மாலைமலர் செய்தி எதிரொலி கோல்டன் நகரில் எரியாமல் இருந்த தெரு மின் விளக்குகள் சீரமைப்பு

திருப்பூர் கோல்டன் நகர் சமூக ஆர்வலரும், திருப்பூர் மாநகர் மாவட்ட சிறுபான்மைத் துறை செயல் தலைவருமான எஸ்.எம். முன்னா பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தார்.திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட கோல்டன்நகர் பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக தெரு மின் விளக்குகள் சரியாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
தெரு மின் விளக்குகள் சீரமைப்பு செய்யப்பட்டதை படத்தில் காணலாம். 
தெரு மின் விளக்குகள் சீரமைப்பு செய்யப்பட்டதை படத்தில் காணலாம். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட கோல்டன்நகர் பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக தெரு மின் விளக்குகள் சரியாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று திருப்பூர் கோல்டன் நகர் சமூக ஆர்வலரும், திருப்பூர் மாநகர் மாவட்ட சிறுபான்மைத் துறை செயல் தலைவருமான எஸ்.எம். முன்னா பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தார். மேலும் மாலை மலர் பத்திரிகையில் படத்துடன் செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவே, கோல்டன் நகர் உள்ளே நுழையும் பள்ளியின் முக்குப்பகுதி, சூர்யா காலனி 9- வது வீதியில் இரண்டு இடம், சூர்யா காலனி 2-வது வீதி இரண்டு இடம் மற்றும் அருவி பர்னிச்சர் கடை பகுதி. மேலும் கோல்டன்நகர் பாலத்தின் அருகே சஞ்சய் நகர். கோல்டன் நகர் பிரியும் பிரிவில் தெரு மின் விளக்கு ஒரு பக்கம் வெளிச்சத்துடனும் மறுபக்கம் இருட்டாகவும் இருந்த விளக்கு என அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு இப்போது பளீரென மின்னியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதனை உடனடியாக சரி செய்த அதிகாரிகள் மற்றும் இதற்கு குரல் கொடுத்த சமூக ஆர்வலர் முன்னா மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com