search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்து"

    • கலெக்டர் தகவல்
    • துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட பாலவிளை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறை வேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிரா மங்களிலும் முதல் மற்றும் 2 கட்டங்களாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன் பெறுவதே ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 4,77,000 குடும்ப அட்டைகள் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமம் திட்டத்திற்கு சுமார் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த மாதம் 15-ந்தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விடுப்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமம் திட்டம் தொடர்பாக குறைகள் இருந்தால் தகுந்த சான்றிதழ் வழங்கி அக்குறை களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    கடந்த வாரம் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள், தாசில்தார்கள் ஆகியோரிடம் அறிக்கைகள் பெறப்பட்டு, கலந்தாய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார். முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

    முகாமில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நோட்டுப்புத்தகங்களையும், 4 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.

    • பரபரப்பு தகவல்கள்
    • 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி கீழப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 46), பெயிண்டர். இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38).

    இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு, ஸ்ரீதேவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். உஷாபார்வதி தரையில் பிணமாக கிடந்தார். 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவியது.

    இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்ட பாபு கடந்த திங்கள்கிழமை தான் வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை கொடுத்து உள்ளார்.

    அதன் பிறகு கடந்த 2 நாட்களாக வீட்டில் எந்த நடமாட்டமும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே திங்கள்கிழமையே இவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறா ர்கள். பிணமாக கிடந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. 3 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேருக்கும் திருமணமாகாத நிலையில் உஷா பார்வதி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பலியான 3 பேரின் பெற்றோரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவர்களது உடலை ஒப்படைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உற வினர்கள் யாரும் வாரதால 3 பேரின் உடலை ஒப்படைப்பது குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.

    • பாக்கியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    கன்னியாகுமாரி:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள கோட்டவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சை.

    இவரது மனைவி பாக்கியம் (வயது 52). இவர் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பாக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பாக்கியம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அஞ்சு கிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாக்கியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான பாக்கியத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • உருக்கமான தகவல்கள்
    • கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    நாகர்கோவில், மே.31-

    நாகர்கோவில் மேலரா மன்புதூர் எம்.ஜி.ஆர். சிலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் ஸ்டெபின் (வயது 13).

    நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மாலையில் ஸ்டெபினும் அவரது சகோதரரும் வீட்டில் இருந்தனர். அப் போது ஸ்டெபினின் சகோ தரர் வெளியே விளையாட சென்றார். வீட்டில் ஸ்டெபின் மட்டும் இருந்தார். இந்த நிலையில் இரவு ஸ்டீபன் வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இளைய மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூத்த மகன் ஸ்டீபன் வீட்டுக்குள் இருப்பான் என அழைத்துள்ளார். நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    இதனைப் பார்த்து பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன், நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டெபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டெபின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஸ்டெபின் தற்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிகள் 7-ந் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அவரை விடுதி யில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு விடுதியில் சேர்ந்து படிக்க விருப்ப மில்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்க லாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    பலியான ஸ்டெபின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக் கிறது. பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

    அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    ×