search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவிலில்"

    • குழந்தை திருமணம் செய்து மீட்கப்பட்டவர்
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார். பெற்றோர் விருப்பத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிறுமிக்கு 18 வயது நிரம்பாமல் திருமணம் நடைபெற்றதாக கூறி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதன் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி விசாரணை மேற்கொண்டார். அப்போது 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து கொடுத்த தால் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மற்றும் சிறுமியின் தாயார், வாலிபரின் தந்தை ஆகியோர் மீது கன்னியாகுமரி மகளிர் போலீசில் சமூகநலத்துறை அதிகாரி புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி இருளப்ப புரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வல்லன் குமாரன் விளையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி மாலையில் காப்பகத்திற்கு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    • குழந்தைகளுடன் வந்தவர்கள் பரிதவிப்பு
    • பயணச்சீட்டை பெற்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது பெண்களுக்கான இலவச அரசு பேருந்து வசதி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், அதற்கென இயக்கப்படும் பிரத்தியேக அரசு பேருந்துகளில், பிரத்யேகமாக வழங்கப்படும் பயணச்சீட்டை பெற்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துகளில் இலவ சமாக பயணம் செய்வதன் மூலம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தங்களுக்கு மிச்சமாவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் பெண் களுக்கான இலவச அரசு பேருந்து வசதி திட்டத்தில் ஏராளமான பஸ்கள் இயக்கப் படுகின்றன. மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும் இலவச பஸ்கள் இயக்கப்படுவதால், கிராமப்புறம் நகர்ப்புறம் என அனைத்து பகுதி பெண்களும் பயனடைந்து வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பஸ்களில் ஏராளமான பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பயணிக்கின்றனர். காலை முதல் இரவு வரை பெண்களுக்கான இலவச பஸ்கள் தொடர்ந்து இயக்கப் படுவதால் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு செல்பவர்கள், பணி நிமித்தமாக செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது.

    பெண்களுக்கான இலவச பஸ்களில் ஆண்க ளும் பயணிக்கலாம். இந்த பஸ்களில் மற்ற வகை பஸ்களை காட்டி லும், கட்டணம் குறை வாகும். இதனால் ஆண்களும் இந்த பஸ்களில் அதிகளவில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் நாகர்கோவிலில் பெண்களுக்கான இலவச பஸ் ஒன்று பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்ட சம்பவம் நடந்துள்ளது.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரிய பெருமாள்விளை காலனிக்கு தடம் எண் 36பி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் அந்த பஸ், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார், செட்டிகுளம் ஜங்ஷன், இந்து கல்லூரி, பீச் ரோடு, இருளப்ப புரம், வல்லன் குமாரன்விளை, என்.ஜி.ஓ. காலனி, மேல கிருஷ்ணன்புதூர், புத்தளம் வழியாக அரிய பெருமாள்விளை காலனிக்கு சென்று வருகிறது.

    அந்த பஸ் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் வழக்கம் போல் புறப்பட்டது. அந்த பஸ்ஸில் பீச் ரோடு, இருளப்ப புரம், என்.ஜி.ஓ. காலனி, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ஏராளமான பெண்கள் பயணித்தனர். ஒரு சிலரை தவிர அனைவருமே பெண் பயணிகள் ஆவார். சில பெண்கள் தங்களது குழந்தைகளுடன் அந்த பஸ்ஸில் சென்ற னர்.

    அவர்களில் கைக் குழந்தை களுடன் வந்த பெண்களும் இருந்தனர். அனைவருக்குமே கண்டக்டர் பயணச்சீட்டை கொடுத்தார். பெண் பயணி களுக்கு இலவச பயண டிக்கெட்டை வழங்கினார். இந்நிலையில் அந்த பஸ் செட்டிகுளம் ஜங்ஷனை தாண்டி சென்று கொண்டி ருந்தது. அப்போது இந்து கல்லூரி அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அந்த பஸ் நிறுத்தப்பட்டது.

    பணிமனைக்குள் பஸ் செல்வதாக கூறி, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பணிமனைக்கு வெளியே இறக்கி விடப்பட்டனர். இந்த பஸ்சுக்கு பதிலாக மாற்று பஸ் மாலை 4 மணிக்கு பிறகு வரும் என்றும், அதுவரை பணி மனைக்கு வெளியே காத்திருக்குமாறும் பயணிகளிடம் கண்டக்டர் கூறினார்.

