என் மலர்
நீங்கள் தேடியது "கனவு"
- பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
- சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சேலம்:
தமிழகத்தின் பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நாளை(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒருமுக்கியமான பகுதியாகும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், சொற்பொழிவுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் அச்சடித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேடுக்கொண்டுள்ளார்.
- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
- இந்நிகழ்ச்சியில் “தொன்மை மறவேல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் "தொன்மை மறவேல்" என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், தொன்மை மற்றும் வாழ்வின் முன்னேற்றம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பல்வேறு துறை வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
மேலும் மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், உதவி இயக்குநர் (நான் முதல்வன்) திறன் பயிற்சி, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மாவட்ட நூலகம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.
- காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.
உறங்கும் நிலையில் அனைவருக்கும் இயல்பாக வருவது தான் இந்த கனவு. உலகத்தில் கனவு நிலை வராதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில சமயங்களில் நம்மை மீறியும் ஏதேனும் ஒரு சக்தி ஆபத்தில் இருக்கும்போது நம்மை பாதுகாக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து கனவுகளுக்கும் ஒத்துபோகுமா என்று கேட்டால் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். குறிப்பாக நாம் காணும் சில கனவுகள் நம்மை சில ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டுருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.
தாலி, குங்குமம், திருமண மோதிரம், மெட்டி, மாலை போன்றவை தவறி கீழே விழுந்தால் அது நம் அனைவரின் மனதிலும் கெட்ட செயலாக தான் தோன்றும். அந்த சமயத்தில் ஏதேனும் பதற்றங்கள் அதிகமாக ஏற்படும். நமக்கு கெட்ட செயல் நடக்கும்போது தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் நாம் கூப்பிடுவது வழக்கம். திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி கழன்று விழுவது போன்று கனவு வந்தால் என்ன பலன், திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி விழுவது போன்று கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளலாம்.

திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:
திருமணம் ஆன பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போல் கனவு வருவது இயல்பான ஒன்றுதான். தாலி அறுவது போன்று கனவு வந்தால் திருமணம் ஆன பெண்ணிற்கு அவருடைய கணவனின் மீது கோபம் கூட இருக்கலாம். அல்லது வீட்டில் கணவன்மார்கள் அந்த பெண்ணிடம் சண்டைகள் எதுவும் போட்டு இருக்கலாம்.
அதுமட்டும் இல்லாமல் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் நிகழ்ந்து இருக்கும். இதில் எதுவும் இல்லையென்றால் கணவனிடம் அந்த பெண்ணிற்கு ஏதேனும் பிடிக்காமல் இருந்து இருக்கலாம். பெண்களுக்கு தாலி அறுந்து விழுவது போன்று கனவு வந்தால் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:
திருமணம் ஆகாத பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போன்று வந்தால் அது இயற்கைக்கு மாறான ஒரு விஷயமாகும். தாலி அறுவது போல் கனவு வந்தால் அந்த பெண்ணிற்கு எந்த ஒரு சிந்தனை செயல்களும் அவர்களிடத்தில் இருக்காது. பிறகு ஏன் இந்த கனவு வர வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளதுதான்.
தாலி அறுவது போன்ற கனவு திருமணம் ஆகாத பெண்ணிற்கு வந்தால் அவர்களுக்கு திருமணம் பற்றிய பயமும், பதற்றமும் ஆழ்மனதில் அவர்களுக்கிடையில் அறியாமல் இருக்கும்.

திருமணம் செய்யும் நேரம்:
உதாரணத்திற்கு அந்த பெண்ணிற்கு வீட்டில் வரன் பார்த்து கொண்டிருப்பார்கள். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று கனவு வந்தால் நடக்கவிருக்கும் திருமணத்தில் ஏதோ ஒரு ஆபத்து உள்ளது என்ற அறிகுறியாகும். உள்மனதில் அந்த பெண்ணிற்கு இப்போது திருமணம் நிச்சயிக்க வேண்டாம் என்று கூறுவதாகும்.
வர போகும் ஆபத்தில் இருந்து அந்த பெண்ணை பாதுகாப்படைய செய்கிறது. இது போன்று உள்ளவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்காமல் இருப்பது நல்லது. காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.
6 மாதம் பொருத்திருந்து அதன் பின்னர் தாலி அறுவது போன்று கனவு வருகிறதா என்று பார்த்து, கனவு வரவில்லை என்றால் அதன் பிறகு திருமண பேச்சை பற்றி யோசிக்கலாம். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று வருவதால் அந்த பெண்ணிற்கு திருமணத்தில் பிரச்சனை ஏற்படப்போகிறது என்று கனவு மூலம் இறைவன் காட்டுகிறார்.
