என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்: 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை

- கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
- பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தற்காலிக ஆசிரியராக மோகன்(36) என்பவர் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் பிரம்பால் அடித்ததாக தெரிகிறது. இதில் கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதுபற்றி யாரிடமும் கூறவேண்டாம் என்று மாணவரிடம் ஆசிரியர் மோகன் சொன்னதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்றுகாலை மாணவனின் கை, காலில் வீக்கம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மோகனி டம் விசாரித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவா தத்தில் அவர்கள் ஆசிரியர் மோகனை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் ஆசிரியர் மோகனை மீட்டனர். தாக்குதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து மோகன் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வகுப்பில் பாடம் நடத்தும் போது மாணவர் குறுக்கிட்டு சந்தேகம் கேட்டதாலும் அறிவியல் பாடத்தில் குறிப்பு எடுக்க சொன்னபோது புரியவில்லை என்று கூறியதாலும் மாணவரை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் வைலட்மேரி இசபெல்லா தலைமையில் கல்வி அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை கிராமமக்கள் மற்றும் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இன்று 2-வது நாளாக பள்ளியில் விசாரணை நடந்து வருகிறது. விசார ணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
