search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன்"

    • சிவராம கணேசை அழைத்து சென்றதாக கூறப்பட்ட அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • மதுபோதை தகராறில் சிவராம கணேசை அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவராம கணேஷ்(வயது16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சிவராம கணேஷ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை தனது நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்பு இரவில் வீடு திரும்பிய சிவராம கணேசின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அதுகுறித்து பெற்றோர் கேட்டபோது மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

    இந்நிலையில் நேற்று மாணவர் சிவராம கணேசுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பேச்சு மூச்சின்றி கிடந்த அவரை, அவரது பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிவராம கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தனது மகன் இறந்ததால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ், அதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்த நிலையில் தனது மகன் இறந்திருப்பதால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். சிவராம கணேசை அழைத்து சென்றதாக கூறப்பட்ட அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதை தகராறில் சிவராம கணேசை அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    சிவராம கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தங்களின் ஊர் திருவிழாவுக்கு குரூப் டி-சர்ட் அடித்துள்ளனர். அதற்கு சிவராம கணேஷ் பணம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சிவராம கணேஷ் தனது நண்பர்கள் 3 பேர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவரிடம் டி-சர்ட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்தது தொடர்பாக நண்பர்கள் கேட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த சிவராம கணேசின் நண்பர்கள், அங்கு கிடந்த தென்னை மட்டையால் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் காயமடைந்தாலேயே சிவராம கணேஷ் இறந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சிவராம கணேஷ் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பிளஸ்-2 மாணவர்கள் ஆவர். மற்றொருவர் கூலி வேலை பார்த்து வரும் 18 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். 

    • உருக்கமான தகவல்கள்
    • கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    நாகர்கோவில், மே.31-

    நாகர்கோவில் மேலரா மன்புதூர் எம்.ஜி.ஆர். சிலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் ஸ்டெபின் (வயது 13).

    நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மாலையில் ஸ்டெபினும் அவரது சகோதரரும் வீட்டில் இருந்தனர். அப் போது ஸ்டெபினின் சகோ தரர் வெளியே விளையாட சென்றார். வீட்டில் ஸ்டெபின் மட்டும் இருந்தார். இந்த நிலையில் இரவு ஸ்டீபன் வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இளைய மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூத்த மகன் ஸ்டீபன் வீட்டுக்குள் இருப்பான் என அழைத்துள்ளார். நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    இதனைப் பார்த்து பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன், நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டெபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டெபின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஸ்டெபின் தற்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிகள் 7-ந் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அவரை விடுதி யில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு விடுதியில் சேர்ந்து படிக்க விருப்ப மில்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்க லாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    பலியான ஸ்டெபின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக் கிறது. பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
    • டிராக்டர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பார்த்திபனை போலீசார் தேடிவருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் நித்திஷ் (வயது11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் கடந்த 25-ந் தேதி காலை வீட்டின் அருகே உள்ள சிவன்கோவில் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதியதில் மாணவன் நித்திசின் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் மாணவன் நித்தீசின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்துவிட்டனர்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பூந்தமல்லி தாசில்தார் மாலினி மற்றும் வெள்ளவேடு போலீசார் சித்துக்காடு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் நித்தீஷ் பலியானது தெரிய வந்தது. பின்னர் பூந்தமல்லி தாசில்தார் மாலினி, பூந்தமல்லி உதவி கமிஷனர் ஜவஹர், வெள்ளவேடு காவல் ஆய்வாளர் லில்லி, உதவி ஆய்வாளர் செந்தில் நாதன், வி.ஏ.,ஓ., பிரகாஷ் பாலாஜி மற்றும் வெள்ளவேடு போலீசார் அப்பகுதிக்கு சென்று புதைக்கப்பட்ட சிறுவன் நித்தீசின் உடலை தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து மீண்டும் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிராக்டர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பார்த்திபனை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • மின்விசிறியில் தூக்குபோட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
    • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே புதுவிளை சானல் கரையில் சேர்ந்தவர் டேவிட் ராஜ் (வயது 45). இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று இரவு மகன் தீபக் (14) அருகே உள்ள ஒரு கோவில் திருவிழா பார்க்க வேண்டும் என்று தனது தாயிடம் கூறியதாகவும், ஆனால் தாயார் போக வேண்டாம் என்று கூறியதாக கூறப்படு கிறது.

