என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 18 மாணவ-மாணவிகள் தேர்வு
Byமாலை மலர்24 July 2022 7:07 AM GMT (Updated: 24 July 2022 7:09 AM GMT)
- வட்டார அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 18 மாணவ-மாணவிகள் தேர்வு நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. வட்டார அளவில் நடை பெற்ற இப்போட்டியில் 6 மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 7 உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 13 நடுநிலைப்பள்ளி உள்பட 26 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 64 மாணவர்கள், 51 மாணவிகள் பங்கேற்றனர்.
சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு 3 பிரிவு களாவும், மாணவிகளுக்கு 3 பிரிவுகளாகவும் போட்டி நடைபெற்றது.
இதில் தேர்வான 18 மாணவ-மாணவிகளும் சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X