search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric lights"

    • திருப்பூர் கோல்டன் நகர் சமூக ஆர்வலரும், திருப்பூர் மாநகர் மாவட்ட சிறுபான்மைத் துறை செயல் தலைவருமான எஸ்.எம். முன்னா பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
    • திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட கோல்டன்நகர் பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக தெரு மின் விளக்குகள் சரியாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட கோல்டன்நகர் பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக தெரு மின் விளக்குகள் சரியாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று திருப்பூர் கோல்டன் நகர் சமூக ஆர்வலரும், திருப்பூர் மாநகர் மாவட்ட சிறுபான்மைத் துறை செயல் தலைவருமான எஸ்.எம். முன்னா பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தார். மேலும் மாலை மலர் பத்திரிகையில் படத்துடன் செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவே, கோல்டன் நகர் உள்ளே நுழையும் பள்ளியின் முக்குப்பகுதி, சூர்யா காலனி 9- வது வீதியில் இரண்டு இடம், சூர்யா காலனி 2-வது வீதி இரண்டு இடம் மற்றும் அருவி பர்னிச்சர் கடை பகுதி. மேலும் கோல்டன்நகர் பாலத்தின் அருகே சஞ்சய் நகர். கோல்டன் நகர் பிரியும் பிரிவில் தெரு மின் விளக்கு ஒரு பக்கம் வெளிச்சத்துடனும் மறுபக்கம் இருட்டாகவும் இருந்த விளக்கு என அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு இப்போது பளீரென மின்னியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதனை உடனடியாக சரி செய்த அதிகாரிகள் மற்றும் இதற்கு குரல் கொடுத்த சமூக ஆர்வலர் முன்னா மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    • 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • 14-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மெயின் லைனில் இருந்து தண்ணீர் எடுக்கும் வசதி உள்ளது.

    குன்னத்தூர்:

    சாதாரண கூட்டம் தலைவர் கொமாரசாமி தலைமையில் நடந்தது. செயலர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

    வெங்கடாசலம் (தி.மு.க.): 13-வது வார்டு மற்ற பகுதிகளான ராகவேந்திர மண்டப பகுதி, ஆண்டவர் குடியிருப்பு, சத்யா நகர், ஆதியூர் ரோடு ஆகிய பகுதிகளுக்கு சத்யா நகர் 30ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டியில் இருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் தண்ணீர் இல்லாத போது மாதம் 2 முறை மட்டும் மேல்நிலைப்பள்ளிமேடு தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. 14-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மெயின் லைனில் இருந்து தண்ணீர் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் சத்யா நகர் தொட்டியில் அவ்வளவு வசதிகள் இல்லை.ஆனால் 13-வது வார்டு பகுதிக்கு தினமும் தண்ணீர் வருவதாக பொய்யான தகவல்களை பரப்பி தண்ணீர் பற்றாகுறை ஏற்படுகிறது என்று சொல்லி குழாய் இணைப்பை துண்டிக்க பார்க்கிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுத்து வழக்கம் போல் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.

    சரஸ்வதி (அ.தி.மு.க.):ஊத்துக்குளி ரோடு பஸ் நிலையத்தில் இருந்து என்.ஆர்.கே. பள்ளி வரை உள்ள சென்டர் மீடியேட்டர்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். தலைவர் பேசும்போது , அனைத்து விடுபட்ட பகுதிகளுக்கும் தெருவிளக்குகள் அமைத்து தரப்படும். குடிநீர் வினியோகம் முறைப்படுத்தப்படும். அதற்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • பெண்கள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.

    புதுச்சேரி: 

    திருபுவனை அடுத்த மதகடிப்பட்டில் இருந்து மடுகரை செல்லும் சாலை உள்ளது.

    பொது மக்கள் மடுகரை யிலிருந்து திருபுவனையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாகனங்களிலும் நடந்தும் மதகடிப்பட்டு வழியாக சென்று வருகின்றனர்.

    2 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கள் தேவைகளுக்கு நல்லூர் பகுதியில் இருந்து இந்த சாலை வழியாகவே நடந்தும் மற்றும் வாகனங்களிலும் மதகடிப்பட்டு பகுதிக்கு வந்து தங்களது தேவைக்கு கடைவீதியில் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் இரவு நேரங்களில் மதகடிப்பட்டு பகுதியில் இருந்து நல்லூர் வரை செல்லும் சாலை இருபுறமும் மரங்கள் வளர்ந்து  நேரங்களில் மின் விளக்கு இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    இதனால் பெண்கள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.

