search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது
    X

    போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

    • சேலம் அன்னதானப்பட்டி வேலுநகர் டாஸ்மாக் பாரில் நேற்று மது குடிக்க வந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி வேலுநகர் டாஸ்மாக் பாரில் நேற்று மது குடிக்க வந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்.

    குடிபோதையில் தகராறு

    அப்போது போதையில் இருந்த 3 பேர் ஏட்டுவிடம் தரக்குறைவாக பேசி தாக்க முயன்று மது பாட்டிலை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது குறித்து பார் சப்ளையர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் ேபரில் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் லைன்மேடு புது தெருவை சேர்ந்த ஷாருக்கான் (24), சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த பைேராஸ்கான் (25) , திருச்சி புது கிளை ரோடு பஷீர் அகமது (42) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொலை மிரட்டல்

    இதேபோல சத்திரம் டாஸ்மாக் பாரில் பிரச்சினை செய்வதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ.செல்வராஜ் அங்கு விைரந்து சென்றார். அப்போது போதையில் இருந்த வெங்கட்ராபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (39 )என்பவர் செல்வராஜை கடுமையாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இதையடுத்து செவ்வாய்ப்டே்டை போலீசார் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×