    பஸ் புறப்படும் போது எதுவும் கூறாமல், அனை வரையும் ஏற்றுக்கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு பயண டிக்கெட்டையும் கொடுத்துவிட்டு, நடுவழியில் இறக்கி விட்டதால் அந்த பஸ்ஸில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திடீ ரென நடுவழியில் இறக்கி விட்டால் தங்களது ஊருக்கு எப்படி செல்வோம் என்று சில பயணிகள் கண்டக்டரிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் பஸ்ஸில் ஒரு போல்ட் மாட்ட வேண்டி இருக்கிறது. ஆகவே அந்த பஸ்சை தொடர்ந்து இயக்க முடியாது. மாற்று பேருந்து வரும்வரை காத்திருக்குமாறு கண்டக்டர் கூறியிருக்கிறார். அரை மணி நேரத்திற்கு மேல் எவ்வாறு நடுவழியில் காத்திருப்பது என்று பயணிகள் கேட்டனர். அதற்கு கண்டக்டர் வேறு வழியில்லை எனவும், விரும்பினால் அண்ணா பஸ் நிலையத்திற்கு மாற்று பஸ்சில் ஏற்றி விடுவதாக தெரிவித்திருக்கிறார்.

    ஏறிய இடத்திற்கே மீண்டும் ஏற்றி விடுவதாக கண்டக்டர் கூறியதால், பயணிகள் என்ன செய்வ தென்று தவித்தபடி நின்றனர். அந்த பஸ்ஸில் தான் சென்றாக வேண்டும் என்ற நிலையில் இருந்த பயணிகள், பணிமனைக்கு வெளியிலேயே வெகு நேரம் காத்திருந்தனர். அருகில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள் அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் உள்ளிட்ட வேறு பேருந்துகளில் ஏறிச் சென்றனர். அரசு பஸ்களை பொறுத்தவரை, நடுவழியில் பழுதாகி நின்றால் செல்ல வேண்டிய இடத்திற்கு உடனடி யாக மாற்று பஸ் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள்.

    ஆனால் பணி மனைக்கு செல்லும் ஒரு பஸ்ஸில், பயணிகளை பயணச் சீட்டு கொடுத்து ஏற்றுக்கொண்டு சென்றது மட்டுமின்றி, அவர்களை நடுவழியிலேயே இறக்கி விட்டு காத்திருக்கு மாறு கூறிய சம்பவம் அந்த பஸ்ஸில் சென்ற பயணி கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யது. இலவச பஸ் என்பதால் பயணிகளை இவ்வாறு நடத்து கிறார்கள் என்று பெண்கள் பலர் புலம்பினர். பெண்களுக்கான இலவச பஸ்ஸில் பயணிப்போருக்கு இதுபோன்று அசவுகரியம் நடக்காத வகையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க,
    • விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி



    நாகர்கோவில் : குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஒழுகினசேரியில் அமைந் துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் எனது தலைமையில் நடக்கிறது. நாகர்கோவில் மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இளைஞர் மாநில துணை செயலாளர்கள் இன்பாரகு, ஜோயல், அப்துல் மாலிக், இளையராஜா, பிரகாஷ், சீனிவாசன், ராஜா, பிரபு கஜேந்திரன், ஆனந்தகுமார் ஆகிய துணை செயலாளர்கள் இளைஞரணி பொறுப்பு களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணலை நடத்துகிறார்கள். எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான வயது சான்றிதழுடன் கலந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் செய்து வருகிறார்.

    எனவே நேர்காணலுக்கு விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு ஆயுர்வேத கல்லூரியின் லேப்-டெக்னீசியன் சிறையில் அடைப்பு
    • தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டா ரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவி கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவ படிப்பு முடித்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக அங்கேயே பணியாற்றி வருகின்றனர். இதுபோக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏராளமான டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 35 வயதான பெண் டாக்டர் ஒருவருக்கு, ஆஸ்பத்திரியின் உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) ஆன்டனி சுரேஷ்சிங் (வயது 52) என்பவா் தொல்லை கொடுத்தார். மேலும் அவர், தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார். அதுபற்றி சம்பந்தப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்டனி சுரேஷ்சிங்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படிக்கும் மேலும் 2 மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. அதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேரும் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனத்துக்கு ஆன்லைன் மூலமாக தனித் தனியாக 2 புகார் மனு அனுப்பியுள்ளனர்.

    அந்த மனுக்களில், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் சுசீந்திரம் காக்கமூர் பகுதியை சேர்ந்த வைரவன் (வயது 35) என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் புகார் மனு மீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தர விட்டார். அதன்பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து வைரவனை கைது செய்தனர்.

    இதுபற்றி போலீசார் கூறுகையில், "கைதான வைரவன் மீது 2 மருத்துவ மாணவிகள் புகார் அளித்துள்ளனர். தங்களை பாலியல் ரீதியாக உரசியதாக புகாரில் கூறியி ருக்கிறார்கள். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் வைரவன் 2 மாணவிகளுக்கும் பாலி யல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. எனவே அவர் கைது செய்யப்பட் டுள்ளார்" என்றனர்.

