search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி முற்றுகை"

    • சத்துணவு பற்றாக்குறையாக வழங்குவதாக புகார்
    • சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிபட்டு கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கலைவாணி என்பவர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு சரிவர மதிய உணவு வழங்குவதில்லையாம். மேலும் உணவு பட்டியலை மாற்றி மதிய சத்துணவு பற்றாக்குறையாக வழங்கு வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று 449 மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள மதிய உணவுபட்டியல் படி சாதம், சாம்பார், முட்டையுடன் கூடிய உருளை கிழங்கு பொரியலுடன் உணவு சமைக்க வேண்டும்.

    ஆனால் அதனை மாற்றி கலவை சாதம், முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றை மாணவர்களுக்கு பற்றாக்கு றையாக சமைத்து வழங்கியுள்ளனர்.

    அந்த உணவு மாணவர்க ளுக்கு பற்றவில்லை. இதனால் சிலர் மதிய உணவு சாப்பிட வீடுகளுக்கு சென்றனர்.

    இதனால் அதிர்ச்சடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் ஒன்று திரண்டனர். மாணவர்களுக்கு பற்றாக்குறைவாக ஏன் உணவு சமைக்கிறீர்கள்? என கேட்டு பள்ளியை முற்றுகை யிட்டனர்.

    மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சத்துணவு அமைப்பாளரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி, துணைத்தலைவர் பூபாலன், ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநா வுக்கரசு ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசினார். அப்போது அரிசி மற்றும் பருப்பில் வண்டுகள், பூச்சுகள் நிறைந்து கிடந்தது.

    மேலும் முட்டைகளை சரியாக வேக வைக்காமலேயே மாணவர்களுக்கு வழங்கு வதாக அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை முன்வைத்து பொதுமக்கள், அவர்களுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சத்துணவு வழங்க பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையை ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி உள்ளிட்டோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சமையல் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் சென்று பார்த்தபோது காலி அரிசி மூட்டைகளுக்கு நடுவே 2 அரிசி மூட்டைகள் மறைத்து பதுக்கி வைக்கபட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த மூட்டை குறித்து கேள்வி எழுப்பிய போது தனக்கு தெரியாது என்று சத்துணவு அமைப்பாளர் அலட்சியமாக பதில் அளித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய குழு தலைவர் சங்கீதா அவரை எச்சரித்ததோடு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
    • பல்வேறு சாதனைகள் செய்துள்ளார்

    போளூர்:

    போளூர் அடுத்த கசம்பாடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 147 மாணவர்கள் படிக்கின்றனர்.

    இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போளூர் அருகே உள்ள பூங்குளம்மேடு அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள், தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து கசம்பாடி அரசு பள்ளியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த 5 வருடங்களாக பணியாற்றும் தலைமை ஆசிரியர் சரவணன் பள்ளியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார். பள்ளியின் தரம் உயர்ந்து தேர்ச்சி விகிதம் அதிகரித்ததோடு, மாணவர்களின் வருகை எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

    இதனால் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இது தொடர்பாக மர்ம நபர்கள் சிலர் பொய்யான புகார் கொடுத்து, தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்துள்ளனர்.

    எனவே தலைமை ஆசிரியர் சரவணனை மீண்டும் கசம்பாடி அரசு பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தனி நபர்கள் பள்ளி நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சி
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளியின் நிறுவனருக்கு கடன் உதவி செய்த தனி நபர்கள் சிலர் தற்போது பள்ளி நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பள்ளியின் நிர்வாகம் மாறினால் தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும்.

    எனவே பள்ளி நிர்வாகத்தை நிறுவனரே தொடர வேண்டும். இல்லையெனில் தங்களின் பிள்ளைகளை பள்ளியை விட்டு விடுவித்து கொள்வோம் எனக்கூறி நேற்று பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் பள்ளி நிறுவனரிடமும், பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது.
    • பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    பொன்னேரியை அடுத்த திரு ஆயர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    ×