    இதனையடுத்து தீபக் அறையில் சென்று உள்பக்கம் கதவை பூட்டி விட்டார். சிறிது நேரம் கழித்து தாயார் கதவை திறக்க முயன்றபோது திறக்க முடியாது சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்குபோட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    உடனே அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று கூறினர்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது.
    • மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி. பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் வெள்ளகோவிலில் உள்ள தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகின்றார். இவரது மகன் சிவின்(வயது 17). 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார், தற்போது ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது. அதற்கு இவர்களது பெற்றோர் இந்த படிப்பு படிப்பதற்கு ரூ.72 ஆயிரம் செலவாகும்.அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இந்த படிப்பிற்கு எந்த அளவுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் என்பது தெரியவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் தான் படிக்க விரும்பிய பாடத்தில் சேர முடியாது என நினைத்து மனவிரக்தியில் சிவின் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது மாணவன் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    • எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி வேல்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் சுபபிரியன் (வயது14).

    இவன் சூரப்ப நாயக்கன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பொதுத்தேர்வு எழுதியிருந்த சுபபிரியன் தேர்வு முடிவுக்காக காத்திருந்தான்.

    இந்தநிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு புங்கமரத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த சுபபிரியன், நேற்று அங்குள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றதாக தெரிகிறது. அங்கு தண்ணீரில் இறங்கிய அவர் ஆழமான பகுதியில் சிக்கினான்.

    அங்கிருந்து வெளியேற முடியாமல் சுபபிரியன் தண்ணீரில் மூழ்கினான். இதுகுறித்து தகவலறிந்த எம்.ரெட்டியபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்மாயில் மாணவனை தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.

    மாணவரின் உடலை பார்த்து அவரது பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கண்மாயில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யுவராஜ் (வயது 18).இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்திருந்தார்.
    • நள்ளிரவு யுவராஜ், தனது பெரியப்பா வீட்டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்விசிறி, யுவராஜ் மீது விழுந்தது.

    கடலூர்:

    கட–லூர் மாவட்–டம் தூக்–க–ணாம்–பாக்–கம் மாதா கோவில் தெருவை சேர்ந்–த–வர் நாகப்–பன் மகன் யுவ–ராஜ் (வயது 18).

    இவர் அதே கிரா–மத்–தில் உள்ள அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் பிளஸ்-2 படித்து முடித்–தி–ருந்–தார். இவர் கடந்த ஒரு வார–மாக தனது பெரி–யப்பா வீடான விழுப்–பு–ரம் பானாம்–பட்–டில் தங்–கி–யி–ருந்–தார்.

    சம்பவத்தன்று நள்–ளிரவு யுவ–ராஜ், தனது பெரியப்பா வீட்–டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்–வி–சிறி, யுவ–ராஜ் மீது விழுந்–தது.

    மாணவனின் அலரல் சத்–தம் கேட்டு வீட்–டில் இருந்–த–வர்–கள் எழுந்து பார்த்–த–போது யுவ–ராஜ் மயங்–கிக் –கி–டந்–தார். உடனே அவரை மீட்டு சிகிச்–சைக்காக விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வ–ம–னையில் அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரி–சோதித்த டாக்–டர், மாணவன் யுவராஜ் ஏற்–க–னவே இறந்து விட்–ட–தாக கூறி–னார். அவர் எப்–படி இறந்–தார்? என்–பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

    • 13 ஆயிரத்து 738 மாணவர்கள் தேர்வு எழுதியதில் இர்பான் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
    • சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கியங்களை கற்று கொடுக்கும் பணி செய்ய ஆர்வமாக உள்ளேன்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முதல் மார்ச் 20-ந் தேதி வரை சமஸ்கிருத பாடத்தேர்வுகள் நடந்தது. பிளஸ்-2 தகுதி நிலையில் உள்ள இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

