search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஜேகே பாரிவேந்தர்"

    • பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.
    • கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் திருச்சி, மணமேட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதுகுறித்து பாரிவேந்தர் பேசியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுடைய மேலான வாக்குகளை தாமரை சின்னத்திற்கு போட்டு வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நான் உங்களுக்கு புதியவன் அல்ல. இதே பாராளுமன்ற தொகுதிக்கு மூன்றாவது முறையாக பார்க்கிறேன். இருந்தாலும் நம்பிக்கையோடு, என்னை பற்றி மக்களுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது. கருத்து இருக்கிறது. ஆகவே என்னை ஒதுக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில், உங்களை நம்பி இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    2019 தேர்தலில், 6 லட்சம் வாக்குகள் கொண்டு வெற்றிப்பெற செய்தீர்கள். 6 லட்சம் வாக்கு என்பது சாதாரண வாக்கு அல்ல. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள்.

    வெற்றி பெற்ற நான் டெல்லிக்கு சென்று உங்கள் தொகுதிக்காக என்ன செய்தேன் என்பதை புத்தகமாக போட்டுக் கொடுத்துள்ளேன்.

    இந்த புத்தகத்தில், பாராளுமன்றத்தில் நான் எத்தனை முறை பேசினேன். எதற்காகப் பேசினேன். எத்தனை முறை பாரத பிரதமர், ரெயில்வே அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்தேன் என்பதை புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளேன்.

    இந்த மாதிரி யாராவது கடந்த காலங்களில் உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவன் மதிப்பெண் அட்டையை காட்டுவது போல் கொடுத்துள்ளார்களா ? பார்த்திருக்க மாட்டீர்கள்.

    அப்படி நான் கொடுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம், உண்மையாக இருந்திருக்கிறேன். கேட்ட திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதேபோல், எந்தெந்த ஊர்களில் என்ணென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அதையெல்லாம் முழுமையாக தீர்த்து வைத்திருக்கிறேன்.

    குறிப்பாக, முசரியில் என்னுடைய நிதியில் இருந்து வகுப்பறைகள் கட்டப்பட்டது. பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.

    அதேபோல, எத்தனையோ சமூக கூடங்கள், ரேஷன் கடைகள், நீர்தேக்கத் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகிய அத்தனையும் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    பள்ளிக்கூடத்தில் கட்டிக் கொடுத்தால் அதனால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். நான் அடிப்படையில் கல்வியாளர் என்று தெரிந்துதான் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.

    மனிதனுக்கு வாழ்வில் கல்வி என்பது அவசியம். முதலிடம். ஆகவே தான் என் பாராளுமன்ற தொகுதிக்கு 42 வகுப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    அதுமட்டுமல்ல, கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன். 9 தரைப்பாலங்களை கட்டியிருக்கிறேன். எளிதாக யாராலும் இந்த திட்டங்களை எல்லாம் கொடுக்க முடியாது.

    திமுக திருவாளர்கள் எம்.பிக்கள் பாராளுன்றத்தை முடக்குவதற்கே முயற்சிக்கின்றனர். மோடியை குழப்புவதிலயே குறியாக இருக்கின்றனர். அந்த நிலையிலும் கூட, என்னால் இதையெல்லாம் செய்திருக்க முடிந்தது.

    அரியலூர், பெரம்பலூர், துரையூர், நாமக்கலில் ரெயில்வே பாலம் அமைக்கிற திட்டம், 50 ஆண்டு கால கனவுத் திட்டமாக இருக்கிறது. இது தொடர்பாக, பிரதமர், ரெயில்வே அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.

    முடியாது என்று கூறிய இத்திட்டத்திற்கு உயிர் கொடுத்து, தட்டி எழுப்பி இன்று சர்வே நடந்திருக்கிறது.

    2024 நிதி ஆண்டில் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் யார் ஆட்சி அமைப்புது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். 10 ஆண்டுகாலமாக பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். இந்தியாவின் பெருமையை உலகளவில் ஓங்கியிருக்கிறார்.

    மோடி எப்போது எங்கள் நாட்டிற்கு வருவார் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் எங்கள் தலைவர் மோடி என்கிறார்கள். இன்னும் சொல்ல போனால்,, உலகத் தலைவர்கள் எல்லாம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு கொடுங்கள், அவரை எங்கள் நாட்டில் பிரதமராக்கி விடுகிறோம் என்கிறார்கள்.

    அப்படிப்பட்ட மகானை, திறமைசாலியை, நாட்டுப்பற்று கொண்டவரை, எப்படியாவது ஊனப்படுத்த வேண்டும். அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நமக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு விவேக்கானந்தர் கிடைத்தார். அவர் நாட்டின் ஆன்மிகத்தை உலகளவிற்கு கொண்டு சென்றார். இன்று மோடி அவர்கள், நல்லாட்சியை அரசியலுக்கு உலகளவில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் போனாலும், போகாவிட்டாலும் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் என்பதில் சந்தேகமே கிடையாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×