    இதனையடுத்து கைதான வைரவனை போலீசார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நாகர்கோவில் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வைரவன் நாகர்கோவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வைரவனுக்கு நாளை மறுநாள் (27-ந்தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஒரு நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள் ளையை போலீசார் கைது செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓராண்டுக்கு பிறகு தனிப்படையினர் பிடித்தனர்
    • 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே தம்மத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரை கடந்த 2011-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது சகோதரர் பாபு, அய்யப்பன் ஆகியோர் கொலை செய்தனர். இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரித்து நீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு மணிகண்டன், பாபு, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து 3 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் இவர்கள் மேல் முறையீடு செய்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுதலையா னார்கள். இந்த நிலையில் 2022-ம் ஆண்டு கீழ் கோர்ட் இவர்களுக்கு விதித்த தண்டனையை ஐகோர்டு உறுதி செய்தது. மணிகண்டன், பாபு, அய்யப்பன் 3 பேரும் 2 வார காலத்திற்குள் சரணடைய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் அய்யப்பன் மட்டும் சரண் அடைந்தார். மணிகண்டன், பாபு இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பாபுவை போலீசார் கைது செய்தனர்.

    தலைமுறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஒரு ஆண்டுகளுக்கு பிறகு தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பெண் கிராம நிர்வாக அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு
    • இரட்சணியசேனை ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறார்.

    நாகர்கோவில்:

    ஈசாந்திமங்கலம் அருகே நாவல்காடு துர்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 62). இவர் இரட்சணியசேனை ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவில் ஜே.எம்.-2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் இரட்சணியசேனை ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கும் எறும்புக்காடு தம்மத்துகோணத்தை சேர்ந்த ரகுநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புத்தன்துறை பகுதியை சேர்ந்த தாமஸ் பெக்கெட் அவருக்கு சொந்தமான இடம் தேரேகால்புதூர், கோதை கிராமம் பகுதியில் உள்ளதாகவும், அந்த நிலத்தை குறைந்த விலையில் வாங்கி தருவதாகவும் என்னிடம் கூறினார்.

    தாமஸ்பெக்ெகட்டிடம் சென்று கேட்டபோது ரகுநாதனிடம் பேசிக்கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து ஒரு சென்ட் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீதம் பேசி முடிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.5 லட்சம் பணம் கொடுத்தேன். அதன்பிறகு ரகுநாதன் அவரது மனைவி உஷா தேவி, கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருவதாக என்னிடம் கூறினார். கரம், சிட்டா, பட்டாவை இலவசமாக எடுத்து தருவதாக என்னை நம்ப வைத்து மேலும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த இடத்தை கிரயம் செய்து தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டேன்.

    ஒரு லட்சத்து 50 ஆயிரம் திரும்பிக்கொடுத்தனர். அதன்பிறகு மீதமுள்ள ரூ.9 லட்சம் பணத்தை திரும்ப கேட்டேன். அப்போது வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவதாக கூறினார். ஆனால் ரூ.50 ஆயிரத்தை மட்டும் செலுத்தி விட்டு மீதி தொகையை கொடுக்கவில்லை. இதுதொடர்பாக கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், நம்ப வைத்து ஏமாற்றியதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கோட்டார் போலீசார் ரகுநாதன் அவரது மனைவி உஷா தேவி மற்றும் தாமஸ் பெக்கெட் மீது மோசடி உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • 2-ந் தேதி நடக்கிறது.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வள்ளலார் பேரவையில் திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாளின் 201-வது அவதார தினவிழா வருகிற 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்று பேசுகிறார். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அருட்ஜோதியை, மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஏற்றி வைக்கின்றனர்.

    போலீஸ் துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார், சந்திர சேகரன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பாரத்சிங் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    • அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு ஆவின் நெய் விலை ஏற்றப்பட்டுள்ளது

    நாகர்கோவில் : அண்ணா பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் அக் ஷயா கண்ணன், ஆரல்வாய் மொழி பேரூராட்சி கவுன்சிலர் நவமணி, தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ரபீக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதைத்தொடர்ந்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மோசமா கியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடங்கி யதில் இருந்து நெய் இருந்தாலும் சரி, எண்ணெய்யாக இருந்தாலும் சரி விலை ஏற்றுவதில் முதல்-அமைச்சருக்கு நிகர் எவரும் கிடையாது.

    ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு ஆவின் நெய் விலை ஏற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் மிரட்டி பாலை ஆவினுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையில் பால் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஆவினை மூடுவதற்கான வழிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்த பென்ஷன் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் இதுதொடர்பாக தெளிவாக சொல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ராகவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் சவுமியா, துணை செயலாளர் ரூபா, பொதுக்குழு உறுப்பினர் சகாய டெல்வர், துணை செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தினேஷ் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • எச்எம்எஸ் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
    • மாநில செயல் தலைவர் எம்.சுப்பிரமணி பிள்ளை வரவேற்றார்.

    நாகர்கோவில்:

    ஹிந்த் மஸ்தூர் சபா (எச்எம்எஸ்) வின் 75-ம் ஆண்டு பவள விழா மாநாடு இன்று நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நடந்தது. எச்எம்எஸ் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில செயல் தலைவர் எம்.சுப்பிரமணி பிள்ளை வரவேற்றார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எச்எம்எஸ் தேசிய பொதுச்செயலாளர் ஹர்பஜன்சிங் சித்து கலந்துகொண்டு, மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார். தேசிய பொருளாளர் போஸ்லே, தேசிய செயலாளர்கள் சம்பா வர்மா, முகேஷ் ஹால்வ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாநாட்டில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    மாநாட்டில் உணவு மருந்துகள் வேளாண் இடுபொருட்கள் மற்றும் எந்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைக்க வேண்டும். மூத்த குடிமக்கள், பெண்கள் மாற்றத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு கொரோனாவால் பறிக்கப்பட்ட ரெயில்வே சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும். இலவச கல்வி, சுகாதாரம், தண்ணீர் மற்றும் உடல்நல உரிமை அனைவருக்கும் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். தேசியக்கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும்.

    அனைவருக்கும் வீடு வழங்குப்படு வதை உறுதிப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை உடனே நிறுத்த வேண்டும். மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும். அனைத்து பண்ணை க்குடும்ப ங்களையும் கடன் சுமையிலிருந்து விடுவிக்க விரிவான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவிக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு நலவாரியத்தில் இருந்து நிதி பங்களிப்போடு இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி கிராமபுற வேலை உறுதி சட்டத்தின்படி ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்கும் வகையில் திட்டத்தை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்டத் தொ குப்பு களை யும் திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • திருமாவளவன் எம்.பி. இன்று மாலை திறந்து வைக்கிறார்
    • மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார்.

    நாகர்கோவில்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே சண்முகா தெருவில் இன்று (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார். புதிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திறந்து வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கம் முன்பு மணிப்பூர் மாநில மக்களுக்கு நீதி வழங்கக்கோரி நடைபெறும் சிறப்பு மாநாட் டில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை நாகர்கோவில் வருகிறார். அவருக்கு மாநகர் மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. புதிய அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும் அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

    • குடிபோதையில் மாணவன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
    • இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் மாணவர்கள் அதிவேகமாக போக்குவரத்து விதி முறையை மீறி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த னர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் வைத்திருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் சோதனை யில் மாணவர்கள் பலருக்கும் லைசென்ஸ் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. 14 பேர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கினர். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி மொழியும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். போலீசார் சோதனை மேற்கொண்டபோது மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக் கிளையும் பறிமுதல் செய்தனர்.

    குடிபோதையில் இருந்த மாணவன் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டி வந்ததாக 3 பேர் சிக்கினார்கள். அவரது பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரைகளை வழங்கினார்கள்.

    இந்து கல்லூரியில் மட்டும் நடந்த சோதனையில் 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 16 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மூலமாக ரூ.1.50 லட்சம் அபராதம் வசூல் ஆனது. இதேபோல் வடசேரி, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் 238 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த இருசக்கர வாக னங்களை போலீசார் பூட்டு போட்டு பறிமுதல் செய்த வுடன் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோணம் பாலி டெக்னிக் கல்லூரி பகுதியில் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது இந்து கல்லூரி பகுதியிலும் சோதனை நடத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இதனால் காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு புகார்கள் சென்றது.

    ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ராமன் புதூர் பகுதியில் பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் கேப் ரோடு பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் நோக்கி வந்த பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தனர். உடனடியாக அந்த பஸ்களை போக்கு வரத்து பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    படியில் பயணம் நொடியில் மரணம். எனவே மாணவர்கள் கவனமாக பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உங்களை படிப்பதற்காக கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கி றார்கள். நீங்கள் பஸ்களில் வீட்டிற்கு செல்லும் போதும் பள்ளிக்கு வரும்போதும் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்வது நல்லதாகும் என்று அறிவு ரைகளை கூறினார்கள்.

    ஒரு சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இரு ந்ததையடுத்து மாணவர்களை அந்த பஸ்சிலிருந்து இறக்கி பின்னால் வந்த பஸ்களில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ×