search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை"

    • குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.
    • உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    சென்னை:

    காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளான 50 வயது நோயாளி ஒருவர், வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் பெருமூளை ரத்த நாள அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த 43 வயது பெண் ஒருவர் அண்மையில் மூளைச் சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.

    அங்கிருந்து 2 மணி நேரத்துக்குள் சென்னைக்கு நுரையீரல் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூரில் இருந்து வடபழனி வரை போக்குவரத்து தடைகளோ, நெரிசலோ இல்லாமல் உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    இதன் காரணமாக, விரைந்து கொண்டுவரப்பட்ட நுரையீரல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
    • புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    ரெயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 20-ந்தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவர்களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் கும ரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 202 ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால், அது இந்த வழக்கை பயனற்றதாக்கி விடும் என்பதால், புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட உள்ளவர்களின் தேர்வு நடவடிக்கைகள் 2023-ம் ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால், அவர்களை நீக்கி விட்டு, புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரெயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக கூறினர்.

    பின்னர், புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மறுநியமனம் வழங்கினால், அதன் மூலம் அவர்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • தாயார்தோப்பு கிராமம் மற்றும் அரசு புறம் போக்கு நிலங்களில் பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க குறைந்தது 2 முதல் 3 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

    தென்காசி:

    வீரகேரளம்புதூரில் தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந் நிலையில் வீரகேரளம்புதூர் அருகே உள்ள தாயார்தோப்பு கிராமம் மற்றும் மாணவர் விடுதி அருகில் உள்ள அரசு புறம் போக்கு நிலங்களில் பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க குறைந்தது 2 முதல் 3 ஏக்கர் நிலம் தேவைப்படும். தாயார்தோப்பு மற்றும் அரசு மாணவர் விடுதி அருகில் உள்ள இடங்கள் குறைவான அளவில் உள்ளது. எனவே இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பேசி இடங்களை பெற்று தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரி பேச்சிமுத்து, வக்கீல் சுப்பையா, துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் இசக்கிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி, கிராம உதவியாளர் ஜேம்ஸ்ராஜ், வெற்றிவேலன், பேச்சிமுத்து உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    • அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
    • தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும்.

    சென்னை:

    பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    புளு வைரஸ்களால் பரவும் இன்புளுயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோ தனை செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம் மருத்துவா்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள் பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்று நோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு 'ஓசல்டா மிவிா்' எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

    அதேபோன்று தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 'ஓசல்டாமிவிா்' உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

    மருத்துவத்துறையினா், சுகாதாரக் களப்பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக்கவசங்களை அணிய வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனையின் பின்புறம் பயன்பாட்டில் இல்லாத பழைய பிணவறையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், காலா வதியான மருத்து வமனை பொரு ட்கள். மருத்துவமனையில் தேவையற்ற பொருட்களை வைத்திருந்த அறை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.அரசு மருத்துவமனை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள்
    • ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனை கள் செய்துள்ளனர்

    நாகர்கோவில், நவ. 22-

    டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை 58-வது ஆண்டுவிழா கொண்டா டப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் தேவ பிரசாத் ஜெயசேகரன், சாபு சேகரன், ரெஞ்சித் ஜெய சேகரன் தெரிவித்த தாவது:- மருத்துவமனையில் விபத்து காப்பு பிரிவு, இரு தயப்பிரிவு, மகளிர் நலம் மற்றும் மக ப்பேறு பிரிவு, உடல் எடை குறைக்கும் பிரிவு, சர்க்கரை நோயா ளிகள் பிரிவு, செயற்கை கருத்தரித்தல் பிரிவு, பிசியோ தெரபி பிரிவு, சிறுநீரக பிரிவு என எண்ணற்ற பிரிவுகள் குமரி மாவட்டம் மற்றும் இல்லாமல் அண்டை மாவ ட்டம், மாநில மக்களும் பயன் பெறுகின்ற னர்.சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள், ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனைகள் செய்துள்ளனர் என அவ ர்கள் தெரிவித்தனர். விழா வில் சிறப்பு விருந்தி னராக முன்னாள் இந்திய தபால் துறை ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர், கவுரவ சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்நாடு காவ ல்துறை தலைவர் சைலே ந்திர பாபு, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆசீர் பாக்கிய் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சில துறைகள் புதிதாக திறக்கப்பட்டது மற்றும் சில துறைகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. மருத்துவர்கள் நினோ ஜார்ஜ், பாலா வித்யா சாகர், திரவியம் மோகன், சந்திர சேகர் இம்மானு வேல், தீபக் டேவிட், கீதா ஆகியோர் அவரவர் துறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

