search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
    X

    பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

    • தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குளி மாகொல்லை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 46). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுதீர்நாத் (17). திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சுதீர் நாத் உடை மாற்ற செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென் றுள்ளார். பின்னர் வெகுநேர மாகியும் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்த கதவை தட்டியுள்ளனர்.

    தூக்குப்போட்டு தற்கொலை வெகு நேரமாகியும் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சுதீர்நாத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

    இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதபடி அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திம்மாம் பேட்டை போலீசார், மாண வனின் உடலை பிரேத பரி சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, மாணவனின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×