    இதனால் இந்த சாலை முழுவதும் நல்லூர் வரை மின்விளக்குகள் அமைத்து பொதுமக்கள் அச்சமின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை ரூ300, கோடியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் டவுன் பகுதியில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதனை ஒட்டி திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை சாலை வரை இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க ரூ.50 லட்சம் திருவண்ணாமலை தொகுதி சிஎன்.அண்ணாதுரை எம்பி நிதி ஒதுக்கி இருந்தார்.

    அதன்படி இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்குகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி வரவேற்றார்.

    நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மின்விளக்குகளை திருவண்ணாமலை தொகுதி சி. என். அண்ணாதுரை எம்பி, எம் எல் ஏக்கள் க. தேவராஜ், ஏ.நல்லதம்பி தொடங்கி வைத்து பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் டி ஆர் ரகுநாதன் கே பி ஆர். ஜோதிராஜன், பி சந்திரசேகர், வி., வடிவேல்துணைத்தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    அதைதொடர்ந்து செய்தியாளர்கள் சி.என்.அண்ணாதுரை எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதற்கட்டமாக திருப்பத்தூர் டவுன் பகுதியில் 300, மீட்டர் ரூ.50 லட்சத்தில்இரு புறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்துரூ4கோடியில் திருப்பத்தூர் நகராட்சி எல்லையில் இருந்து சேலம் எல்லை வரை இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார்.

    • அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • வாகனங்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

    வடவள்ளி,

    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வருகிற 4-ந் தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. அன்று காலை கோபூஜை செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடக்கிறது.

    முன்மண்டபத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதனை தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. 5-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் வடவள்ளி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் சரக டி.எஸ்.பி.ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய பாத யாத்திரை சென்று வருகிறார்கள். இதனால் மலைப்படிக்கட்டுகள் முழுவதும் மின் விளக்குகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து வாகனங்களளையும் அடிவாரத்தில் நிறுத்துவதற்காக அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவில் நிலம் சுத்தப்படுத்தி தயார் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர 3 இடங்களில் மருத்துவ முகாமும் அமைக்கப்படுகிறது.

    மேலும் உடல் உபாதைகள் கழிப்பதற்காக ஆங்காங்கே மொபைல் டாய்லெட்டும் அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, சோமையம்பாளையம் ஊராட்சி செயலர், மருத்துவ துறை, மருதமலை கோவில் அதிகாரிகள், மருதமலை கவுன்சிலர், வடவள்ளி காவல் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டவர்கள் பேரூர் சரக துணைக்கண்காணிப்பாளர் தலையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • இரவில் செல்ல மக்கள் அச்சம்
    • புதிதாக மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை-திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் பாலம் வாழைப்பந்தல் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.

    இந்தப் பாலத்தின் வழியாக வாழைப்பந்தல் மன்னார்சாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் பாலத்தின் மேலே பொதுமக்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளது.

    இப்பாலத்தில் புதிதாக மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய திருத்தேர்பவனி நடைபெற்றது.

    வேளாங்கண்ணி பேராலய பொருளாளர் உலகநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல்சம்மனசு, அந்தோணியார், ஆரோக்கியமாதா உள்ளிட்ட சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார் தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற கூடத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் தெரு விளக்குகள் எல்.இ.டி மின் விளக்குகளாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சேரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்ப ழகன், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சியில் உள்ள தெரு மின்விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி மின்விளக்குகளாக மாற்றப்படும் எனவும், பேரூராட்சி பஸ் நிலை யத்தில் புதிதாக கடைகள் கட்டி வாடகைக்கு விடவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 8-வது வார்டு வேலவன் நகரில் புதிதாக அரசு மானியத்துடன் விளையாட்டு பூங்கா அமைக்கவும், பேரூ ராட்சிக்கு குடிநீர் கட்ட ணம், கடை வாடகை செலுத்தாதவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தொகையை வசூலிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் இளநிலை உதவியாளர் யோகேஸ்வரன் நன்றி கூறினார்.

    • இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை.
    • ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ரெயில் நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை ரெயில் நிலையம் பிளாட் பார்ம் 1 மற்றும் 2 நடை பாதைகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இங்கு வரும் பெண்கள், குழந்தைகள், இருட்டாக உள்ளதால், ஒரு வித அச்சத்துடன் வெளியில் வர வேண்டியுள்ளது. எனவே, மின் விளக்குகள் எரியவும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் ெரயில்வே துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ×