search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன்"

    • விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த அணைப்பதி பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது மகன் விஷ்ணு (வயது 10). குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்கு செல்வதற்காக குன்னத்தூர் பஸ் நிலையத்திற்கு சென்றான். அங்கிருந்து அணை அணைப்பதி பகுதி வழியாக செல்லும் பஸ்சிற்கு பதிலாக ஆதியூர் வழியாக செல்லும் 10-ம் நம்பர் பஸ்சில் விஷ்ணு ஏறியுள்ளான்.

    சிறிது தூரம் சென்றதும், பஸ் வேறு தடத்தில் செல்வதை கண்ட சிறுவன் அதிர்ச்சியடைந்து, பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் தெரிவித்துள்ளான். பலமுறை கூறியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த விஷ்ணு, ஓடும் பேருந்தில் இருந்து குதித்துள்ளான்.

    இதில் விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான். உடனே அப்பகுதி பொதுமக்கள் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து ள்ளனர். பின்னர் இது குறித்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குன்னத்தூர் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சை நிறுத்தாததால் பள்ளி மாணவன் பஸ்சில் இருந்து குதித்த சம்பவம் குன்னத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பின்னால் வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.
    • லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் படுகாயம் அடைந்தான்.

    திருவாரூர்:

    நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார்.

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி நீலாதாட்சி.

    இவர்களுடைய மகன் அன்புச்செல்வன் (வயது14).

    வண்டாம்பாளை அருகே உள்ள தனியார் பள்ளியில் அன்புச்செல்வன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அன்புச்செல்வன தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு சைக்கிளில் சென்று கூடைப்பந்து பயிற்சி பெறுவது வழக்கம்.

    நேற்று காலை வழக்கம் போல் திருவாரூர் விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி பெற்று விட்டு சைக்கிளில் அன்புச்செல்வன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

    திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் வண்டாம்பாளை ஆர்ச் அருகே சென்றபோது பின்னால் திருவாரூரில் இருந்து வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.

    இதில் மாணவன் அன்புச்செல்வன், லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தான்.

    உடனே அக்கம், பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அன்புச்செல்வனை பரிசோதித்த டாக்டர், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மயிலாடுதுறையை சேர்ந்த சுந்தரை (40) கைது செய்தனர்.

    மேலும் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த மாணவன், லாரி மோதி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
    • பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தற்காலிக ஆசிரியராக மோகன்(36) என்பவர் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் பிரம்பால் அடித்ததாக தெரிகிறது. இதில் கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதுபற்றி யாரிடமும் கூறவேண்டாம் என்று மாணவரிடம் ஆசிரியர் மோகன் சொன்னதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்றுகாலை மாணவனின் கை, காலில் வீக்கம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மோகனி டம் விசாரித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவா தத்தில் அவர்கள் ஆசிரியர் மோகனை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் ஆசிரியர் மோகனை மீட்டனர். தாக்குதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து மோகன் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வகுப்பில் பாடம் நடத்தும் போது மாணவர் குறுக்கிட்டு சந்தேகம் கேட்டதாலும் அறிவியல் பாடத்தில் குறிப்பு எடுக்க சொன்னபோது புரியவில்லை என்று கூறியதாலும் மாணவரை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது தொடர்பாக பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் வைலட்மேரி இசபெல்லா தலைமையில் கல்வி அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை கிராமமக்கள் மற்றும் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இன்று 2-வது நாளாக பள்ளியில் விசாரணை நடந்து வருகிறது. விசார ணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.
    • பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் வாங்க பேசலாம் கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் புயல் குமார், மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, கிளை தலைவர் தொல்காப்பியன், செயலாளர் குழந்தைவேலு, துணை தலைவர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தேத்தாக்குடி காசிராஜன், மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர்.

    1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.

    கவிஞர்கள் புவனேஸ்வரி, சவுமியா, சுதா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

    பெண்ணிய ஓவியங்களை வரைந்த செல்வி் அமிதா, நித்தியா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

    இதில் கவிஞர் வெற்றிச்செல்வன், அமைப்பின் மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, பேராசிரியர் மாரிமுத்து, வக்கீல் வைரமணி, ஆசிரியர்கள் மோகனசுந்தரம், செந்தில்நாதன், அமிர்த லிங்கம், சத்யராஜ், சமூக ஆர்வலர் வசந்தி செல்வ குமார், நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வராசு, கவிஞர்கள் கார்த்திகேயன், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    • கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
    • கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவிரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.

    பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடை பெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார். பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:

    செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்

    • சந்தோஷ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சந்தோஷ் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் இன்று காலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் மேல்புவனகிரி ராகவேந்திரா வீதியில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறு கீழே விழுந்த சந்தோஷ் மீது, டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பிளஸ்-1 மாணவன், உடல் நசுங்கி உயிரிழந்தான்.

    இதனைக் கண்ட டிப்பர் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார், மாணவன் சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித ம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுபபிவைத்தனர். லாரி மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு பள்ளி மாணவன் மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட அளவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் என்ற வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழர் கலைஞரின் சுவடுகள்"என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது.

    மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கட்டுரை போட்டியில் கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு பள்ளி 12-ம் வகுப்பு சந்தபடுகை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் முருகன் மாவட்டத்திலேயே 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    இவருக்கு மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு மாணவர் முருகனுக்கு 2-ம் பரிசான ரூ. 7000 ரொக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாணவர் முருகனை பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, பெற்றோர் ஆசிரியர் தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ் ஆசிரியர் சாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

    • மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    • பள்ளி மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உரையாடி உள்ளனர்.

    கான்பூர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்பைடர்மேனாக மாறி பள்ளி பால்கனியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கான்பூர் பாபுபூர்வா காலனியில் வசிக்கும் ஆனந்த் பாஜ்பாயின் 8 வயது மகன் விராட், வீரேந்திர ஸ்வரூப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 19ஆம் தேதி பள்ளி மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உரையாடி உள்ளனர். ஸ்பைடர்மேனின் உரையாடலைக் கேட்ட விராட் பால்கனிக்கு வந்து 'நான் ஸ்பைடர்மேன் வருகிறேன்' என்று கூறிக்கொண்டே 16 அடி உயரத்தில் இருந்து குதித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த விராட் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.

    இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கனமழையால் அறுந்து தொங்கிய மின்கம்பி மாணவன் மீது உரசியது.
    • பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஜலாலியல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் சலா வுதீன். இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவ ருடைய மனைவி நஜிபு நிஷா. இவருடைய மகன் முகமது முஜமில் (வயது 11). 6-ம் வகுப்பு மாணவன்.

    சுல்தானா சலாவுதீன் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் முகமது முஜமில் தாயுடன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் இரவு 7 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் பட்டக்கால் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த முகமது முஜமில் ஜலாலி யல் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு தனது மிதிவண்டியில் வந்துள்ளார். அப்போது கனமழையால் அறுந்து தொங்கிய மின் கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

    இதனை தொடர்ந்து அக்கம்ப க்கத்தி னர் உடனடி யாக ஓடி வந்து சிறுவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வம னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மின் கம்பி அறுந்தது குறித்து மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த தையடுத்து மின்சாரம் துண்டிக்கப்ப ட்டது. மருத்துவமனையில் முகமது முஜமிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது.
    • பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    பொன்னேரியை அடுத்த திரு ஆயர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • ஆசிரியரை தாக்கி மாணவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான்
    • போலீசார் வழக்குப்பதிந்து ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஆசிரியர் திருச்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (வயது 41). இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வாஞ்சிநாதன் நேற்று காலையில் ஊருக்கு செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே சினிமா தியேட்டர் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவரான பெரம்பலூர்-விளாமுத்தூர் ரோடு, சங்குபேட்டையை சேர்ந்த பாண்டியனின் மகன் ஜேம்ஸ்பாண்டி(வயது 19) என்பவர் வந்தார்.

    அப்போது அவர் தான் 10-ம் வகுப்பு படிக்கும்போது தன்னை ஏன் அடித்தாய் என்று ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் கேட்டு, அவரை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். ஜேம்ஸ்பாண்டி தற்போது பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவரது தந்தை பாண்டியன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    ராஜ வாய்க்காலில் குளிக்கும்போது காவிரி ஆற்றில் மூழ்கி பலியான கல்லூரி மாணவன் உடல் மீட்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பெங்களூர் சிங்காபுரம் லேஅவுட்டை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.

    சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவில் அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் வந்துள்ளார். அப்போது படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்தார்.

    திடீரென ஸ்ரீதர் மட்டும் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் ஸ்ரீதரை தேடியனர்.

    நேற்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தேடும் பணியில் ‌‌ ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஸ்ரீ தர்‌ உடலை ராஜா வாய்க்காலின் படித்துறைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல் வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்துஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×