அந்த பெண்ணிற்கு திருமணத்தில் அவசரம் காட்டக்கூடாது என்று அர்த்தமாகும். இது போன்ற சூழலில் யார் மீதும் காதல் கொள்வது, புதிதாக வரன்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். கனவுகளில் பல வகையான கனவுகள் உள்ளன. அவைகள் அனைத்திற்கும் அர்த்தம் இருக்கிறது என்று கூறமுடியாது. ஆனால் சில கனவுகளுக்கு அர்த்தம் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
- கனவு என்பது ஒரு நபரின் ஆன்மா அல்லது அவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயலாக கருதப்படுகிறது.
- பெரும்பாலான சூழ்நிலையில் கனவுகள் தூக்கத்தை பாதிக்காது.
மனிதர்கள் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். இந்த கனவுகளில் பெரும்பாலும் நிகழ்கால வாழ்வுக்கு தொடர்பே இல்லாதவை ஆகும்.
இந்த கனவுகள் ஏன் வருகின்றன? மூளை இதனை ஏன் உருவாக்குகிறது? என்பது குறித்து நரம்பியல் மருத்துவ விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை. பொதுவாக மனிதர்கள் தூக்கத்தில் கண்களை மூடி இருந்தாலும் மூளை தனது சுய கட்டுப்பாட்டை மீறி தனது செயல்திறனை அதிகரிக்கும்போது கனவுகள் தோன்றுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.
கனவு என்பது ஒரு நபரின் ஆன்மா அல்லது அவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயலாக கருதப்படுகிறது. ஆனால், உண்மையில் கனவுகளில் தோன்றும் சம்பவங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கைக்கு பெரும்பாலும் பொருத்தம் இல்லாததாகவே தோன்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஆரோக்கியமான மனநிலை உள்ள நபர் கனவு காணும்போது அந்த கனவில் வரும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும்போது தெளிவான கனவுகள் ஏற்படுகின்றன என தெரிய வந்துள்ளது. ஆனால், மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் உறக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் கனவுகளின் அர்த்தத்தை அந்த நபர் அடையாளம் காண முடியாமல் குழப்பத்தை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான சூழ்நிலையில் கனவுகள் தூக்கத்தை பாதிக்காது. ஆரோக்கியமான தூக்கத்தின் ஒரு பகுதி கனவு ஆகும். தூக்கத்தை கெடுக்கும் கனவுகள் தொடர்ந்து வந்து அன்றாட சிந்தனையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
- சில நேரங்களில் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்திருப்பேன்.
- பொதுவாக கனவில் என்னை சுற்றி பாறைகளும், மணலும் இருக்கும்.
தமிழில் 'அழகிய தீயே' படத்தில் அறிமுகமான நவ்யா நாயர் தொடர்ந்து 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு பேய் கனவுகள் வந்து தூக்கத்தை கெடுப்பதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நவ்யா நாயர் கூறும்போது, "நான் சிறுவயதில் இருந்தே பயமுறுத்தும் மோசமான பேய் கனவுகள் கண்டு வருகிறேன். இவை எனது நிம்மதியான தூக்கத்தை கெடுக்கின்றன. சில நேரங்களில் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்திருப்பேன். மீண்டும் தூங்க முயற்சித்தாலும் அதே கனவுகள் வரும். சில நேரம் நள்ளிரவு 2 மணிக்கு கனவு கண்டு விழிப்பு வரும். அதன்பிறகு தூங்க பயமாக இருக்கும்.
பொதுவாக கனவில் என்னை சுற்றி பாறைகளும், மணலும் இருக்கும். ஒரு கற்பனை உலகில் நான் சிக்கி இருப்பேன். சுற்றி கருப்பு நிறத்தில் ஒரு விசித்திரமான உயிரினம் இருக்கும். அதன் வாயை திறந்தால் முக்கோண பற்கள் தெரியும். அது பார்க்க பேய் போலவே இருக்கும். அதை கனவில் பார்த்து மிகவும் பயந்து போவேன்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
- தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஆன்மீக ரீதியாகவும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லலாம். பாம்புகள் அடிக்கடி கனவில் வருவது நல்லதா? கெட்டதா என்று பார்க்கலாம்.
