search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே    டிராக்டர் மோதி 8-ம் வகுப்பு மாணவன் சாவு
    X

    தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதி 8-ம் வகுப்பு மாணவன் சாவு

    • இவரது மகன் நேதாஜி (14). இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    • உடையனாச்சி கிராமத்தில் இருந்து புது உச்சிமேடு கிராமத்தை நோக்கி சென்ற டிராக்டர் நேதாஜி மீது மோதியது

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 43). இவரது மகன் நேதாஜி (14). இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே விளை யாடிக் கொண்டிருந்தார். அப்போது உடையனாச்சி கிராமத்தில் இருந்து புது உச்சிமேடு கிராமத்தை நோக்கி சென்ற டிராக்டர் நேதாஜி மீது மோதியது. ,இதி ல் பலத்த காயம் அடைந்த நேதாஜியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாண வன் நேதாஜி நேற்று இறந்து போனார் இதுகுறித்து அவரது தாய் கொடிபவுனு கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×