search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுவாழ்வு"

    • குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.
    • உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    சென்னை:

    காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளான 50 வயது நோயாளி ஒருவர், வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் பெருமூளை ரத்த நாள அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த 43 வயது பெண் ஒருவர் அண்மையில் மூளைச் சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.

    அங்கிருந்து 2 மணி நேரத்துக்குள் சென்னைக்கு நுரையீரல் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூரில் இருந்து வடபழனி வரை போக்குவரத்து தடைகளோ, நெரிசலோ இல்லாமல் உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    இதன் காரணமாக, விரைந்து கொண்டுவரப்பட்ட நுரையீரல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கடந்த 22-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்
    • மகேந்திரனின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டன

    கோவை,

    கோவை பீளமேடு கச்சம்மா நாயுடு வீதியை சேர்ந்தவர் கே.மகேந்திரன்(வயது38).

    இவர் கடந்த 19-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, பீளமேடு எல்லைதோட்டம் அருகே சென்ற போது நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் கடந்த 22-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.

    மகேந்திரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது மனைவி கோகிலா மற்றும் பெற்றோர் முன்வந்தனர்.

    தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுதியுடன் மகேந்திரனின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டன.

    கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், இருதயம் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டன. கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் அனுப்பி வைத்தனர்.

    இவரது உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். இதுகுறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறியதாவது:-

    மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால், அது பலரது உயிரை காப்பாற்ற உதவும்.

    உடல் உறுப்பு தானம் வழங்கிய மகேந்திரன் குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
    • ஆதரவற்ற மனிதர்களை தேடி சென்று முடி வெட்டி, குளிக்க வைத்து அழகு படுத்தி புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.

    இவர் கடந்த 10 ஆண்டுகளாக உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி திரியும் ஆதரவற்றோர் மற்றும் நாகூர் தர்ஹா, நாகப்பட்டினம் புதிய பேரூந்து நிலையம், சாலைகள், இரயில் நிலையங்கள், சுற்றுலாத்தளங்களில் அழுக்கடைந்து, கிழிந்த உடைகளோடு, தாடி, முடி வளர்ந்து கவனிப்பாளர்களற்று அழுக்கடைந்து கிடக்கும் மனிதர்களை நாம் கடந்து சென்று இருப்போம்.

    ஆனால் கலைவாணனோ அப்படிப்பட்ட மனிதர்களை தேடி சென்று அவர்களுக்கு தானே முடி வெட்டி, தாடி, மீசை எடுத்து, குளிக்க வைத்து அழகு படுத்தி அவர்களுக்கு புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.

    மேலும் உறவுகளால் கைவிடப்பட்ட வர்களையும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களையும் அரவணைத்து அவர்க ளுக்கு மறுவாழ்வுஅளித்து பராமரித்து வருகிறார்.

    இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இது போன்றவர்க ளுக்கு மறு வாழ்வு அளித்துள்ள கலைவாணன் எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி இந்த சேவையை செய்து வருகிறார்.

    உறவுகளால் கைவிடப்பட்டவர்களை மீட்டு அவர்களின் உறவுகளிடம் சேர்ப்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து தொடர்ந்து அவர்களை பராமறித்து தினம் தோறும் உணவளித்து வருகிறார்.

    இதுகுறித்து கலைவாணன் கூறும் போது இது போன்று சாலைகளில் உள்ள மனிதர்கள் ஒருக்காலத்தில் நன்றாக வாழ்ந்து இருக்க கூடியவர்கள்தான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படி இருக்கும் அவர்களைம் சக மனிதர்களாக நினைத்து அரவணைக்க வேண்டும் என்றார்.

    ஆதவறவற்ற மனிதர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் கலைவாணன் செயல் பலராலும் பாராட்டு வருகிறது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில், தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ரூ.25,000 மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில், தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள், பணக்கொடை உள்ளிட்டவை முறையாகவும் தரமாகவும் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். முகாம் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், மின்சார வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து முகாமில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஒவ்வொரு வீடாக சென்று வீடுகளின் தற்போதைய நிலை, கட்டமைப்பு, அவர்களின் உடனடி தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள 106 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 316 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை அறிவித்துள்ளார்.

    அதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து இலங்கை தமிழர்கள் முகாம்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் நகர்புற கட்டமைப்புடன் புதிய வீடுகள் கட்டித்தரபடும் என தெரிவித்தார். மேலும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மேல்நிலை வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் வேளாண் பட்டப்படிப்புகளில் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட உள்ளது. மகளிரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் மணி, துணைத்தலைவர் ரமேஷ் பாபு,மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, வட்டாட்சியர்கள் ,வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ரூ.25,000 மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது .

    • சிவகங்கை மாவட்டத்தில் 13 முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சிவகங்கை

    தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகக் சிறு கூட்ட ரங்கில் நடந்து. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

    பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவா ழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்க ளின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி, அவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதனடிப்படையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் பொது மன்னிப்பில் விடுதலையான 13 முன்னாள் சிறை வாசி களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த உதவித்தொகையை பெறும் பயனா ளிகள், இதன்மூலம் சிறு தொழில்கள் தொடங்கி, நல்லமுறையில் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) சுந்தரராஜ், சிறை மீண்டோர் உதவி சங்கத்தின் செயலாளர் பகீரத நாச்சியப்பன், சிவகங்கை மண்டல நன்னடத்தை அலுவலர் சேதுராமன், நன்னடத்தை அலுவலர்கள் பிரியதர்ஷினி, பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×