search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "show"

    • முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார்.
    • அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் தஞ்சை ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் மருது பாண்டியர் கல்வி நிறுவ னங்களின் தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்ரமணி யன் மற்றும் மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் சிறப்பு லிருந்தினர்களாக தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    மேலும், சிறப்பு விருந்தினராக தாமரை இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் உறுப்பினர் ஜெயஸ்ரீபத்ரிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    அப்போது ரோட்டரி சங்கத்தின் பயன்பாடுகள் குறித்தும், மாணவர்களாகிய அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும் என எடுத்துரைத்தனர். மேலும், ரோட்டரி கிளப் துணை ஆளுநர் கருணா ரோட்டரி சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் பேசினார்.

    முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் ரோட்டரி கிளப் செயலாளர் தார்சியஸ் நன்றி கூறினார்.

    விழாவில் ஆசிப்அலி, விஜயகுமார், ரமேஷ்குமார், சங்காரம், கண்ணன், நரேஷ்குமார் ஆகிய ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மருது பாண்டியர் கல்லூரி ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் மற்றும் கல்லூரி மேலாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.
    • வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உண்டாகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராணி தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் அருண் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் குறித்து பேசியதாவது,

    இந்த சிவப்பு கூன்வண்டு தாக்குதல் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை அதிக அளவில் தென்னையை தாக்குகின்றன. இயந்திரங்கள் மூலம் உலவும் மேற்கொள்ளும் பொழுது காயங்கள் ஏற்படுவதால் அதிக அளவில் குருத்துகளை தாக்குகின்றன.

    இவ்வாறு தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.

    இதனால் மரங்கள் அதிக அளவில் பாதிக்கின்றது. இந்தப் பாதிப்பு வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உள்ளாகிறது.

    இதனை கட்டுப்படுத்தும் மாதங்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆகும்.

    இதனை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்துக்கு என்ற அளவில் பயன்படுத்தலாம் என்றார்.

    மேலும் இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் எனவும் கூறினார்.

    தரமான தென்னங்கன்றுகள் தேர்வு செய்து நடுவது குறித்தும், நீர் மேலாண்மையில் சொட்டுநீர் பாசன முறைகள் குறித்தும், ஒருங்கிணைந்த உரம் வேளாண்மை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்வில் வேளாண்மை உதவி அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், பயிர் அறுவடை களப்பணியா ளர்கள் மற்றும் உழவர் நண்பர்கள், பண்ணை தகவல் ஆலோசனை குழுக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் பொன் செல்வி, நெடுஞ்செழியன், சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • 1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.
    • பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் வாங்க பேசலாம் கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் புயல் குமார், மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, கிளை தலைவர் தொல்காப்பியன், செயலாளர் குழந்தைவேலு, துணை தலைவர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தேத்தாக்குடி காசிராஜன், மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர்.

    1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.

    கவிஞர்கள் புவனேஸ்வரி, சவுமியா, சுதா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

    பெண்ணிய ஓவியங்களை வரைந்த செல்வி் அமிதா, நித்தியா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

    இதில் கவிஞர் வெற்றிச்செல்வன், அமைப்பின் மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, பேராசிரியர் மாரிமுத்து, வக்கீல் வைரமணி, ஆசிரியர்கள் மோகனசுந்தரம், செந்தில்நாதன், அமிர்த லிங்கம், சத்யராஜ், சமூக ஆர்வலர் வசந்தி செல்வ குமார், நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வராசு, கவிஞர்கள் கார்த்திகேயன், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    • சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
    • இந்நிகழ்ச்சியில் “தொன்மை மறவேல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார்.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் "தொன்மை மறவேல்" என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், தொன்மை மற்றும் வாழ்வின் முன்னேற்றம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பல்வேறு துறை வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

    மேலும் மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், உதவி இயக்குநர் (நான் முதல்வன்) திறன் பயிற்சி, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மாவட்ட நூலகம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • கீழக்கரை பள்ளியில் இஹ்ராம் தின நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் விளக்கி கூறினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அல்பையினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் இஸ்லாமிய கல்வித்துறை சார்பாக இஹ்ராம் தின நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணம் செய்வது பற்றி விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை மாணவ-மாணவிகள் விளக்கி கூறினர்.

    இதில் ஹஜ் பயணம் செல்லும்போது எங்கு செல்வார்கள்? என்னென்ன முறையில் பயன்படுத்துவார்கள்? என்பது போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகள் நடித்துக்காட்டினர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்பையினா மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

    • மயிலாடுதுறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
    • சாலையோரம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே காவாலம்பாடி பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த யொட்டி 3000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மயிலாடு துறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியம் தலைமை வகித்தார்.

    சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் சீர்காழி ஆனந்தி, மயிலாடுதுறை இந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி பொறியாளர் சசிகலா தேவி வரவேற்றார்.

    இதில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்துக் கூண்டு வைத்தார்.

    தொடர்ந்து சாலை ஓரம் 3000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், தி.மு.க. அவைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சித் துணைத் தலைவர் சுதாகர் மற்றும் கட்சி பிரமுகர்கள் முத்தமிழ், பன்னீர்செல்வம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தில் எழுந்தருளியுள்ள கண்ணனூர் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    தொடர்ந்து 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தினந்தோறும் இரவு பூவோடு பற்ற வைத்து ஆடும் நிகழ்ச்சியும், மீண்டும் காலையில் பூவோடு ஆடி கோவில் முன்பு கீழே கொட்டி அம்மன் பாடல்களை வருத்தி பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    30-ந் தேதி மாலை அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துதலும், இரவு மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று கம்பம் பிடுங்கி, கோவில் பூசாரி தோளில் சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் பொதுகிணற்றில் விடும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வடுகபாளையத்தில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் சவுராஷ்டிரர்கள் வசித்து வருகின்றனர்.
    • குஜராத்தில் 3-வது வாரத்தில் சவுராஷ்டிர தமிழ் சங்கம நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கம மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். ராமலிங்கம் தலைமை வகித்தார். பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, குஜராத் மாநில முத்திரைத்தாள் கண்காணிப்பாளர் ஜெனு தேவன் சிறப்புரையாற்றினர்.

    இதில் குஜராத் மாநில நீர் வளம், நீர் வழங்கல், உணவு, குடிமை வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் குன்வர்ஜிபாய் பவாலியா கலந்து கொண்டு பேசியதாவது :-

    முகமது கஜினி, அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில் சவுராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் இதர மாநகரங்களில் குடியேறினர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 75,000 சவுராஷ்டிரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மரபுகள், பண்டிகைகளை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், குஜராத்தின் சவுராஷ்டிராவில் காணப்படும் சில மரபுகளையும் பின்பற்றி வருகின்றனர்.

    இந்திய கலாசாரம், வரலாற்றை இணைப்பதை நோக்கமாகக் கொண்டு குஜராத்தில் மூன்றாவது வாரத்தில் சவுராஷ்டிர தமிழ்ச் சங்கம நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    இதன் மூலம் சவுராஷ்டிரா, தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கலை, கலாசாரம், கருத்துகள் பரிமாறிக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

    கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாக சவுராஷ்டிரா, தமிழ்நாட்டு மக்களிடையே இணைப்பு இருக்கிறது. இதையெல்லாம் நினைவுகூரும் விதமாக இந்த சங்கம நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கம மத்திய குழு உறுப்பினர் சுரேந்திரன் வரவேற்றார். முடிவில் தஞ்சாவூர் குழு உறுப்பினர் கேசவன் நன்றி கூறினார்.

    • பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், நடைபெற்ற 'மாபெரும் தமிழ்க் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

    பின்னர்மாவட்ட கலெக்டர் பேசியதாவது,

    தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாகக் கடத்துவதற்கு, 'மாபெரும் தமிழ்க் கனவு" என்னும் இந்தப் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்த வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர்மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெ டுப்புகள், கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள் மற்றும் அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு 'மாபெரும் தமிழ்க் கனவு" சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் இந்த நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுவது நமக்கு பெரிய மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் உரையாற்ற உள்ள இரு சிறந்த ஆளுமைகளின் உரைகளைக் கேட்டு நீங்கள் பயனடைவதுடன், சக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும், புத்தகக் காட்சி அரங்கும் அமைக்க ப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு பேசினார்.

    • நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
    • நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகே, நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பைக்குகளை வைத்து அந்தரத்தில் பறந்தும், ஒற்றை சக்கரத்தில் பைக்கை தூக்கி வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கைகளை விட்டபடியே பைக்கை ஒட்டியும் சாகசம் செய்தனர். இதற்கு பார்வையாளர்களாக செல்லுபவர்களுக்கு ரூ.500 நுழைவு கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இந்த சாகச நிகழ்ச்சிக்கு காவல்துறையினரின் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற சாகச நிகழ்ச்சி நடத்துவதற்கு முதலில் காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட இடத்தில் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. ஆனால் இதுபோன்ற எவ்வித நிபந்தனைகளையும் கடைப்பிடிக்காமல் இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • நான் முதல்வன் நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    பெரம்பலூர்:

    செட்டிகுளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் "நான் முதல்வன்" நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 11 மற்றும்12 ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்பு வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் பொன்னுதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடாலூர், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயற்பியல் பாட விரிவுரையாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரங்கன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியத்தையும் , அதன்மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு பற்றியும் , கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடப்பிரி வுகளைப்பற்றியும், பொறியியல் கல்லூரி சேர்க்கை மற்றும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை மற்றும் நுழைவத் தேர்வுகள் குறித்தும், நான் முதல்வன் வலைதளத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்து, விழிப்புணர்வு தந்து ஊக்கப்படுத்தினார்.

    • சவுடாம்பிகை அம்மன் கோவில் விழாவில் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது.
    • கத்திபோடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி மாதம் மல்லிகை கரகம் எடுத்து செல்லும்போது கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் இந்த ஆண்டு திருவிழாவில் வழக்கம்போல் நிகழ்ச்சிகள் நடைெபற்றது.

    விழாவை முன்னிட்டு டி.குன்னத்தூர் பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் மக்கள் காப்பு கட்டி ஒரு வாரம் விரதம் இருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    மல்லிகை கரகம் எடுத்து வரும்போது பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் சந்தனம் பூசி கொண்டு கத்தியை கைகளால் பல மாக தட்டியும் தங்களது உடலில் கத்தியை வைத்து தன்னைத் தானே கீறிக் கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர். துஷ்ட சக்திகள் அண்டவிடாமல் தடுக்கும் வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடலில் கத்தி கொண்டு தன்னை தானே வெட்டி கொண்டு மல்லிகை கரகத்திற்காக ரத்த காணிக்கை கொடுப்பது ஐதீகம். அந்த வகையில் நேற்று நடந்த கத்திபோடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×