search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதியம்புத்தூர்"

    • ராமகிருஷ்ண ராஜா அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்துவருகிறார்.
    • ராமகிருஷ்ண ராஜா மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா (வயது39). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்துவருகிறார். இவர் 22-ந்தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது

    இதை அறிந்த பயணிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்தனர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராமகிருஷ்ண ராஜா ஓட்டிச் சென்ற பஸ்சை, புதியம்புத்தூர் காவல் சரகம் புதூர் பாண்டி யாபுரம் டோல்கேட் அருகே நிறுத்தி ராமகிருஷ்ண ராஜா மீது புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புதியம்புத்தூர் போலீசார் ராமகிருஷ்ண ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இருதய பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.
    • 31 பேர்களுக்கு இலவசமாக ஆபரேஷன் செய்து கண் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் புதியம்புத்தூர் ரெடிமேட் பியர்ல்சிட்டி லயன்ஸ் கிளப், தூத்துக்குடி ராயல் பியர்ல்சிட்டி லயன்ஸ் கிளப் சங்கம், புதியம்புத்தூர்இளங்கோவன் அறக்கட்டளை, தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம், சர்க்கரை நோய் மற்றும் இருதய பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 256 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 31 பேர்கள் கண் ஆபரேஷன் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக ஆபரேஷன் செய்து கண் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது. முகாமில் சிறப்பு மருத்துவர் சிப்ரா, ராயல் பியர்ல் சிட்டி வேதமாணிக்கம், ஜெயம் மண்டலத் தலைவர் ஜெயக்குமார், ஜே.கே.ஆர் முருகன், முத்தமிழ் செல்வன், லயன்ஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    புதியம்புத்தூர்:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேஷன் மற்றும் பசுவந்தனை தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி கிளை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு சங்க நிதி உதவியுடன் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.

    முகாமை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் பாண்டி குமார் தொடங்கி வைத்தார். மருத்துவர் லோகேஷ் குமார், பசுவந்தனை பஞ்சாயத்து தலைவி லட்சுமி சிதம்பரம், பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர் சீதா ராம் ஆகியோர் கலந்து கொண்ட னர். கண் சிகிச்சை முகாமில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் பரிசுகளை வழங்கினர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் சுடலை மாடசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி நடந்தது. நடு மாட்டு வண்டி போட்டியை ஊர் தலைவர்கள் சுப்பிரமணியன், ஆண்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் வேலங்குளம் கண்ணன் வண்டி முதலாவதாகவும், கடம்பூர் கருணாகர ராஜா வண்டி 2-வதாகவும், முத்தையாபுரம் ஓம் முருகா வண்டி 3-வதாகவும் வந்தது. அடுத்து நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி ரேஸ் போட்டியில் 49 வண்டிகள் கலந்து கொண்டதால் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரேஸ் நடத்தப்பட்டது. புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முதல் பிரிவு போட்டியில் கம்பம் குரு தர்ஷன் சிந்தலக்கட்டை பொன்னம்மாள், அரசடி கதிர்வேல் பாண்டியன் மாட்டுவண்டிகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றன. 2-வது பிரிவில் தேனி மாவட்ட வண்டி சந்தா ஓடை, செக் காரகுடி வண்டிகள் முதல் மூன்று பரிசுகளை வென்றன. 15 குதிரை வண்டிகளுடன் நடந்த குதிரை வண்டி ரேஸில் நெல்லை போஸ் பாண்டியன் வண்டி முதலாவதாகவும், அருப்புக்கோட்டை ராமலிங்கம் 2-வதாகவும், கோவில்பட்டி மணிகண்டன் வண்டி 3-வதாக வந்தது. பின்பு நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் பரிசுகளை வழங்கினர். மாட்டு வண்டி ரேசை காண சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஓட்டநத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டர் வாரம் இருமுறை சிகிச்சை அளிக்க வந்து சென்றார்.
    • மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் நோயாளிகளை பரிசோதித்து மாத்திரை கொடுக்கின்றனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தட்டப்பாறை ரோட்டில் உள்ளது. இங்கு ஒரு பெண் மருத்துவர், ஒரு ஆண் மருத்துவர் என 2 டாக்டர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    பிரசவம்

    இவர்கள் நோயாளிகளை பரிவுடன் கவனித்து வந்ததால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பயனடைந்து சென்றனர். பிரசவம் பார்க்கவும் ஏராளமான பெண்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பயனடைந்தனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த டாக்டர்கள் மேற்படிப்புக்கு சென்று விட்டனர். இதனால் ஓட்டநத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டர் வாரம் இருமுறை சிகிச்சை அளிக்க வந்து சென்றார்.

