search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபோதை"

    • பதின்வயதில் இப்போது தான் அடியெடுத்து வைத்திருக்கும் அவர்கள் அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.
    • மது மற்றும் கஞ்சா போதை தான் காவல் அதிகாரியையே தாக்கும் குருட்டுத்தனமான துணிச்சலை அவர்களுக்கு தந்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் ஐயத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சிறுவர்களை விசாரித்த ராதாகிருஷ்ணன் நகர் காவல்நிலைய சார் ஆய்வாளர் பாலமுருகன், அந்த சிறுவர்களால் கொடூரமான வகையில் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் சார் ஆய்வாளர் பாலமுருகன், விரைவில் முழுமையான நலம் பெற்று பணிக்கு திரும்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காவல் சார் ஆய்வாளரே தாக்கப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கும் முதல் செய்தி என்றால், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ஐந்து பேரும் பத்தாம் வகுப்பு பயிலும் சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் இரண்டாவது செய்தி ஆகும்.

    பதின்வயதில் இப்போது தான் அடியெடுத்து வைத்திருக்கும் அவர்கள் அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர் என்பது தான் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கும் மூன்றாவது செய்தி ஆகும். மது மற்றும் கஞ்சா போதை தான் காவல் அதிகாரியையே தாக்கும் குருட்டுத்தனமான துணிச்சலை அவர்களுக்கு தந்திருக்கிறது.

    கஞ்சா மற்றும் மதுவின் போதையிலிருந்து இளைஞர் சமுதாயத்தைக் காப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மது போதையில் தகராறு செய்த கணவரை கீழே தள்ளி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
    • ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    மதுரை

    மதுரை புது ராமநாதபுரம் ரோடு பழைய மீனாட்சி நகரை சேர்ந்தவர் மகாராஜா (வயது34), பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி. இவர் ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார். மகாராஜாவுக்கு மது பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து போதையில் மனைவி யுடன் தகராறு செய்து வந்தார்.

    சம்பவத்தன்றும் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் மகாராஜா மனைவியை அடிக்க முயன்றார். அதனை தடுத்த மனைவி மகா ராஜாவை கீழே தள்ளினார். அதனால் அவர் தடுமாறி விழுந்தார். அதன் அசை வில்லாமல் கிடந்துள்ளார்.

    மனைவி அவரை எழுப்ப முயன்றபோது பேச்சு, மூச்சில்லாமல் இருந்துள் ளார். உடனடியாக அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து மகாராஜா வின் தாய் சுந்தரி தெப்பக் குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி செல்வியை கைது செய்தனர்.

    • உணவகத்துக்கு நேற்று இரவு மாம்பலம் போலீசார் இருவர் சென்றுள்ளனர்.
    • ஓசியில் சாப்பிட்டு விட்டு மதுபோதையில் பணம் தர மறுத்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள உணவகத்துக்கு நேற்று இரவு மாம்பலம் போலீசார் இருவர் சென்றுள்ளனர்.

    மதுபோதையில் ஓசியில் சாப்பிட்டு விட்டு, பணம் தர மறுத்து உரிமையாளரை தகாத வார்த்தையில் பேசி அடிக்க முயன்று ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
    • மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்து தமிழக பகுதியான ஆரோவில் அருகே இடையஞ்சாவடி கிராமத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு செல்லும் குதிரை பண்ணை சாலையில் தனியார் விடுதி உள்ளது.

    அங்கு வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விடுதி உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு சுமார் 20 பெண்கள் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    அவர்களுக்கு மது ஊற்றி கொடுத்து நடனமாட வைத்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ்பிரபாஜ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சொகுசு கார் ஒன்று நெருக்கடி மிகுந்த சாலையில் மிக வேகமாக சென்றது.
    • 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சொகுசு கார் பறிமுதல்

    கன்னியாகுமரி :

    குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் நேற்று இரணியல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தின் பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று நெருக்கடி மிகுந்த சாலையில் மிக வேகமாக சென்றது.