    இதில் உத்தரபிர தேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள சண்டலி பகுதியை சேர்ந்த சலாலுதீன் என்பவரின் மகன் இர்பான் 82.71 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 13 ஆயிரத்து 738 மாணவர்கள் தேர்வு எழுதியதில் இர்பான் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

    இதனை இர்பானின் தந்தை சலாலூதின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த தங்களின் மகனுக்கு சமஸ்கிருதம் படிக்க ஆசை வந்தது. அதுபற்றி மகன் என்னிடம் கூறியபோது, நான் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    அவர் விரும்பும் படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதித்தேன். அவரும் சமஸ்கிருதத்தை ஆர்வத்துடன் படித்தார். இதனால் இன்று அவர் அந்த தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்துக்கள் மட்டுமே சமஸ்கிருதம் படிக்க வேண்டும், முஸ்லிம்கள் இதனை படிக்ககூடாது என்று நாங்கள் கருதவில்லை. எனவே தான் எங்கள் மகனின் விருப்பத்துக்கு நாங்கள் தடையாக இருக்கவில்லை.

    எதிர்காலத்தில் அவர் சமஸ்கிருத இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது ஆர்வத்துக்கு நான் ஒரு போதும் குறுக்கே நிற்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சமஸ்கிருத தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 20 பேரில் இர்பான் மட்டுமே முஸ்லிம் மாணவர் ஆவார். இதற்காக அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    இந்த சாதனையை படைத்த இர்பான் கூறும்போது, எதிர்காலத்தில் சமஸ்கிருத ஆசிரியராக விரும்புகிறேன். சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கியங்களை கற்று கொடுக்கும் பணி செய்ய ஆர்வமாக உள்ளேன், என்றார்.

    • தேவியின் லீலைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
    • ஆசிரியர்-மாணவர் உறவு பாதிப்படையாமல் இருக்க எப்போதும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக கருதி கற்பித்தலில் ஈடுபடவேண்டும்.

    திருச்சி:

    ஆசிரியர் பணி என்பது அறப்பணி என்பார்கள். ஆனால் அந்த அறத்தை துறந்து, அவமானத்தை அடையாளமாக்க முயற்சித்து இருக்கிறார் ஆசிரியை ஒருவர். திருச்சியில் கணக்கு சொல்லி தரும் ஆசிரியை தமது மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களையே அதிகம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் இங்கு ஆசிரியை ஒருவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். மாணவனை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே அவனை வழி தவற செய்துள்ள விபரம் வருமாறு:-

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வலையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவி (வயது 40). அரசு உதவி பெறும் பள்ளி கணித ஆசிரியையான இவர் வி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதி நாமக்கல்லில் அரசு பணியில் உள்ளார்.

    இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே 6 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் ஆசிரியையும், அவரது கணவரும் பிரிந்தனர். ஆசிரியை குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிலும், கணவர் நாமக் கல்லிலும் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஆசிரியை தேவி தமது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் டியூசன் எடுத்து வந்துள்ளார். இதில் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் ஒருவரை பெற்றோர் அவரிடம் டியூசனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த மாணவன் தேவி பணியாற்றும் பள்ளியில் படித்து வந்தான்.

    கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று வந்த காரணத்தால் மகனை தேவியிடம் அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் அந்த மாணவன் அந்த ஆசிரியை வீட்டுக்கு சென்று விடுவான். பின்னர் இரவு 9 மணி வரை ஆசிரியர் வீட்டில் இருந் துள்ளான்.

    நீண்ட நேரம் டியூசன் படித்து வந்த காரணத்தால் மகன் கணிதத்தில் நன்றாக தேறி சதம் எடுப்பான் என அவனது பெற்றோர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அவன் சரிந்த கதை தெரிந்தது. ஆசிரியையிடம் வெகு நேரம் மகன் படிக்கவில்லை, அவர் மகனுக்கு பலான பாடம் எடுத்துக் வந்துள்ளார் என்பதை அறிந்து நிலை குலைந்தனர்.

    இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த சில மாதங்களாக அந்த மாணவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. விடுமுறை நாட்களிலும் வீட்டில் இருக்காமல் தேவி வீட்டில் மணி கணக்கில் இருந்து வந்துள்ளான். மேலும் இரவு நேரங்களில் செல்போனில் மூழ்கி இருந்தான். நள்ளிரவு 12 மணி வரை ஆசிரியையிடம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறான்.

    இது அவனது பெற்றோருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மாணவனை பெற்றோர்கள் கண்காணிக்க தொடங்கினர். இதில் தேவியின் லீலைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அவர்கள் மாணவரிடம் விசாரித்தனர். அப்போது ஆசிரியை தேவி அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆசிரியை தேவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த மாணவர் குழந்தைகள் நிலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    கைதான தேவி தமது வகுப்பில் படிக்கும் வேறு மாணவர்களுக்கும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் சக மாணவர்களிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வீட்டில் 2 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, டியூசன் படிக்க வந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உப்பிலியபுரம் மற்றும் துறையூர் பகுதியில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    பெண் குழந்தைகளை மட்டுமல்ல, ஆண் குழந்தைகளையும் பெற்றோர்கள் கண்காணித்து வளர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உலகிற்கு உரக்க எடுத்துச் சொல்லி இருக்கிறது.

    ஆசிரியர்-மாணவர் உறவு பாதிப்படையாமல் இருக்க எப்போதும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக கருதி கற்பத்தலில் ஈடுபடவேண்டும். தங்களது விருப்பு, வெறுப்புகளை மாணவர்கள் மீது ஒருபோதும் ஆசிரியர்கள் திணிக்கக்கூடாது. மாணவர்களின் அறிவீனத்தை அழித்து, அறிவாளியாக்கும் பணி ஒன்றையே முக்கியமாக கருதவேண்டும் என்பது நியதி.

    ஆனால் கணவரை பிரிந்து, இணையத்தில் மூழ்கி, மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிட்டு வகுப்பறை கல்வியை படுக்கை அறையுடன் பகிர்ந்துகொண்ட ஆசிரியை ஒருவர் இன்று சிறைக்கு பின்னால் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். 

    • இவரது மகன் நேதாஜி (14). இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    • உடையனாச்சி கிராமத்தில் இருந்து புது உச்சிமேடு கிராமத்தை நோக்கி சென்ற டிராக்டர் நேதாஜி மீது மோதியது

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 43). இவரது மகன் நேதாஜி (14). இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே விளை யாடிக் கொண்டிருந்தார். அப்போது உடையனாச்சி கிராமத்தில் இருந்து புது உச்சிமேடு கிராமத்தை நோக்கி சென்ற டிராக்டர் நேதாஜி மீது மோதியது.   ,இதி ல் பலத்த காயம் அடைந்த நேதாஜியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாண வன் நேதாஜி நேற்று இறந்து போனார்   இதுகுறித்து அவரது தாய் கொடிபவுனு கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கலாம் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
    • மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார்- வாணி தம்பதியின் மகனும், கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவனுமான ரித்விக், உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும் நினைவு கூர்ந்து குறைந்த வினாடியில் கூறி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக கலாம் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.

    மேலும் அபாகஸ் மனக்கணித முறையில் நடைபெற்ற மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.சிறுவயது முதலே பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்று தன் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் வென்றதே இது போன்ற சாதனையை படைக்க உறுதுணையாக இருந்ததாக ரித்விக் தெரிவித்துள்ளார்.

    மேலும் சாதனை படைத்த ரித்விக்கை செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர். 

    ராஜ வாய்க்காலில் குளிக்கும்போது காவிரி ஆற்றில் மூழ்கி பலியான கல்லூரி மாணவன் உடல் மீட்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பெங்களூர் சிங்காபுரம் லேஅவுட்டை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.

    சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவில் அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் வந்துள்ளார். அப்போது படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்தார்.

    திடீரென ஸ்ரீதர் மட்டும் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் ஸ்ரீதரை தேடியனர்.

    நேற்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தேடும் பணியில் ‌‌ ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஸ்ரீ தர்‌ உடலை ராஜா வாய்க்காலின் படித்துறைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல் வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்துஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×