search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ரெயில் நிலையத்தில் மின்விளக்குகள் எரியாததால் தவிக்கும் பயணிகள்
    X

    உடுமலை ரெயில் நிலையத்தில் மின் விளக்குள் எரியாததால் தவிக்கும் பயணிகள்.

    உடுமலை ரெயில் நிலையத்தில் மின்விளக்குகள் எரியாததால் தவிக்கும் பயணிகள்

    • இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை.
    • ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ரெயில் நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை ரெயில் நிலையம் பிளாட் பார்ம் 1 மற்றும் 2 நடை பாதைகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இங்கு வரும் பெண்கள், குழந்தைகள், இருட்டாக உள்ளதால், ஒரு வித அச்சத்துடன் வெளியில் வர வேண்டியுள்ளது. எனவே, மின் விளக்குகள் எரியவும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் ெரயில்வே துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×