என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெரு விளக்குகள் எல்.இ.டி மின் விளக்குகளாக மாற்ற தீர்மானம்
- ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற கூடத்தில் நடந்தது.
- கூட்டத்தில் தெரு விளக்குகள் எல்.இ.டி மின் விளக்குகளாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சேரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்ப ழகன், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேரூராட்சியில் உள்ள தெரு மின்விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி மின்விளக்குகளாக மாற்றப்படும் எனவும், பேரூராட்சி பஸ் நிலை யத்தில் புதிதாக கடைகள் கட்டி வாடகைக்கு விடவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 8-வது வார்டு வேலவன் நகரில் புதிதாக அரசு மானியத்துடன் விளையாட்டு பூங்கா அமைக்கவும், பேரூ ராட்சிக்கு குடிநீர் கட்ட ணம், கடை வாடகை செலுத்தாதவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தொகையை வசூலிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் இளநிலை உதவியாளர் யோகேஸ்வரன் நன்றி கூறினார்.