    அதனை நிறுத்தி சோதனை செய்தபோது காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவரது பெயர் இர்வின்பால் (வயது 25) என்பதும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போக்கு வரத்து போலீசார் நட வடிக்கையை பொதுமக்கள் வரவேற்றனர்.

    • ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார்.
    • மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா. பழூர் அணை குடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). விவசாயி இவருக்கு சுப்பிரமணியன் (42) சுவாமிநாதன் (40) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுப்பிரமணியன் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    ஆனால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான சாமிநாதன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுத்தி வந்தார். இதனை அவரின் தந்தை கோபால் கண்டித்தார்.

    இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சாமிநாதன் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதைப் பார்த்ததும் தந்தை கோபால் மகனை திட்டி உள்ளார். ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார். இதில் அவரது தலை வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது,

    இதனை பார்த்த அவரது மூத்த மகன் சுப்ரமணியன் தந்தையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் தா பழூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மது குடிப்பதை கண்டித்ததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விமான நிலையம் நோக்கி சென்ற கார் நரிக்குறவர் குடியிருப்பு அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் அங்கிருந்து நகர முடியாமல் நின்றது.
    • கார் மோதி காயமடைந்த பாலமுருகன், சக்திவேல், காயத்ரி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தமிழகத்தை விட குறைந்த விலைக்கு மதுபானங்கள் கிடைப்பதால் கடலூர், விழுப்புரம், சென்னையை சேர்ந்த வாலிபர்கள் புதுவைக்கு வாரவிடுமுறையில் படையெடுத்து வருவார்கள். அவர்கள் அங்குள்ள கடற்கரையில் சுற்றி பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

    புதுவை பாண்டிமெரீனா கடற்கரையிலிருந்து நேற்று மதியம் 2.15 மணிக்கு கருப்புநிற கார் வம்பா கீரப்பாளையம் அருகே ஒரு பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    அந்த பகுதி இளைஞர்கள் காரை துரத்தினர். கார் செஞ்சி சாலை, ரங்கப்பிள்ளை வீதி வழியாக மிஷன்வீதிக்குள் நுழைந்து அங்கிருந்து ஒருவழிப்பாதையான நேருவீதியில் திரும்பி ராஜா தியேட்டர் நோக்கி அதிவேகமாக சென்றது. போக்குவரத்து போலீசார் தடுத்தும் கார் நிற்காமல் சென்றது.

    அப்போது எதிரில் வந்த 5 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளி சென்றது. ஒரு மோட்டார் சைக்கிள் காரின் அடியில் சிக்கியது. அந்த மோட்டார் சைக்கிளை இழுத்துக் கொண்டே கார் அசுர வேகத்தில் சென்றது. காரைப் பார்த்து பொதுமக்கள் பலர் பதறியடித்து ஓடினர். பலர் சினிமா ஷூட்டிங் நடக்கிறது என நினைத்து நின்று வேடிக்கை பார்த்தனர்.

    அப்போது கார் சாலையோர தடுப்பில் மோதியதால் காரின் இடதுபுற முன்சக்கர டயர் பஞ்சரானது. காரின் ரிம் தரையில் தேய்ந்து தீப்பொறி பறக்க கார் அண்ணாசாலையில் சென்றது. வளைவில் திரும்பிய போது காரில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது.

    இதன்பின் அண்ணா சாலையில் 2 மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை கருவடிக்குப்பம் சென்று இடையஞ்சாவடி சாலையில் நுழைந்தது.

    அங்கும் சாலையோரம் நின்றிருந்த 5 பைக்குகளை இடித்து தள்ளி விட்டு சென்றது. போலீசார், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காரை துரத்தினர். சுமார் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளி கார் தாறுமாறாக சென்றது.

    விமான நிலையம் நோக்கி சென்ற கார் நரிக்குறவர் குடியிருப்பு அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் அங்கிருந்து நகர முடியாமல் நின்றது.

    அப்போது பின்னால் விரட்டி சென்ற பொது மக்கள் காரை சூழ்ந்து நின்றனர்.

