search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி சாலையில் சென்டர் மீடியேட்டர்களில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
    X

    கோப்புபடம்

    ஊத்துக்குளி சாலையில் சென்டர் மீடியேட்டர்களில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

    • 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • 14-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மெயின் லைனில் இருந்து தண்ணீர் எடுக்கும் வசதி உள்ளது.

    குன்னத்தூர்:

    சாதாரண கூட்டம் தலைவர் கொமாரசாமி தலைமையில் நடந்தது. செயலர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

    வெங்கடாசலம் (தி.மு.க.): 13-வது வார்டு மற்ற பகுதிகளான ராகவேந்திர மண்டப பகுதி, ஆண்டவர் குடியிருப்பு, சத்யா நகர், ஆதியூர் ரோடு ஆகிய பகுதிகளுக்கு சத்யா நகர் 30ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டியில் இருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் தண்ணீர் இல்லாத போது மாதம் 2 முறை மட்டும் மேல்நிலைப்பள்ளிமேடு தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. 14-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மெயின் லைனில் இருந்து தண்ணீர் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் சத்யா நகர் தொட்டியில் அவ்வளவு வசதிகள் இல்லை.ஆனால் 13-வது வார்டு பகுதிக்கு தினமும் தண்ணீர் வருவதாக பொய்யான தகவல்களை பரப்பி தண்ணீர் பற்றாகுறை ஏற்படுகிறது என்று சொல்லி குழாய் இணைப்பை துண்டிக்க பார்க்கிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுத்து வழக்கம் போல் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.

    சரஸ்வதி (அ.தி.மு.க.):ஊத்துக்குளி ரோடு பஸ் நிலையத்தில் இருந்து என்.ஆர்.கே. பள்ளி வரை உள்ள சென்டர் மீடியேட்டர்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். தலைவர் பேசும்போது , அனைத்து விடுபட்ட பகுதிகளுக்கும் தெருவிளக்குகள் அமைத்து தரப்படும். குடிநீர் வினியோகம் முறைப்படுத்தப்படும். அதற்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

    Next Story
    ×