search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே  மகள் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை
    X

    இரணியல் அருகே மகள் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

    • 2-வது மகள் ஸ்ரீ லெட்சுமி கடந்த மாதம் 14-ந்தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்தார்
    • போர்வையால் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அந்தோணி அமல்ராஜ் கிடந்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள பறையன்விளை வினாயகர் தெருவை சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ் (வயது 41), தச்சு தொழிலாளி.

    இவரது மனைவி சத்தியகலா (36). இவர்களது 2-வது மகள் ஸ்ரீ லெட்சுமி (15). 9-ம் வகுப்பு படித்து வந்த இவள், கடந்த மாதம் 14-ந்தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இது அந்தோணி அமல்ராஜிக்கு மனவேதனையை ஏற்படுத்தி யது.

    இந்த நிலையில் சத்தியகலா தனது மூத்த மகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மாலை அவர் அங்கிருந்து கணவருக்கு போன் செய்துள்ளார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சத்தியகலா உறவினர்களை சென்று பார்க்க கூறியுள்ளார்.

    அவர்கள், அந்தோணி அமல்ராஜ் வீட்டுக்கு வந்து கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் வீட்டுக்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. வீட்டின் அனைத்து கதவுகளும் உட்புறமாக பூட்டி இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடம் வந்த போலீசார் உறவினர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் போர்வையால் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அந்தோணி அமல்ராஜ் கிடந்துள்ளார். போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடமும் அப்பகுதியில் வசிப்பவர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×