search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு"

    • ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
    • 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் GST: வரி அல்ல… வழிப்பறி! என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்" என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், "ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்'' என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார்.

    பேச நா இரண்டுடையாய் போற்றி!

    ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?

    ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டி-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!

    அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?

    1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

    ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.

    ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • ரூ.1,977 கோடியில் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது.
    • மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

    மதுரை:

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.1,977 கோடியில் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசுபொருளாக மாறியது.

    இதற்கிடையே, மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியது. இந்த டெண்டரை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியது. அடிக்கல் நாட்டி 5 ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை மற்றும் சமன்படுத்தும் வேலை நடைபெற்றது.

    இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோமீட்டருக்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

    • இந்திய உணவு சட்டங்களில் ஹெல்த் டிரிங்க்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை
    • இந்திய உணவு சட்டங்களின் கீழ், 'எனர்ஜி டிரிங்க்' என்பது குளிர்பானங்களை தான் குறிக்கிறது

    இந்தியாவில் உள்ள அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும், போர்ன்விட்டா உட்பட அனைத்து பானங்களையும் "ஹெல்த் டிரிங்க்" (Health Drink) என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டுமென ஏப்ரல் 10 ஆம் தேதி மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) நடத்திய விசாரணையின் அடிப்படையில், போர்ன்விட்டா போன்ற பானங்கள் 'ஹெல்த் டிரிங்க் அல்ல" என்று கண்டறியப்பட்டது என்று வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் பால், தானியம் மற்றும் மால்ட் சார்ந்த பானங்களை 'ஹெல்த் டிரிங்க்' (Health Drink) அல்லது 'எனர்ஜி டிரிங்க்' (Energy Drink) என லேபிள் ஒட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியது.

    ஏனென்றால், இந்திய உணவு சட்டங்களில் ஹெல்த் டிரிங்க்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை. மேலும் இந்திய உணவு சட்டங்களின் கீழ், 'எனர்ஜி டிரிங்க்' என்பது குளிர்பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் அல்லாத, சுவை கூட்டப்பட்ட தண்ணீர் சார்ந்த பானங்களைக் குறிக்கிறது.

    தவறான சொற்களைப் பயன்படுத்துவது நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும் என்று FSSAI ஈகாமர்ஸ் தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எனவே, அனைத்து ஈகாமர்ஸ் உணவு வணிக தொழில்முனைவோர்கள் ஹெல்த் டிரிங்க்ஸ் / எனெர்ஜி ட்ரிங்க்ஸ் (Health Drinks/Energy Drinks) பிரிவுகளில் இருந்து இது போன்ற பானங்களை நீக்கி இதைச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தியது.

    கடந்த வருடம், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானமான போர்ன்விட்டா (Bournvita) குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.

    12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த வீடியோவில், போர்ன்விட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த பானத்தைத் தருவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
    • தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிராக பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

    பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.

    அரசியல் சட்டம் 324-வது பிரிவின்படி அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை அமைப்புகளை ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.

    மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களைப் போக்க ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    ஆளும்கட்சியினர் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என தெரிவித்துள்ளது.

    • முதலமைச்சர் ஏற்படுத்திய மகளிருக்கு இலவச பஸ் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் பெண்கள் 25 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
    • கடந்த தேர்தல்களின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

    தென்காசி:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு தீவிர பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். சொன்னதை செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். அதற்கு நீங்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படும். தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முழுமையாக அகற்றப்படும். இதனால் நீங்கள் சுங்கச்சாவடிக்கு கட்ட வேண்டிய கட்டணம் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டியது இல்லை.

    நெல்லை-சங்கரன்கோவில் ரெயில்வே வழித்தடத்தை இணைத்து ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமங்கலம் பகுதிகளை உள்ளடக்கிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். கோவையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் கடையம் பகுதியில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்களின் அன்பை பெற்று அவர்களின் ஆதரவு மூலம் முதலமைச்சர் ஆனவர் தி.மு.க. தலைவர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆனார். பின்னர் அவருக்கே துரோகம் செய்தார்.

    கொரோனா உச்சத்தில் இருந்தபோது தடுப்பூசி செலுத்திக்கொண்டு கோவையில் கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், ஆவின் பால் லிட்டருக்கு 2 ரூபாயும் குறைத்தவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    முதலமைச்சர் ஏற்படுத்திய மகளிருக்கு இலவச பஸ் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் பெண்கள் 25 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் மேற்படிப்புக்காக திராவிட மாடல் ஆட்சியால் செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1000 திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 31 ஆயிரம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இதில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டத்தை தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.

    கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 1 கோடியே 18 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்.

