search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்விசிறி"

    • திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • முருகன் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார்

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் மனம்பூண்டியைச் சேர்ந்தவர் முருகன்( வயது 55) தொழிலாளி. இவருக்கு 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி அனுராதா என்கிற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பெண் குழந்தை களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் முருகன் வேலைக்கு எதுவும் போகாமலும் அப்படியே வேலைக்கு போனாலும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி அனுராதா தட்டிக் கேட்டுள்ளார்.

    இதனால் விரத்தி அடைந்த முருகன் சம்பவத்தன்று தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் கேபிள் டி.வி. ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கிய முருகனைக் காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சை க்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த அரகண்ட நல்லூர் போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை கைப்பற்றி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-வது மகள் ஸ்ரீ லெட்சுமி கடந்த மாதம் 14-ந்தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்தார்
    • போர்வையால் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அந்தோணி அமல்ராஜ் கிடந்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள பறையன்விளை வினாயகர் தெருவை சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ் (வயது 41), தச்சு தொழிலாளி.

    இவரது மனைவி சத்தியகலா (36). இவர்களது 2-வது மகள் ஸ்ரீ லெட்சுமி (15). 9-ம் வகுப்பு படித்து வந்த இவள், கடந்த மாதம் 14-ந்தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இது அந்தோணி அமல்ராஜிக்கு மனவேதனையை ஏற்படுத்தி யது.

    இந்த நிலையில் சத்தியகலா தனது மூத்த மகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மாலை அவர் அங்கிருந்து கணவருக்கு போன் செய்துள்ளார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சத்தியகலா உறவினர்களை சென்று பார்க்க கூறியுள்ளார்.

    அவர்கள், அந்தோணி அமல்ராஜ் வீட்டுக்கு வந்து கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் வீட்டுக்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. வீட்டின் அனைத்து கதவுகளும் உட்புறமாக பூட்டி இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடம் வந்த போலீசார் உறவினர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் போர்வையால் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அந்தோணி அமல்ராஜ் கிடந்துள்ளார். போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடமும் அப்பகுதியில் வசிப்பவர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • யுவராஜ் (வயது 18).இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்திருந்தார்.
    • நள்ளிரவு யுவராஜ், தனது பெரியப்பா வீட்டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்விசிறி, யுவராஜ் மீது விழுந்தது.

    கடலூர்:

    கட–லூர் மாவட்–டம் தூக்–க–ணாம்–பாக்–கம் மாதா கோவில் தெருவை சேர்ந்–த–வர் நாகப்–பன் மகன் யுவ–ராஜ் (வயது 18).

    இவர் அதே கிரா–மத்–தில் உள்ள அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் பிளஸ்-2 படித்து முடித்–தி–ருந்–தார். இவர் கடந்த ஒரு வார–மாக தனது பெரி–யப்பா வீடான விழுப்–பு–ரம் பானாம்–பட்–டில் தங்–கி–யி–ருந்–தார்.

    சம்பவத்தன்று நள்–ளிரவு யுவ–ராஜ், தனது பெரியப்பா வீட்–டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்–வி–சிறி, யுவ–ராஜ் மீது விழுந்–தது.

    மாணவனின் அலரல் சத்–தம் கேட்டு வீட்–டில் இருந்–த–வர்–கள் எழுந்து பார்த்–த–போது யுவ–ராஜ் மயங்–கிக் –கி–டந்–தார். உடனே அவரை மீட்டு சிகிச்–சைக்காக விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வ–ம–னையில் அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரி–சோதித்த டாக்–டர், மாணவன் யுவராஜ் ஏற்–க–னவே இறந்து விட்–ட–தாக கூறி–னார். அவர் எப்–படி இறந்–தார்? என்–பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

    • அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தர்டாக்டரி–டம் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • மனவேதனை அடைந்த சுந்தர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சோழன் மாளிகை மெயின் சாலையை சேர்ந்தவர் வீரையன். இவரது மகன் சுந்தர் (வயது 27) கூலி தொழிலாளி. திருமணமாகவில்லை.

    இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    இதனால் சுந்தர்டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த சுந்தர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்தபட்டீஸ்வரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குழந்தைவேலு மற்றும் போலீசார் சென்று சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ–தனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • ஆண்டாள் கோவில் யானைக்கு ஷவர்- மின்விசிறி வசதியுடன் புதிய தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
    • ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோவிலில் ஜெயமால்யதா என்ற 19 வயதான யானை உள்ளது.இந்த யானை தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ணன் கோவிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவில் யானை ஜெயமால்யதா தங்குவதற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ராம்கோ நிறுவனத்தின் சார்பில் ரூ.24 கோடியே 80 லட்சம் செலவில் புதிய தங்கமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    நல்ல காற்றோட்டமிக்க இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த தங்குமிடத்தில் யானை ஹாயாக குளிக்கும் வகையில் 12 தூவாரக்குழாய் வசதி மற்றும் பெரிய அளவிலான 2 மின்விசிறிகள் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலை யில் விரைவில் யானை தங்குமிடம் திறக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×