கடையை எரித்த எனக்கு உன்னை எரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கூறி பெட்ரோல் கேனை காட்டி எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    மேலும் அந்த சொத்தை உன்னை அனுபவிக்க விடமாட்டேன். உன்னை இல்லாமல் பண்ணிருவேன் என மிரட்டி அச்சுறுத்துகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் ஆசிரியையை மிரட்டிய சாலமன் ஜான்சன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காந்தி மார்க்கெட் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போனில் தொடர்பு கொண்டு

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 65) இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு

    மர்ம ஆசாமி ஒருவர் தொடர்பு கொண்டு சின்னதுரையிடம் பேசி ரூ.1 லட்சம் பணம் கடன் கேட்டுள்ளார் அதற்கு சின்னதுரை மறுப்பு தெரிவிக்கவே அவரை அசிங்கமாக திட்டிக் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சின்னதுரை

    ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து

    சின்ன துரையை செல்போனில் மிரட்டிய மர்ம ஆசாமி யார் ?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அன்னதானப்பட்டி வேலுநகர் டாஸ்மாக் பாரில் நேற்று மது குடிக்க வந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி வேலுநகர் டாஸ்மாக் பாரில் நேற்று மது குடிக்க வந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்.

    குடிபோதையில் தகராறு

    அப்போது போதையில் இருந்த 3 பேர் ஏட்டுவிடம் தரக்குறைவாக பேசி தாக்க முயன்று மது பாட்டிலை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது குறித்து பார் சப்ளையர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் ேபரில் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் லைன்மேடு புது தெருவை சேர்ந்த ஷாருக்கான் (24), சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த பைேராஸ்கான் (25) , திருச்சி புது கிளை ரோடு பஷீர் அகமது (42) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொலை மிரட்டல்

    இதேபோல சத்திரம் டாஸ்மாக் பாரில் பிரச்சினை செய்வதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ.செல்வராஜ் அங்கு விைரந்து சென்றார். அப்போது போதையில் இருந்த வெங்கட்ராபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (39 )என்பவர் செல்வராஜை கடுமையாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இதையடுத்து செவ்வாய்ப்டே்டை போலீசார் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். 

    • வேலாயுதம்பாளையம் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்
    • பொதுமக்களை பார்த்ததும் தப்பி ஓட்டம் பிடித்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- மலைக்காவல்அய்யன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது55). இவரது மகன் பாலகுமரன் (28). இவர் நேற்று முன் தினம் இரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 3பேர் பாலக்குமரனை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 நபர்களும் தங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் பாலகுமரனை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாலகுமரன் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது பால குமரனை பார்த்து உன்னை என்னைக்கு இருந்தாலும் கொல்லாமல் விடமாட்டோம் என்றுகூறி கொலை மிரட்டல் விடுத்து மூன்று பேரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு பாலகுமாரனை கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து பாலமுருகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கத்தியால் குத்திக் கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று மர்மநபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கல்லூரி முதல்வரை அவதூறாக பேசியதுடன் கார் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
    • கைது செய்யப்பட்ட பிரதீஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் சி.எஸ்.ஐ. பேராயத்தால் நிர்வகித்து வரும் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு இந்து அமைப்பு நிர்வாகிகள் சிலர் காரில் உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களுக்கும், இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    அப்போது கல்லூரி முதல்வரை அவதூறாக பேசியதுடன் கார் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் பொறுப்பு சுசீலா வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வடசேரி போலீசார் குழித்துறை சேர்ந்த இந்து சேனா மாவட்ட தலைவர் பிரதீப் குமார் என்ற மணிகண்டன் (40), சிதறாலை சேர்ந்த பிரதீஸ் (36), பாகோடு கழுவன்திட்டையை சேர்ந்த மூர்த்தி (50) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 448, 294 பி, 384, 506 (2) ஐபிசி ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பிரதிசை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    • பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
    • திருட்டுத்தனமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    மதுரை

    பெருங்குடி கணபதி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முத்துராஜா (வயது 30). இவருடைய சகேகாதரர் அங்கு குமார் (32). இவர்கள் இருவரும் பெண்கள் தனியாக குளிக்கும் போதும் அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்த னமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    பின்னர் அந்த வீடியோவை காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்தனர்.

    இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் விஷேசத்தில் அவர்கள் கலந்துகொண்டனனர்.அங்கு கல்லூரி மாணவி ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இது அந்த மாணவிக்கு தெரிய வந்தது.அவர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அந்தப்பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தர மறுத்தால் சமூக வலை தளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரி டம் கூறினார். அவர்கள் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துராஜா, அங்கு குமாரிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் அவர்கள் பலபெண்களை வீடியோ படம் எடுத்து பணம் பறித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளி யானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×