search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி"

    • கலெக்டரிடம் புகார்
    • 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கீழ்குளம் ஆனான் விளையை சேர்ந்தவர் ரெங்கபாய் (வயது 70). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை என் சகோதரிக்கு சொந்தமான நிலத்தை எனக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். தற்போது 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக நில அபகரிப்பு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த நிலத்தை வேறொரு நபர் பெயரில் மீண்டும் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்னிடம் வெட்டுகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது தொடர் பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
    • பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.

    பணம் கேட்டு மிரட்டல்

    இவரது பட்டறை அருகில் சந்தோஷ் என்பவர் புல்லட் மோட்டார் சைக்கிள் சரிசெய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது உறவினர் கார்த்திக் (25). சந்தோஷ் மூலம் கார்த்திக், சுரேசிடம் அறிமுகம் ஆனார். இதனால் 2 பேரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக், சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்பதும், அவரும் பணத்தை கொடுத்து சில நாட்களுக்கு பிறகு திரும்ப வாங்குவார், வழக்கம் போல சம்பவத்தன்று கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான அருண் (30), அனேக் (28) ஆகியோர் சுரேஷ் பட்டறைக்கு வந்தனர். பின்னர் சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்டனர்.

    அப்போது அவர் பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    சிறையில் அடைப்பு

    அப்போது கார்த்திக் தப்பியோடி விட்ட நிலையில் அங்கிருந்த அருண், அனேக் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து போலி துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வந்தனர். அவரும் நேற்று போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
    • மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள தாலுகாக்கள், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேருராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இ-சேவை மையம், தமிழ்நாடு அரசு கேபில் டி.வி. கார்ப்பரேசன், கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் திட்டம் உள்பட சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகிறது.

    இந்த மையங்கள் மூலமாக வருமானச் சான்று, இருப்பிட சான்று, சாதி, முதல் பட்டாதாரி, விதவை சான்று உள்பட அனைத்து சான்றுகளுக்காக விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர்.

    இம்மையங்களில் அரசு நிர்ணயித்துள்ள. பெரும் பாலன சேவைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டண மாக ரூ.60 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் அபிராமம், கமுதி, கடலாடி சாயல்குடி பகுதியில் உள்ள பெரும் பாலான இடங்களில் கம்யூட் டர் சென்டர், ஜெராக்ஸ் கடை வைத்துள்ள பலர் உரிய அங்கிகாரம் பெறாமலேயே இ-சேவை மையம் செயல்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    அரசு துறை சான்று களுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்களுடன் பொதுமக்கள் கணக்கு எண் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. எவ்வித பயிற்ச்சிகளும் இல்லாததல் அங்கீகாரம் பெறாத இ-சேவை மையத்தினர். கணக்கு எண் உருவாக்க தகவல் களை தவறாக பயன் படுத்துகின்றனர். அதன்பின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரின் ஆதார் எண்ணை பெற்று மீண்டும் கணக்கு எண் உருவாக்குகின்றனர்.

    ஒருவருக்கு உருவாக்கப் பட்ட இந்த எண்ணை பயன்படுத்தி தங்கள் மையத்தை நாடிவரும் வெவ்வேறு நபர் களுக்கு சான்றுபெற விண்ணப்பிக்கின்றனர். மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமுக ஆர்வலரிடம் கேட்டபோது:-

    இந்த பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி ஆதலால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இ-சேவை மையம் எது என்று தெரியாமல் கம்யூட்டர் கடை வைத் திருக்கும் கடைக்கு செல்வதால் அதை சாதகமாக பயன்படுத்தி கடை உரிமை யாளர்கள் சான்றிதழுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன் சான்றிதழும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் காலதாமதமும் ஏற்படுகிறது. இந்த நிலையை போக்க சமந்தப்பட்ட துறையினர் காண்காணிக்கவேண்டும் என்றார்.

    • நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டி ருப்பது தெரியவந்தது.