நமக்கு தினசரியும் ஏதாவது ஒரு விசித்திரமான கனவு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பாம்புகள் துரத்துவது போல அடிக்கடி கனவில் வரும். சிலருக்கு பாம்புகள் கொத்தி விடும். அந்த கனவு வந்த உடன் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவார்கள். பாம்பு கனவில் வந்தால் குறிப்பாக விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
நம்முடைய பிரியமானவர்கள், விலங்குகள், நாய்கள், இறந்து போனவர்களும் அடிக்கடி வருகின்றனர். அந்த கனவு ஏன் வந்தது எதனால் வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது. நல்லதா கெட்டதா என்பதையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் கனவுகள் எதையோ உணர்த்துகின்றன.
பாம்பு கனவில் வந்தால் நம்முடைய துன்பங்கள் நீங்கும். இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமே என்று பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும். கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம்.
பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் அரசு அல்லது தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.
- ஒருவரின் அடிமனத்தின் குணங்கள் உணர்வு மனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
- ஒருவரின் உண்மையான பலம், பலவீனத்தை ஆழ்மனமே தெரிவிக்கும்.
மனிதனின் மனம் ஒன்று தான். ஆனால் உணர்வுகளுக்கு எண்ணிக்கை கிடையாது. மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ள மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. உணர்வு மனம்: நாம் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல் உணர்வை மாற்றிக் கொள்வது உணர்வு மனம். உதாரணமாக புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் மனம் படிக்கும் உணர்வுக்கு மாறுவது.
2. அடி மனம்: ஒருவரின் இயல்பான மனதை குறிப்பிடுவது. இதை ஒருவரின் உண்மையான சொரூபம் என்றும் சொல்லலாம். ஒருவரின் அடிமனத்தின் குணங்கள் உணர்வு மனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வைக்கும்.
3. ஆழ்மனம்: ஒருவரின் உண்மையான பலம், பலவீனத்தை ஆழ்மனமே தெரிவிக்கும். ஆழ்மனதை உணர்வு மனமும், அடி மனமும் சாதாரண நேரத்தில் செயல்பட விடாது. ஒருவரின் ஆழ்மனம் செயல்படும் போது மட்டுமே நாம் யார்? ஏன் பிறந்தோம் ? எதற்காக பிறந்தோம்? என்ன செய்கிறோம்? எதை நோக்கி போக வேண்டும் போன்ற அனைத்து கேள்விக்கும் விடை பெற முடியும். ஒருவரது சஞ்சித கர்மாவின் நிலையை இந்த ஆழ் மனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- இந்த மூன்று நிலை மனித உணர்வுகளே கனவுகளாக வருகிறது. கனவு என்பது நமக்கு கிடைக்காத நம்மால் செயல்படுத்த முடியாத உணர்வுகளின் வெளிப்பாடு. கனவில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் இனி நடக்கப் போவது, முன்னால் நடந்தது என்ற இரண்டு வகையாகவே இருக்கும். சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளும் வரும். சிலர் தமது எதிர்காலம் பற்றி பகல் கனவு காண்பார்கள்.
- சிலர் ஆழ் மன உணர்ச்சியை தியானம், யோகா போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தி "தான் யார்" என்ற கேள்விக்கு இறைவனின் பரிணாமே நாம் என்ற விடையறிந்து தங்களுக்கு வேண்டிய நல்ல பலன்களை சஞ்சித கர்மாவாக மாற்றி பிறவி பயனை அனுபவிக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க மருத்துவ ரீதியாக சீரான தூக்கம் இல்லாதவர்களுக்கு கனவு என்பது மன அழுத்தம், மன நோயில் ஆழ்த்தி விடுகிறது. இரவில் தூங்கச் செல்லும் போது என்ன சிந்தனையில் இருக்கிறோமே அது தொடர்பான கனவே வரும். மிகக் குறிப்பாக இக்காலத்தில் டிவி சீரியல்களே கனவுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. கனவுகள் பலருக்கு மன பாரத்தை குறைக்கும் வடிகாலாகவும் இருக்கிறது.
- கனவுகள் மனிதனை ஒரு தனி உலகிற்கு அழைத்து செல்கிறது. இதனைப்பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் கடந்து வந்த ஜென்மத்தின் நிகழ்வுகள் கூட ஞாபகம் வரும். தூக்கத்தில் இருந்து விழித்த பிறகு அந்த கனவுகள் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் மட்டுமே பின்னால் நடக்க இருப்பதை முன்னரே உணர்த்தும்.
