search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "continuous struggle"

    • ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:- மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக விவசாயிகள், தொழிலாளா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவது, வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை வழங்க மறுப்பது ஆகியவை சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. ஆகவே, பாஜக., அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் சென்னைஆளுநா் மாளிகை முன்பாக வருகிற 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் தொடா் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க வேண்டும். மேலும், இப்போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூா் குமரன் சிலை முன்பாக 28-ந் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா். இதில் ஏஐடியூசி., சிஐடியூ., எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது
    • தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 44 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் இன்று காலை என்.எல்.சி. பொதுமருத்துவமனை முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-என்.எல்.சி. நிறுவனம் தற்போது மருத்துவமனையில் பணி செய்வதற்காக நேரடியாக ஆட்களை நியமனம் செய்ய எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது. மீதி பேருக்கு வரவில்லை. ஆகவே அதில் எங்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்து விட்டு அதன் பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்து 4-ந்தேதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.

    தொடர் போராட்டம்...அப்போது எங்களிடம் நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் நாங்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏவிடமும் நேரில் சென்று இந்த பிரச்னை தொடர்பாக மனு கொடுத்ேதாம். ஆனால் நாங்கள் கொடுத்த மனுவிற்கு இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் நாங்கள் மீண்டும் இன்று காலை மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்கும்வரை இந்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

    • காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் நேற்று இரண்டாம் நாளாக மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்த முடிவை கண்டித்து, காரைக்கால் மாவட்ட மின் துறை ஊழியர்கள், நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊழியர்களின் போராட்டத்தால் மின் பழுது பார்த்தல், மின் கட்டணம் கட்டுதல், மின் அளவீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு ஏற்படும் பல பகுதிகளில் பொதுமக்கள் 2 நாட்களாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தத் தொடர் மின்வெட்டை கண்டித்து அம்பகரத்தூர், திருநள்ளார், சேத்தூர், விழுதியூர், நல்லம்பல், திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாம் நாளாக மின் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்ததால் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் தோமாஸ் அருள் வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மின் தடை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காரைக்கால் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர். 

    ×