search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவன் தற்கொலை - விரும்பிய பாடத்தை படிக்க முடியாததால் விபரீத முடிவு
    X

    கோப்புபடம்.

    பிளஸ்-2 மாணவன் தற்கொலை - விரும்பிய பாடத்தை படிக்க முடியாததால் விபரீத முடிவு

    • ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது.
    • மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி. பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் வெள்ளகோவிலில் உள்ள தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகின்றார். இவரது மகன் சிவின்(வயது 17). 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார், தற்போது ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது. அதற்கு இவர்களது பெற்றோர் இந்த படிப்பு படிப்பதற்கு ரூ.72 ஆயிரம் செலவாகும்.அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இந்த படிப்பிற்கு எந்த அளவுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் என்பது தெரியவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் தான் படிக்க விரும்பிய பாடத்தில் சேர முடியாது என நினைத்து மனவிரக்தியில் சிவின் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது மாணவன் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×