    தற்போது ஒரு வாரமாக அவரும் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் சிரமப்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் நோயாளிகளை பரிசோதித்து மாத்திரை கொடுக்கின்றனர். இங்கு பிரசவத்திற்கு வரும் பெண்களை 108 ஆம்புலன்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். 3 மாதமாக இந்த மருத்துவமனையில் எவ்வித பிரசவமும் பார்க்கப்பட வில்லை. இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    எனவே உடனடியாக தினமும் பணிபுரியும் படியாக நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சண்முகையா எம்.எல்.ஏ, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் ஆகியோர் மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
    • 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என முதல் -அமைச்சர் அறிவித்துள்ளதாக எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் ஆகியோர் மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது சண்முகையா எம்.எல்.ஏ பேசியதாவது:-

    தமிழக அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் உருவாக்கி அதற்கென விவசாயத் துறையும் உருவாக்கி விவசாயத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் விண்ணப்பித்து காத்திருந்தனர். விவசாயம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டன.

    தற்போது மீண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் முதல் -அமைச்சர் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ரூ.4.50 கோடி செலவில் மின்சாரத்துறை உள் கட்டமைப்பை ஊக்குவிக்கும் விதத்தில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளம், குலசேகரநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு தனியாக மின் தொடர் அமைப்பு விரைவில் உருவாக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதிகளில் தங்கு தடையின்றி மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

    வருகிற 31-ந் தேதிக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். ஓட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தங்கு தடையின்றி தொடர் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.

    கூட்டத்தில் போது மின்வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகம், உதவி செய்ய பொறியாளர்கள் ஜெயக்குமார், முனியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் வேலாயுதசாமி, இளையராஜா, சின்னத்துரை, உதவி பொறியாளர்கள் மணிசேகர், செந்தில்ராஜ், பால்முனியசாமி, ஜெயசுதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி உட்பட பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திடீரென பணிகளை செய்து வந்த சப் கான்ட்ராக்டர் கலவை எந்திரம் மற்றும் காங்கிரிட் சட்டர்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
    • தண்ணீர் தொட்டி பணி முடிந்து குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பணி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் 7,8,10,11 ஆகிய வார்டுகளின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் விதமாக பவுண்டு தொழு சந்திப்பில் உள்ள ஊராட்சி இடத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள வாட்டர் டேங்க் கட்டும் பணி துரிதமாக நடந்து வந்தது. தண்ணீர் தொட்டியின் தூண் 15 அடி உயரத்திற்குகட்டப்பட்ட நிலையில் திடீரென இப்பணியை செய்து வந்த சப் கான்ட்ராக்டர் கலவை எந்திரம் மற்றும் காங்கிரிட் சட்டர்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

    விரைவில் தண்ணீர் தொட்டி பணி முடிந்து குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பணி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீண்டும் வாட்டர் டேங்க் பணியை தொடங்க வேண்டுமென இவ் வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நல்ல மழை பெய்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்து பூப்பூக்கும் தருவாயில் உள்ளன.
    • தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்து இருந்தது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, சோளம், பருத்தி, கம்பு போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர். 50 சதவீதம் விவசாயிகள் உளுந்தையே பயிரிட்டுள்ளனர்.

    விதைத்த நேரத்தில் நல்ல மழை பெய்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்து பூப்பூக்கும் தருவாயில் உள்ளன. தற்போது மழை பெய்தால் தான் பயிர்கள் செழித்து வளர்ந்து பலன் தரும் நிலை இங்கு உள்ளது.

    ஆனால் மழை பெய்யும் சூழ்நிலை இல்லை. 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்து இருந்தது.

    எனவே எப்படியும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, நேற்று குறுக்குச்சாலை, மேல மீனாட்சிபுரம், முரம்மன், சங்கம்பட்டி, சரவணபுரம், ஒட்டநத்தம் போன்ற கிராமங்களில் பயிர்களுக்கு தேவைப்படும் அளவிற்கு மழை பெய்தது.

    மற்ற பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளோம்.நாங்கள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றாம் என்றனர்.

    • புதியம்புத்தூர் அருகே மது மற்றும் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தில் கீழமுடிமன் புனிதவளன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், லசால் இளைஞர் இயக்கம், சாலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மது மற்றும் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்து நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சாமிநத்தம் பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி நல்லதம்பி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுசிலா, புனித வளன் மேல் நிலைப்பள்ளி தாளாளர் அன்பு நாதன் மற்றும் ஆசிரி யர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி கல்லூரிக்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர்.
    • மாணவ-மாணவிகள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் ஒரு மேல்நிலைப் பள்ளியும், இரண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், மூன்று தொடக்கப் பள்ளிகளும் உள்ளன. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 500-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கல்வி பயில வருகின்றனர்.

