search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கு போட்டு தற்கொலை"

    • தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்
    • தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், குதிரை க்கல்மேடு, கோனேரி ப்பட்டி பிரிவு, சாயபு தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் தாண்டவன் (47). குதிரைக்கல் மேடு கதவணை மின் நிலையத்தில், மின்சா ர்த்துறையில் ஒயர்மே னாக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி சர ஸ்வதி (38). இவர், அப்பகு தியில் உள்ள தோட்டங்களில் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருவாராம். இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரி யில் படித்து வருகின்றனர். தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல சரஸ்வதி தோட்ட வேலை க்கு சென்று விட்டாராம். சுமார் 10.30 மணியளவில் தாண்டவ னின் தாய் பழனியம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வெளியில் சென்று விட்டு வந்த தாண்டவன் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.

    உடனடியாக பழனி யம்மாள் தனது மருமகள் சரஸ்வதி வேலை செய்யும் இடத்துக்குச் சென்று அதுகுறித்து கூறியுள்ளார்.

    இருவரும் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்த போது தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தாண்டவனை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே தாண்டவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அம்மா பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.

    தற்கொலை

    இந்த நிலையில் மாரிமுத்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது . ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்த மாரிமுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாரிமுத்து தற்கொலையில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.
    • விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

    ராசிபுரம்:

    நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் - தமிழரசி தம்பதியின் மகள் தீபலட்சுமி (28). விஜய், தீபலட்சுமி இருவரும் நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது இருவரும் காதலித்து 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சர்வேஸ்வரன் (5), நிதிலேஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    தற்கொலை

    நேற்று முன்தினம் விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து விஜய் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து பார்க்கச் சொல்லி உள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த போது தீபலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், விஜய் மற்றும் நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபலட்சுமியின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தீபலட்சுமியின் தாயார் தமிழரசி நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீபலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆன 6 வருடங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    • பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவி துளசிமணி வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பழனிச்சாமி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரப்பன் (45). பரோட்டா மாஸ்டரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
    • கந்தமலை முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரப்பன் (45). பரோட்டா மாஸ்டரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மாரப்பன் நேற்று மதியம் அந்தப் பகுதியில் உள்ள கந்தமலை முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரப்பனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார்.
    • பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெகு நேரமாகியும் பழனியாண்டி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர்.

    அப்போது பழனியாண்டி வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பரமத்தி போலீசாருக்கும், அவரது மகள்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பழனியாண்டியின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேச்சேரி அருகே திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி காளிகவுண்டனூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 28). இவருக்கும், தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகள் சந்தியா (28) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காளிகவுண்ட னூரில் வசித்து வந்தனர்.

    கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குளி மாகொல்லை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 46). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுதீர்நாத் (17). திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சுதீர் நாத் உடை மாற்ற செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென் றுள்ளார். பின்னர் வெகுநேர மாகியும் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்த கதவை தட்டியுள்ளனர்.

    தூக்குப்போட்டு தற்கொலை வெகு நேரமாகியும் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சுதீர்நாத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

    இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதபடி அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திம்மாம் பேட்டை போலீசார், மாண வனின் உடலை பிரேத பரி சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, மாணவனின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின்விசிறியில் தூக்குபோட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
    • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே புதுவிளை சானல் கரையில் சேர்ந்தவர் டேவிட் ராஜ் (வயது 45). இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று இரவு மகன் தீபக் (14) அருகே உள்ள ஒரு கோவில் திருவிழா பார்க்க வேண்டும் என்று தனது தாயிடம் கூறியதாகவும், ஆனால் தாயார் போக வேண்டாம் என்று கூறியதாக கூறப்படு கிறது.

    இதனையடுத்து தீபக் அறையில் சென்று உள்பக்கம் கதவை பூட்டி விட்டார். சிறிது நேரம் கழித்து தாயார் கதவை திறக்க முயன்றபோது திறக்க முடியாது சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்குபோட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    உடனே அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று கூறினர்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் திருபன் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்.
    • இதனால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம். சேவகனுர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன். சரண்யா தம்பதியரின் மகன் திருபன் (15) என்பவர் கே ஆர் தோப்பூர் அரசு மேல்நிலைபள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் திருபன் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது பெற்றோர் வெளி யில் சென்று விட்டதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தனது தாயின் சேலையால் தூக்கிட்டுள்ளார்.

    சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த தாய் உள்ளே சென்ற போது மாணவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்ச லிட்டுள்ளார் .இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மணிமேகலை (வயது 28). கரகாட்டம் ஆடும் கலைஞரான இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது.
    • இதனால் கரகாட்டத்திற்கு சென்று ஆட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் சுண்ணாம்பு சூலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மணிமேகலை (வயது 28). கரகாட்டம் ஆடும் கலைஞரான இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கரகாட்டத்திற்கு சென்று ஆட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த மணிமேகலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீஸ் சார் மணிமேகலையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது.
    • காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி. மேட்டுப்பாளையம் வெங்கம்மேடு, நேரு தெருவை சேர்ந்தவர் அருள்குமார். கடந்த நாலு வருடங்களுக்கு முன்பு காமாட்சி (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது. இதற்கு சிகிச்சைக்காக அருள்குமார் தான் வேலை பார்க்கும் கடையில் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    வீட்டில் இருந்த காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காமாட்சி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×