    அந்த காரிலிருந்த 5 வாலிபர்களை காரில் இருந்து வெளியே இழுத்தனர். வாலிபர்கள் 5 பேரும் மித மிஞ்சிய மதுபோதையில் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

    சிறப்பு அதிரடிப்படை போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காரை ஓட்டி வந்தது சென்னை மேடவாக்கம் பள்ளிக்கரணையை சேர்ந்த சுனில்(30), உடன் இருந்தவர்கள் அவரின் நண்பர்களான ஸ்ரீநாத்(25), ஆஷிக்(21), மேடவாக்கம் விவேகானந்தர் நகர் திலீப்(27), சென்னை நன்னாங்குளம் எபிநேசர்(21) என தெரியவந்தது.

    2 நாட்களுக்கு முன்பு புதுவைக்கு வந்த அவர்கள் புதுவை மெரீனா கடற்கரையில் மது அருந்தி கும்மாளமிட்டுள்ளனர். மதியம் நகர பகுதிக்கு வந்து மதுபோதையுடன், கஞ்சா புகைத்ததால் போதை தலைக்கேறி காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. 5 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    கார் மோதி காயமடைந்த பாலமுருகன், சக்திவேல், காயத்ரி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    போதை ஆசாமிகள் சினிமா சேஸிங் போல காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் பகல் 2.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஒரு மணி நேரம் நகர பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    கார் அசுர வேகத்தில் பறந்தது. இன்னும் ஒரு மணி நேரம் கழித்து இந்த சம்பவம் நடந்திருந்தால் நகர பகுதியில் பள்ளிகள் விட்டு நெரிசல் அதிகமாக இருந்திருக்கும்.

    அப்போது காரை தாறுமாறாக ஓட்டியிருந்தால் பெரும் விபத்தும், அசம்பாவித சம்பவங்களும் நடந்திருக்கும். பிடிப்பட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
    • வாங் ஏற்கனவே இதே போல அடிக்கடி தான் மது குடிப்பதை சமூக வலைதளத்தில் நேரலை செய்ததால் அவரது சமூக வலைதள ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மது பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலர் சவால் விட்டு அதிக மது பாட்டில்களை ஒரே நேரத்தில் குடித்து பலியாகும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.

    சீனாவில் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த சமூக வலைதள பயனரான வாங் என்பவர் சீன வோட்கா எனப்படும் பைஜியு வகை மதுவை அதிகமாக குடித்துள்ளார். மேலும் தான் மது குடித்ததை டிக்-டாக் வெர்சனான டூயிங் என்ற வலைதளத்தில் அவர் நேரலை செய்துள்ளார்.

    அப்போது ஒரே நேரத்தில் 7 பாட்டில் மதுவை அவர் குடித்துள்ளார். இந்நிலையில் மது குடித்த 12 மணி நேரத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

    வாங் ஏற்கனவே இதே போல அடிக்கடி தான் மது குடிப்பதை சமூக வலைதளத்தில் நேரலை செய்ததால் அவரது சமூக வலைதள ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் புதிய கணக்கை ஆரம்பித்து மீண்டும் மது குடிப்பதை ஒளிபரப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து லைக்குகளை பெறுவதற்காக விபரீத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

    • சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கோம்பை அணைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் சதீஸ்குமார் (28). கூலித்தொழிலாளி. இவர்மீது தேனி, கோம்பை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    மேலும் அடிக்கடி இரட்டை மாட்டுவண்டி பந்தயமும் நடத்தி வந்துள்ளார். இதனால் சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அவர் அரண்மனைத்தெரு குளம் அருகே மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சதீஸ்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் மாட்டு வண்டியில் இருந்த அச்சாணிக்கட்டை, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் இரும்புக்கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கோம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் 9 பேர் கொண்ட கும்பல் சதீஸ்குமாரை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கக்கன்ஜி காலனியை சேர்ந்த மணிகண்டன், திரு.வி.க. தெருவை சேர்ந்த பிரவீண், தீபக், கிராம சாவடி தெருவை சேர்ந்த புகழேந்தி ஆகிய 4 பேரை கைது செய்து சூர்யா உள்பட மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

    • மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.
    • போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே 2 வயது பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. 6 மாத ஆண் குழந்தை அழுதபடி காணப்பட்டது.