- குறிப்பிட்ட கால கட்டத்தில் அந்த சம்பவங்கள் அவர்களது கனவில் நிகழ்ந்தைப்போலவே நினைவில் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்திருந்து குருபகவானால் பார்க்கப்பட்டால் பின்னால் நடக்கப் போவதை முன்னமே கனவு மூலம் அறியும் சக்தி படைத்தவர்கள். சில புரியாத புதிர்களை பலமுறை சிந்தனை செய்தும் மற்றும் முயற்சி செய்தும் கிடைக்காத புதிர்களுக்கான விடைகள் சிலருக்கு கனவில் விடையாக கிடைக்கும். இன்னும் சிலருக்கு அவர்கள் செய்த தவறுகள் கனவில் வந்து தவறை உணர வைக்கும்.
- அதீத நம்பிக்கை மற்றும் தாழ்வுமனப்பான்மையும் கூட இரவில் கனவுகளாக வந்து தொல்லை தரும். கனவில் மனிதன் தன்னை பெரிய வெற்றி வீரனாக நினைத்து கொள்வதால் அவனுக்கு யாரும் எதிரியே கிடையாது. அவன் நினைத்ததைப்போல எல்லாமே நடக்கிறது. இதனால் அக்கனவில் பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மனிதனின் பலவீனமான எண்ணங்களும் கனவுகளை வரவழைக்கும். எனவே மனதிற்குள் எதை விதைக்கிறோமோ அதுவே இரவில் கனவாக வந்து விளைகிறது.

ஐ.ஆனந்தி
- ஒருவர் படுத்த உடன் எந்த பிரச்சினையும் இன்றி நிம்மதியாக தூங்குகிறார் என்றால் 12-ம் மிடமான அயன சயன ஸ்தானத்தில் சுப கிரக சம்பந்தம் மட்டும் இருக்கும். தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் மற்றவர்களையும் சந்தோஷ படுத்துவார்கள். கவலைகள் இவரை பாதிக்காது, நிம்மதியாக உறங்ககூடியவர்கள்
- கனவு என்பது அயன சயன ஸ்தானமான 12-ம் இடமும், மனோகாரகனாகிய சந்திரனின் சம்பந்தமும் சேர்ந்தது. கனவுக்கு காரக கிரகம் சூரியனாக இருந்தால் கூட ஒருவரின் கனவு, மனம் சார்ந்த நல்லது கெட்டது அனைத்திற்கும் சந்திரனே காரணம். சந்திரன் ஒரு ஜாதகத்தில் இருக்கும் இடமும், சந்திரனுடன் சேர்க்கை பெற்ற மற்ற கிரகங்களை கொண்டும், சந்திரனை பார்க்கும் கிரகங்களை வைத்தும் ஒருவரது மனம் எவ்வாறு இருக்கும், அவருக்கு கனவு பிரச்சினை உள்ளதா, தூக்கமின்மையால் அவதிபடுகிறாரா? என்று எளிதில் சொல்ல முடியும்.
- சந்திரன் பாவகர்த்தாரி தோஷம் பெற்றால் அசுப கனவும் சுப கர்தாரி யோகம் பெற்றால் சுப கனவுகள் இருந்து கொண்டே இருக்கும். சந்திரன் ராகு, கேதுவோடு சம்பந்தம் மற்றும் 6,8,12-ல் மறைபவர்களுக்கும் கனவு வரும்.
- ஒருவரது ஜாதகத்தில் லக்கனத்தில் 12-ம் அதிபதி இருந்தாலும் அல்லது லக்னாதிபதி 3,6, 8, 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ அவர்களுக்கு கனவுகள் வரும்.
- அத்துடன் லக்னாதிபதி அஸ்தங்கம், நீசம், வக்ரம் பெற்று கோட்சார தசா, புத்தி நாதனும் சம்பந்தம் பெறும் போது அதிக கனவு வரும். அதனால் நோய் தாக்கம், தூக்கமின்மையும் வரும். இவர்களுக்கு செய்யும் மருத்துவ சோதனையில் எந்த குறையும் இருக்காது. ஆனால் ஜாதகர் நோய் தாக்கத்தில் இருப்பார். ஒரு ஜாதகத்தின் 1,5,9 வலிமை பெற்று 12-ம்மிடம் சம்பந்தம் பெறும் போது சுப கனவுகளும் 3,6,8,12-ம் பாவகம், அதிபதிகள் தசை நடத்தும் போது துரோகம், இழப்பு, மரணம் தொடர்பான கனவுகள் வரும். மிகக் குறிப்பாக சந்திர தசை சனி புத்தி அல்லது சனி தசை சந்திரபுத்தி நடக்கும் போது மன சஞ்சலமான கனவுகள் மிகுதியாக இருக்கும். இந்த காலகட்டங்களில் வரும் கனவு தூங்கி எழும் போது மறந்து விடும் அல்லது அரைகுறையாக நினைவு இருக்கும். 4-ம் இடமான சுகஸ்தானம் 12-க்கு திரிகோணம் என்பதால் சுகஸ்தானத்தை கோச்சாரத்தில் அசுப கிரகம் தொடர்பு பெறும் போது (3க்கு 2) தூக்கமின்மை மற்றும் குடியிருக்கும் வீட்டில் பிரச்சினை போன்ற காரணத்தால் அசுப கனவு வரும். சுக்கிரன், புதன், சந்திரன் போன்ற பெண் கிரக சம்பந்தம் ஏற்படும் போது பெண்கள் தொடர்பான கனவுகள் அதிகம் வரும்.
- சனி, ராகு, கேது போன்ற கர்ம வினையை வெளிப்படுத்தும் கிரகங்கள் 6,12-ம் பாவத்தோடு சம்பந்தம் பெற்று செவ்வாய் சம்பந்தமும் பெற்றால் அடிதடி, சண்டை கனவு வரும். 6,12- ல் ராகு, சனி சம்பந்தம் பெறும் போது இறந்த முன்னோர்களின் கனவு வரும். 6,12-ல் செவ்வாய், ராகு சம்பந்தம் பெறும் போது மிருகங்கள் கனவு வரும். உடலில் கபம், வாதம், பித்தம் வாயு தொடர்பான பிரச்சினை, அஜீரண கோளாறு தந்து கனவை உருவாக்கும்.
- ஒரு குடும்பத்தில் சாதாரண மரணமோ, அல்லது திடீர் மரணமோ ஏற்பட்டிருந்தால் அதற்க்கான கர்மங்களை தொடர்ந்து 12 நாட்கள் செய்வார்கள். ஏராளமான பணங்களை செலவுசெய்தும், கடுமையான நியமங்களை கடைபிடித்தும் 12 நாட்கள் செய்யப்பட்ட இறுதி கர்ம காரியங்களால் அந்த ஆத்மா நற்கதியை அடைந்தாரா? இல்லையா? என்பதை சில கனவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். நல்ல கனவு வந்தால் ஆத்மா நற்கதி பெற்றது என்றும் தீய கனவு வந்தால் நற்கதி அடைவதில் சிக்கல் இருக்கிறது என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
- நல்ல கனவுகள் என்றால் பழுத்த பழங்களுடன் மரம், காளை, கருடன், மயில், தேவர்கள் அவர்களின் வாகனங்கள் கனவில் தோன்றுவது கர்மா நடைபெற்ற வருடத்தில் கர்மா செய்தவரின் மகன் (அ) மகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது சுப பலன். ஒரு இடத்தில் படுத்திருக்கும் நபர், காலை எழும் போது இடம் மாறி எழுவது. தனது குடும்பத்து நபர்கள் தன்னைவிட்டோ, தன் குடும்பத்தை விட்டோ வெளியேறுவது, யாரோ ஒருவர் தன்னை தூக்கி செல்வது, உண்ணும் உணவை மற்றவர் அபகரித்து செல்வது போல காணுவது போன்ற கனவுகள் அசுபமாகும்.
- இது போன்ற கனவுகள் வந்தால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, இறந்தவருக்கு நற்கதி ஏற்படவேண்டும் என சங்கல்பம் செய்து ஏழை எளியவர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும் தானமாக கொடுக்கலாம்.
- ஆலய தரிசனம், கடவுளுக்கு அபிஷேக ஆராதனை, புனித நீராடுதல், நீர் நிலைகளை கடந்து செல்லுதல், புத்தாடை புது ஆபரணம் அணிவது, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, விருந்து உணவு சாப்பிடுதல், ஒளியுடன் கூடிய பிரகாசமான பொருள்களை காண்பது, மலைமேல் ஏறிச் செல்வது, மழை பெய்தலை காணுதல், பயிர்களை காணுதல், கடவுள் சிலைகள், படங்கள், உயிருடன் இருக்கும் தாயார், தகப்பனார், மனைவி குழந்தைகள், கன்னிப் பெண், பறவை, சிகப்பு, வெண்மை, மஞ்சள் நிற மலர்கள் அலங்காரம் செய்த பெண், பசு காளை, கண்ணாடி , பலாமரம், தாமரைப்பூ, பால், கோழி, அன்னம், கொக்கு, பிராமணர், தேர், சப்பரம், திருவிழா, கோபுரம் ஆகியவை சுப கனவுகள் ஆகும். இதனால் நன்மை ஏற்படும்.
