search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை கத்தியால் குத்தி  கொலைமிரட்டல் விடுத்த கும்பல்
    X

    வாலிபரை கத்தியால் குத்தி கொலைமிரட்டல் விடுத்த கும்பல்

    • வேலாயுதம்பாளையம் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்
    • பொதுமக்களை பார்த்ததும் தப்பி ஓட்டம் பிடித்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- மலைக்காவல்அய்யன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது55). இவரது மகன் பாலகுமரன் (28). இவர் நேற்று முன் தினம் இரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 3பேர் பாலக்குமரனை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 நபர்களும் தங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் பாலகுமரனை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாலகுமரன் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது பால குமரனை பார்த்து உன்னை என்னைக்கு இருந்தாலும் கொல்லாமல் விடமாட்டோம் என்றுகூறி கொலை மிரட்டல் விடுத்து மூன்று பேரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு பாலகுமாரனை கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து பாலமுருகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கத்தியால் குத்திக் கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று மர்மநபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×