    அவர் வைத்திருந்த அனைத்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளும் போலியா னவை என்றும், வெள்ளைத்தாளில் பிரிண்ட் எடுத்து விற்பனை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோனூர் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த ஜான் கண்ணாடி (வயது 53) என்பதும் அவரிடமிருந்து போலி லாட்டரி சீட்டுகள், செல்போன், மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகம்‌ முழுவதும்‌ போலி மற்றும்‌ காலாவதியான குடிநீர்‌, குளிர்பானம்‌ விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்‌ பல்வேறு பகுதிகளிலும்‌ ஆய்வு செய்து வருகின்றனர்‌.
    • அதன்படி சேலம்‌ பழைய பஸ் நிலையம், புதிய பேருந்து நிலைய கடைகளில்‌, காலாவதி குளிர்‌பானங்கள்‌ விற்பனை செய்‌யப் படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்‌ கண்காணித்து வருகின்றனர்‌.

    சேலம்:

    கோடை காலம் தொடங்கியதை அடுத்து, தமிழகம் முழுவதும் போலி மற்றும் காலாவதியான குடிநீர், குளிர்பானம் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கண்காணிப்பு

    அதன்படி சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பேருந்து நிலைய கடைகளில், காலாவதி குளிர்பானங்கள் விற்பனை செய்யப் படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதால் காலா வதியான குளிர்பா னங்களை கொடுத்தாலும், கவனிக்காமல் குடித்து விட்டு சென்று விடுவார்கள் என்ற எண்ணம் பெரும்பாலான கடைக்காரர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, சுகாதார அலுவலர்கள் முதலில் பேருந்து நிலைய கடைகளை குறி வைத்து களம் இறங்கியுள்ளனர். குடிநீர் பாட்டில் வாங்கும்போது ஐஎஸ்ஐ முத்திரை, அதன்மேல் பகுதியில் ஐஎஸ் எண், முத்திரைக்கு கீழ் பகுதியில் சிஎம்எல் எண்கள் இருக்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி விவரங்களை பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும்.

    கோடை சீசனில், கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள்தான் மிகவும் அச்சுறுத்தக்கூடியது. கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயு மூலம் மா, வாழை போன்றவை ½ மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்கப்படுகிறது. அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில், வியாபாரிகள் பலர் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

    செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம், நரம்பு மண்டலம், கல்லீரல், குடல், இரைப்பை பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் உட்கொண்டால் அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஓவ்வாமை ஏற்படலாம்.

    எனவே செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பொதுமக்கள் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • தொட்டியாபாளையத்தில் 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
    • இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்துள்ள லக்கபுரம் பஞ்சாயத்து தொட்டியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 52), விவசாயி. இவருக்கு சொந்தமான 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், புதுச்சத்திரம் போலீசிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அந்த நிலம் தொடர்பான தடை ஆணை மீது எவ்வித விசாரணை மேற்கொள்ளாமல் போலி ஆவணங்களை வைத்து அந்த இடத்தை திருநாவுக்கரசு என்பவருக்கு பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மணிவேல், அவரது உறவினர்கள், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் புது சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

    அப்போது பதிவாளர் அமுதா கூறுகையில், சம்பந்தப்பட்ட இடம் பத்திர பதிவு செய்யப்பட்ட நாளன்று நான் விடுப்பில் இருந்தேன். அன்றைய தினம் கூடுதல் பொறுப்பு வகித்த பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். போலி ஆவணங்களை வைத்து பத்திர பதிவு செய்து இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார்.

    இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். இதற்கு இடையே அந்த பத்திரபதிவு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் சிலர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
    • இவரிடமிருந்து ரூ.53 ஆயிரம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் சிலர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

    போலி லாட்டரி சீட்டு விற்பனை

    இந்த லாட்டரி சீட்டுகளை இவர்களே பிரிண்ட் அடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பரமத்தி வேலூர் மற்றும் பரமத்தி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனையாவதாக பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    8 பேர் கைது

    தகவலின் அடிப்படையிலா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது 24), ராஜ்குமார் (24), சதாசிவம் (25), கரூர் மாவட்டம், வெங்கமேட்டை சேர்ந்த மகாதேவன் (37), காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (51),நாமக்கல் அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (60), சுங்ககாரன்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி (37) மற்றும் ஒருவர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரத்து 700 ரொக்கத்தையும், 3 இருசக்கர வாகனங்களையும், ஏராளமான வெளி மாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் பரமத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பரமத்தியைச் சேர்ந்த திருக்கேதீஸ்வரன் (29), திலீபன் (27) மற்றும் மரவாபாளையத்தைச் சேர்ந்த ரகு(26) ஆகிய 3 பேர்களையும் பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

    வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

    அவர்களிடமிருந்து ரூ.700-ஜ பறிமுதல் செய்து விற்பனைக்கு வைத்திருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலி மதுபான ஆலை இயங்கிய விவகாரத்தில் மயிலாடுதுறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதி குமார் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
    • போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தில் உள்ள ஒரு குடோனில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்பு ஆலையை கடந்த மாதம் 9-ந் தேதி ஈரோடு மதுவிலக்கு போலீசார் கண்டுபிடித்தனர்.

    போலி மதுபானம் தயாரித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, எலந்த குளம் பள்ளர் தெருவை சேர்ந்த வீரபாண்டி (51), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முகேஷ் (38) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி மதுபான ஆலை விவகாரத்தில் சீர்காழி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    மதுவிலக்கு போலீசார் சீர்காழி பகுதியில் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஈரோட்டில் போலி மதுபான ஆலை இயங்கிய விவகா ரத்தில் தொடர்புடைய மயிலாடு துறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதியில் இருந்த குமார் (48) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

    அவரை ஈரோடு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கடந்த 2-ந் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
    • மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே மேவலூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 40). இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான பிரபல உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தமிழக பிரிவின் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். எங்களது நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் பிரபலமாகும். முறையாக காப்புரிமை பெற்று பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.

    இந்த நிலையில் எங்களது உணவுப் பொருட்களின் தயாரிப்புகளை குமரி மாவட்டத்தில் போலியாக ஆலை நடத்தி தயார் செய்து எங்களது நிறுவனத்தின் போலியான முத்திரையை பயன்படுத்தி தரமற்ற முறையில் பொருள்களை விற்பனை செய்து எங்களது நிறுவனத்திற்கு களங்கம் விளைவித்து, தவறான ஆதாயம் பெற்றுள்ளனர்.

    எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தர விட்டார்.

    அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா, சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி, குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த ரெஜி (34 ) என்பவர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுங்கான்கடை அடுத்த களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் பரசேரியில் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் நகை அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி காலை நகை அடகு பிடிக்கும் கடைக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நகை அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது பணியில் இருந்த ஐஸ்வர்யா அவர் கொடுத்த சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    பின்னர் அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த நகை மற்றும் முகவரி போலி என தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகாரளித்தார்.

    புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகள் வைத்து ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • போலி ஆவணம் தயாரித்து வியாபாரியிடம் ரூ.6.23 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி யன் (வயது48). இவர் பெரிய ரதவீதியில் கார் மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாலசுப்பிர மணியன் திருப்பரங்குன்றம் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் கீழத் தெருவை சேர்ந்த மணி வண்ணன், முருகன், முத்து மாரி, தீபா ஆகிய 4 பேரும் என்னிடம் போலி ஆவணம் வாயிலாக 6.23 லட்சம் ரூபாய் கடன் வாங்கி சென்றனர். அதனை அவர்கள் திருப்பி தரவில்லை. எனவே நான் அவர்களிடம் இது தொடர் பாக கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பண த்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பி டப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் குற்ற புலனாய்வு பிரிவு போலீ சார் மணிவண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×