- பொருட்கள் உடைதல், கட்டிடம் இடிந்து விழல், மரம் சாய்தல், மலைசரிதல், வெள்ளம் பெருகி அடித்துச் செல்லுதல், விபத்துக்கள், விலங்குகள் கடித்து சண்டையிடுதல், மனிதர்கள் தகாத வார்த்தை கூறி சண்டையிடுதல், படங்கள் உடைதல், சிலைகள் உடைதல், இடறி விழுதல், மொட்டை தலை, மரம் ஏறுதல், மரத்தில் இருந்து அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், தலைவிரி கோலமாக ஒப்பாரி வைக்கும் பெண், புற்று, நெசவுதறி, எண்ணெய், இரும்பு பருத்தி, குரங்கு, கழுதை சர்ப்பம், விலங்குகள் துரத்துதல், ரத்தக்ககரையுள்ள ஆடை, பாம்பு விரட்டுதல், பாம்பு விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அடித்துக் கொல்லுதல், காவல்நிலையம், நீதிமன்றத்திற்கு செல்லுதல், இடுகாடு, துர்தேவதை, சாத்தான் பூஜை செய்தல், மாந்திரீக வேலை செய்தல், விலங்குகள் தோலுரித்தல், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல், இறந்தவர்கள் கனவில் வருவது, காலி மனை, வறண்ட நிலம் ஆகியவை அடிக்கடி தீய கனவுகளாக வந்தால் ஏதேனும் சம்பவங்கள் நிகழக்கூடும்.
- இரவு 12 மணி முதல் 4 மணிவரை பின்னிரவு காலமாகும். 12 மணி முதல் 2 மணி வரை காணும் கனவுகள் ஒரு வருட கால அளவிலும் பின்னிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை காணும் கனவுகள் 6 மாதங்களுக்குள்ளாகவும், அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை காணும் கனவுகள் உடனே நிறைவேறும்.
- பலவீனமான உடல்நிலை மற்றும் மனநிலையும் கனவுகளுக்கு காரணம் என்பதால் உடற்பயிற்ச்சியும், மனபயிற்சியும், மனதிற்கு இதம் தரும் யோகா, மூச்சுபயிற்சி, நடைப்பயிற்சி, செய்து மனதினை பக்குவப் படுத்திக் கொண்டால் தூக்கத்தில் கனவுகள் வந்து தொல்லை தருவதில்லை.
- சாத்வீக உணவுகளை உண்டு வாத, பித்த மற்றும் சிலேத்தும நாடிகளினை சரியாக பேணி காக்கவேண்டும்.
- இரவு படுக்கைக்கு செல்லும் முன் ராம நாமம் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய வேண்டும்.
- இரவு துங்கும் முன் சித்தர்களை வணங்கி தியானம் செய்து வேண்டியதை கேட்க கனவில் அல்லது காலையில் பதில் கிடைக்கும். மரணம் தொடர்பான கனவு கண்டால் மகா மாருத்யுஞ் ஜய மந்திர பாராயணம் செய்தல் மனம் இலகுவாகும்.
- மகா மிருத்யுஞ் ஜய மந்திரம் :
- ஓம் த்ரயம்பகம் யஜாமகே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
- உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்
- இதற்கும் மேல் மன பாரம் இருந்தால் சர்வம் கிருஷ்ணர்பணம் என்று வாய் விட்டு சொன்னால் கிருஷ்ணன் பார்த்துக் கொள்வார்.
- சிவன் கோவிலில் நெய் தீபம் இடுதல். படுக்கை அறையின் வட கிழக்கு பகுதியில் ஒரு பாத்திர நீரில் உப்பு இட்டு வைக்கவும். தினமும் தண்ணீர், உப்பு மாற்ற வேண்டும்.
- கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிவகை செய்யும் சேலம் கலெக்டர் கார்மேகம் பேச்சினார்.
- “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சேலம்:
தமிழக முதல்- அமைச்சர் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, இன்று சேலம் அம்மாப்பேட்டையில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து நான் முதல்வன் "கல்லூரி கனவு " எனும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தினை வெளியிட்டார்.
இதையடுத்து கலெக்டர் கார்மேகம், பேசியதாவது-
சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்ற 1,600 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நான் முதல்வன் "கல்லூரி கனவு" எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா விஜயக்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.