    அதுபோல் புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி கல்லூரிக்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர். காலை 8 மணியிலிருந்து 8.45 வரை நேர்வழியில் மூன்று பஸ்களும் சுற்றுப்பாதையில் ஒரு பஸ்சும் தற்சமயம் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் மூன்று பஸ்களிலும் வாழவா மாணவிகள் மற்றும் தொழில் நிமித்தம் தூத்துக்குடி செல்வார்கள்.

    அதிகமான பேர் பயணம் செய்வதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மாணவ-மாணவிகள் படிக்கட்டில் வெளியே தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். காலை 8. 15 மணிக்கு கூடுதலாக இரண்டு பஸ்கள் மாலை 4 மணிக்கு இரண்டு பஸ்சும் கூடுதலாக இயக்கினால்தான் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியும். இந்த நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிப்பதாவது:-

    கூடுதல் பஸ் இயக்க கோரி தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், இணை மேலாளர், நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் பலமுறை விண்ணப்பம் செய்தும் கோரிக்கை நிறைவேற்றப்ப டவில்லை. மாணவர்கள் நலன் கருதி உடனடியாக பஸ் இயக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி பஸ் மறியல் போராட்டம் நடத்த நேரிடும் என்றனர்.

    • 2 ஓடைகளிலும் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது.
    • தற்போது புஞ்சை நிலங்களில் இடையே உள்ள சிறு வாய்க்கால்களை தூர்வாரும் பணி வேளாண்துறை மூலம் நடந்து வருகிறது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூருக்கு தென்புறம் மற்றும் ஊருக்கு வடபுறம் மழைநீர் செல்லும் ஓடை உள்ளது. இங்குள்ள மலர் குளத்தின் மறுகால் தளத்தில் இருந்து ராஜாவின் கோவில்குளம் வரை உள்ள ஓடை 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதுபோல் திருச்சிற்றம்பலபேரி குளத்திலிருந்து சாமி நத்தம் குளம் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

    இந்த 2 ஓடைகளிலும் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் மலர்குளம் மற்றும் திருச்சிற்றம்பல பேரிகுளத்தின் மறுகால் மழைநீர் ஓடையில் வழியாக செல்லும் போது முட்செடிகளின் ஆக்கிரமிப்பால் மழைநீர் ஓடைகளின் பக்கவாட்டு சுவரில் அரிப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியே செல்கிறது.

    தற்போது புஞ்சை நிலங்களில் இடையே உள்ள சிறு வாய்க்கால்களை தூர்வாரும் பணி வேளாண்துறை மூலம் நடந்து வருகிறது. எனவே இந்த 2 ஓடைகளில் உள்ள முட்செடிகளை வேளாண்துறை நிதி அல்லது ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிக மூலதனத்துடன் ரெடிமேட் தயாரிப்பு செய்து வருபவர்கள் மட்டும் தொழிலில் நிலையாக உள்ளனர்.
    • காலை 9 மணி முதல் நிறுத்தப்பட்ட மின்சாரம் மதியம் 2 மணிக்குத்தான் வந்தது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் ரெடிமேட் தயாரிப்பு தொழில் முன்பு சிறப்பாக நடந்து வந்தது. 2 வருடங்களாக இத்தொழில் பல்வேறு காரணங்களால் நசிந்து வருகிறது.

    புதியம்புத்தூர் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் துணிகளின் விலையேற்றம், டெய்லர் கூலி உயர்வு போன்ற காரணங்களால் ரெடிமேட் தொழில் தற்சமயம் நலிவடைந்த நிலையில் உள்ளது.

    ரெடிமேட் கடைகளில் வேலை பார்த்தவர்களும் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர். அதிக மூலதனத்துடன் ரெடிமேட் தயாரிப்பு செய்து வருபவர்கள் மட்டும் தொழிலில் நிலையாக உள்ளனர்.

    இந்நிலையில் மின் வாரியத்தினர் சிறு மராமத்து பணி நடைபெறுகிறது என்ற காரணத்தைக் காட்டி அடிக்கடி மின்வெட்டு செய்கின்றனர்.

    சமீபத்தில்தான் முழு மராமத்து பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு செய்திருந்தனர். 24 -ந்தேதி காலை 9 மணி முதல் நிறுத்தப்பட்ட மின்சாரம் மதியம் 2 மணிக்குத்தான் வந்தது.

    மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால் சிறு மராமத்து பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக ரெடிமேட் வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் கூறியதாவது:-

    ரெடிமேட் தொழில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் இருந்து புதியம்புத்தூர் வரை தனி மின் பாதை ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மராமத்து பணிகள் வேறு பகுதியில் நடந்தாலும் புதியம்புத்தூர் மின்சாரம் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே இனிமேல் இதுபோன்ற மின்வெட்டு ஏற்படுத்தாமல் ரெடிமேட் தொழில் சிறந்தோங்க மின்வாரிய அதிகாரிகள் உதவ வேண்டும் என தெரிவித்தார்.

    ×