    அப்போது கடற்கரைக்கு வந்த சிலர் அந்த பெண்ணை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. இது குறித்து அவர்கள் மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த பெண்ணை பார்த்தனர். அப்போது அவர் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. அருகில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பசி மயக்கத்தில் காணப்பட்டது. 6 மாத ஆண் குழந்தையும் பசியால் அழுது கொண்டு இருந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணையும் 2 குழந்தைகளையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பசி மயக்கத்தில் இருந்த 2 வயது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு போலீசார் உணவு வாங்கி கொடுத்தனர். 6 மாத ஆண் குழந்தையும் பால் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போதை தெளிந்த நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் ஆதரவற்ற நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.

    அந்த பெண்ணிடம் போலீசார் பெயர், கணவர் பெயர், சொந்த ஊர் பற்றிய விவரங்களை கேட்டனர். இந்தியில் பேசிய அவர் போலீசார் கேட்ட எந்த விவரங்களையும் சொல்ல மறுத்துவிட்டார். அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரை சொன்னால் அந்த மாநிலத்தை சேர்ந்தவரை வரவழைத்து அந்த பெண்ணிடம் பேச வைத்து அவரைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரையும் சொல்ல மறுத்துவிட்டார்.

    மேலும் அந்த பெண்ணிடம் குழந்தைகளுடன் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் என்று போலீசார் கூறினார்கள். அதற்கு மறுத்த அவர் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென்று ஓட்டம் பிடித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பிடித்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அந்த பெண் காப்பகத்துக்கு செல்லமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். என்னை மீண்டும் மெரினா கடற்கரைக்கே அனுப்புங்கள். ஏதாவது வேலை செய்து என் 2 குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வேன் என்று போலீசாரிடம் கூறி வருகிறார்.

    அந்த பெண்ணுக்கும் 2 குழந்தைகளுக்கும் எப்படி ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

    • ராமகிருஷ்ண ராஜா அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்துவருகிறார்.
    • ராமகிருஷ்ண ராஜா மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா (வயது39). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்துவருகிறார். இவர் 22-ந்தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது

    இதை அறிந்த பயணிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்தனர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராமகிருஷ்ண ராஜா ஓட்டிச் சென்ற பஸ்சை, புதியம்புத்தூர் காவல் சரகம் புதூர் பாண்டி யாபுரம் டோல்கேட் அருகே நிறுத்தி ராமகிருஷ்ண ராஜா மீது புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புதியம்புத்தூர் போலீசார் ராமகிருஷ்ண ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • யானை நடமாட்டம் அதிகரித்ததால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையை வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளனர்.
    • மயங்கி விழுந்த இளம்பெண் ஆம்புலன்ஸ் மூலம் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம் அடுத்த வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து விட்டு செல்வார்கள்.

    இதற்கிடையே யானை நடமாட்டம் அதிகரித்ததால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையை வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளனர். அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள், அங்குள்ள ஓடையில் குளித்துவிட்டு சென்று வருகின்றனர். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஓடையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் வைதேகி நீர்வீழ்ச்சி ஒடையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கோவை மாநகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர் ஒருவருடன் அங்கு வந்திருந்தார்.

    இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென இளம்பெண் மயங்கி விழுந்து விட்டார். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    ஆம்புலன்ஸ் மூலம் இளம்பெண் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்போது இளம்பெண் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர் ஊட்டியை சேர்ந்தவர் என்பதும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இளம்பெண் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.

    இருவரும் விடுமுறை என்பதால் இங்கு வந்ததாகவும், 2 பேரும் சேர்ந்து மது அருந்தியதாகவும், அதில் இளம்பெண் போதை தலைக்கேறிய நிலையில் மயங்கியதும் தெரியவந்தது. முதலுதவி செய்து மாணவியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ×