search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
    X

    புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

    • எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • துணை கலெக்டர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, இந்திய குடும்ப நலச்சங்க மதுரை கிளை ஆகியவற்றின் சார்பில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோருக்கு தீபாவளி புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    துணை கலெக்டர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜுன் குமார், மாவட்ட 'டான்சாக்ஸ்' திட்ட மேலாளர் ஜெயபாண்டி, சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் ரஞ்சித் ராம்குமார், இந்திய குடும்ப நலச்சங்க மதுரை கிளை மேலாளர் பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×