    • டாக்டர். ஐசக் சுந்தர்சென் தகவல்
    • நோயாளிகள் வந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் டாக்டர் ஐசக் விபத்து மற்றும் எலும்பு முறிவு மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. தற்போது இங்கு அதி நவீன சிகிச்சை மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறை புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் தலை மை மருத்துவ நிபுணருமான டாக்டர். ஐசக் சுந்தர்சென் தெரிவித்ததா வது:-

    டாக்டர் ஐசக் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு, தோள்பட்டை மூட்டு மற்றும் கை முழங்கை மூட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் துபாய், ஓமன், மாலத்தீவு போன்ற நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதற்கான அல்ட்ரா மாட்யூல் கிருமி தொற்றினை தடுக்கும் முறையில் அமைந் துள்ள லேமினார் பிலோ அறுவை சிகிச்சை அரங்கு களுடன் மருத்துவ குழுவின ரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள், அறுவை சிகிச்சைக்குப் பின் நோயா ளிக்கு வலி இல்லாமல் இருக்க நெர்வ் பிளாக் முறை கையாளப்பட்டு வரு கிறது. நோயாளிகள் அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே வலிகள் எதுவும் இல்லாமல் எழுந்து நடக்கக் கூடிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறையான பயோ பாண்ட்சிவ பினிஸ் தி நோ அலர்ஜினீ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கான நவீன கருவி வரவழைக்கப் பட்டு இந்த சிகிச்சை முறை செய்யப்பட்டு வருகிறது. இந்த நவீன சிகிச்சை மூலம் நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்படாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது
    • தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 44 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் இன்று காலை என்.எல்.சி. பொதுமருத்துவமனை முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-என்.எல்.சி. நிறுவனம் தற்போது மருத்துவமனையில் பணி செய்வதற்காக நேரடியாக ஆட்களை நியமனம் செய்ய எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது. மீதி பேருக்கு வரவில்லை. ஆகவே அதில் எங்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்து விட்டு அதன் பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்து 4-ந்தேதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.

    தொடர் போராட்டம்...அப்போது எங்களிடம் நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் நாங்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏவிடமும் நேரில் சென்று இந்த பிரச்னை தொடர்பாக மனு கொடுத்ேதாம். ஆனால் நாங்கள் கொடுத்த மனுவிற்கு இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் நாங்கள் மீண்டும் இன்று காலை மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்கும்வரை இந்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

    நிர்வாக இயக்குனருக்கு டாக்டர் பட்டம்

    நாகர்கோவில், செப்.30-

    பார்வதிபுரத்தில் அமைந் துள்ள கிருஷ்ண குமார் எலும்பு சிகிச்சை மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு னரும், மூத்த அறுவை சிகிச்சை நிபுணரு மான டாக்டர் கிருஷ்ண குமாரின் மருத்துவம் மற்றும் கல்வி, தொழில் சார்ந்த செயல் பாடுகளை அங்கீக ரித்து, கவுரவப்படுத்தி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்க லைக்கழகம் கவுரவ பேராசிரியர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

    பட்டம் பெற்ற டாக்டர் கிருஷ்ணகுமாருக்கு சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
    • காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    ஆனால் பெயரளவிற்கே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் மற்றும் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்தித்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலையைப் பற்றி எடுத்து கூறினார்.

    தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியான பிறகு, அந்த நடைமுறைகள் செயல்படுத்த மூன்று மாத காலமாகும் அதன் பின்னரே தாலுக்கா மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் முருகேசன் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக சங்கம் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகளிடம் இதனை தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக வியாபாரிகள் சங்கத்தினர் திட்டமிட்டபடி வரும் 3-ந்தேதி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர கோரி கடையடைப்பு போராட்டமும் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

    ×