    சென்னை மிச்சாங் புயலின்போதும், நெல்லை, தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பின் போதும், நீட் தேர்வால் 22 மாணவர்கள் இறந்தபோதும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

    கடந்த தேர்தல்களின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

    5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ்க்காக ஒற்றை செங்கலை நட்டு வைத்தனர். அதையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். ஆனால் அதன் பின்னர் பா.ஜ.க. ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் முதலமைச்சர் சென்னையில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என கூறியதுடன் 10 மாதத்தில் அது கட்டி முடிக்கப்பட்டு தற்போது அது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

    தமிழக மக்கள் ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி. வரியாக 1 ரூபாய் செலுத்தினால் அதனை பிரித்து தமிழ்நாட்டிற்கு ரூ.29 பைசா மட்டுமே வழங்குகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் வழங்குகிறது.

    இதனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. இதனால் பிரதமர் மோடியை இனி மிஸ்டர் 29 பைசா என்றே அழைக்க வேண்டும். எனவே மாநிலங்களுக்கு நிதி உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு அமையவும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் கைகாட்டும் நபர் பிரதமராக வருவதற்கு இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர்.
    • மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சில பெண்கள், தங்கம் விலை தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

    தங்கம் விலையை உயர்த்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசுதான். தங்கம் விலைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லையம்மா என அவரது பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

    தொடர்ந்து சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த 70 சதவீதம் பேருக்கு மாதம் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.

    • சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்படைந்தன.
    • மத்திய அரசு நிவாரண நிதி தர மறுப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

    கடந்த ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் மழை கொட்டித்தீர்த்தது. தாமிரபரணி ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரையோர கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதித்தன.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வடிய பல நாட்கள் ஆகின. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிப்பு குறித்து விரிவாக கடிதம் எழுதி சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

    தற்போது மக்களவை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின்போது வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    நேற்று வேலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது இது தொடர்பாக மத்திய அரசு மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் பணியாற்றி வருகின்றனர்.
    • ஓய்வு பெற இருக்கும் இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக விஞ்ஞானி ராஜராஜன், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    அதேபோல், பெங்களூருவில் உள்ள மனித விண்வெளி விமான மைய இயக்குனர் விஞ்ஞானி மோகன், திருவனந்தபுரத்தில் இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட் என்ற மையத்தின் இயக்குனராக விஞ்ஞானி பத்மகுமார் மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் இஸ்ரோவின் ஏ.டி.ஆர்.ஐ.என். என்ற ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாக ராதா தேவி மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி நிகர் ஷாஜி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடைய பணி காலம் இம்மாதம் (ஏப்ரல்), மே மற்றும் ஜூன் மாத்துடன் நிறைவு பெறுகிறது. ஓய்வு பெற இருக்கும் இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    • 2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது.
    • 2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.

    மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023-மார்ச் 2024) மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 20.14 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் வசூலித்ததை விட 11.7 சதவீதம் அதிகமாகும்.

    2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியது.

    இதுகுறித்து மத்திய அமைச்சகள் வெளியிட்டுள்ள அறிக்கயைில், "மார்ச் 2024க்கான மொத்த நல்ல மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய், 11.5 சதவீத வளர்ச்சியுடன், 1.78 லட்சம் கோடி ரூபாயில் இரண்டாவது அதிகபட்ச வசூலைக் கண்டுள்ளது. உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பால் இந்த எழுச்சி ஏற்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.

    மார்ச் 2024க்கான ஜிஎஸ்டி வருவாய் நிகர ரீஃபண்ட் ரூ.1.65 லட்சம் கோடியாகும். இது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தை விட 18.4 சதவீதம் அதிகமாகும்.

    இதில், மார்ச் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இருந்து வரி வசூலாக ரூ.11,017 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கட்டண உயர்வு அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
    • சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணங்கள் மாற்றி அமைப்பது வழக்கம்.

    இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலில் ஏப்ரல்-1ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இமைக்க ரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சவாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

    இதில் பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட மொத்த 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது.


    கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.
    • கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் திருச்சி, மணமேட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதுகுறித்து பாரிவேந்தர் பேசியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுடைய மேலான வாக்குகளை தாமரை சின்னத்திற்கு போட்டு வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நான் உங்களுக்கு புதியவன் அல்ல. இதே பாராளுமன்ற தொகுதிக்கு மூன்றாவது முறையாக பார்க்கிறேன். இருந்தாலும் நம்பிக்கையோடு, என்னை பற்றி மக்களுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது. கருத்து இருக்கிறது. ஆகவே என்னை ஒதுக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில், உங்களை நம்பி இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    2019 தேர்தலில், 6 லட்சம் வாக்குகள் கொண்டு வெற்றிப்பெற செய்தீர்கள். 6 லட்சம் வாக்கு என்பது சாதாரண வாக்கு அல்ல. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள்.

    வெற்றி பெற்ற நான் டெல்லிக்கு சென்று உங்கள் தொகுதிக்காக என்ன செய்தேன் என்பதை புத்தகமாக போட்டுக் கொடுத்துள்ளேன்.

    இந்த புத்தகத்தில், பாராளுமன்றத்தில் நான் எத்தனை முறை பேசினேன். எதற்காகப் பேசினேன். எத்தனை முறை பாரத பிரதமர், ரெயில்வே அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்தேன் என்பதை புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளேன்.

    இந்த மாதிரி யாராவது கடந்த காலங்களில் உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவன் மதிப்பெண் அட்டையை காட்டுவது போல் கொடுத்துள்ளார்களா ? பார்த்திருக்க மாட்டீர்கள்.

    அப்படி நான் கொடுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம், உண்மையாக இருந்திருக்கிறேன். கேட்ட திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதேபோல், எந்தெந்த ஊர்களில் என்ணென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அதையெல்லாம் முழுமையாக தீர்த்து வைத்திருக்கிறேன்.

    குறிப்பாக, முசரியில் என்னுடைய நிதியில் இருந்து வகுப்பறைகள் கட்டப்பட்டது. பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.

    அதேபோல, எத்தனையோ சமூக கூடங்கள், ரேஷன் கடைகள், நீர்தேக்கத் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகிய அத்தனையும் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    பள்ளிக்கூடத்தில் கட்டிக் கொடுத்தால் அதனால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். நான் அடிப்படையில் கல்வியாளர் என்று தெரிந்துதான் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.

    மனிதனுக்கு வாழ்வில் கல்வி என்பது அவசியம். முதலிடம். ஆகவே தான் என் பாராளுமன்ற தொகுதிக்கு 42 வகுப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    அதுமட்டுமல்ல, கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன். 9 தரைப்பாலங்களை கட்டியிருக்கிறேன். எளிதாக யாராலும் இந்த திட்டங்களை எல்லாம் கொடுக்க முடியாது.

    திமுக திருவாளர்கள் எம்.பிக்கள் பாராளுன்றத்தை முடக்குவதற்கே முயற்சிக்கின்றனர். மோடியை குழப்புவதிலயே குறியாக இருக்கின்றனர். அந்த நிலையிலும் கூட, என்னால் இதையெல்லாம் செய்திருக்க முடிந்தது.

    அரியலூர், பெரம்பலூர், துரையூர், நாமக்கலில் ரெயில்வே பாலம் அமைக்கிற திட்டம், 50 ஆண்டு கால கனவுத் திட்டமாக இருக்கிறது. இது தொடர்பாக, பிரதமர், ரெயில்வே அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.

    முடியாது என்று கூறிய இத்திட்டத்திற்கு உயிர் கொடுத்து, தட்டி எழுப்பி இன்று சர்வே நடந்திருக்கிறது.

    2024 நிதி ஆண்டில் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் யார் ஆட்சி அமைப்புது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். 10 ஆண்டுகாலமாக பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். இந்தியாவின் பெருமையை உலகளவில் ஓங்கியிருக்கிறார்.

    மோடி எப்போது எங்கள் நாட்டிற்கு வருவார் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் எங்கள் தலைவர் மோடி என்கிறார்கள். இன்னும் சொல்ல போனால்,, உலகத் தலைவர்கள் எல்லாம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு கொடுங்கள், அவரை எங்கள் நாட்டில் பிரதமராக்கி விடுகிறோம் என்கிறார்கள்.

    அப்படிப்பட்ட மகானை, திறமைசாலியை, நாட்டுப்பற்று கொண்டவரை, எப்படியாவது ஊனப்படுத்த வேண்டும். அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நமக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு விவேக்கானந்தர் கிடைத்தார். அவர் நாட்டின் ஆன்மிகத்தை உலகளவிற்கு கொண்டு சென்றார். இன்று மோடி அவர்கள், நல்லாட்சியை அரசியலுக்கு உலகளவில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் போனாலும், போகாவிட்டாலும் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் என்பதில் சந்தேகமே கிடையாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.
    • ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடது சாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். திருவனந்தபுரம், நெய்யாற்றின் கரை பகுதிகளில் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் மதச் சார்பின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. இதனால் மக்களாட்சி கொண்ட மதச்சார்பற்ற நாடு என்று கருதப்படும் இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.

    ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு இந்தியாவுக்கு ஏற்பட்டதில்லை. இது மாற்றப்பட வேண்டும். அதற்கு பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்து அனைத்து மாநிலத்திலும் எழுந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×