search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானாவாரி பயிர்கள்"

    • நல்ல மழை பெய்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்து பூப்பூக்கும் தருவாயில் உள்ளன.
    • தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்து இருந்தது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, சோளம், பருத்தி, கம்பு போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர். 50 சதவீதம் விவசாயிகள் உளுந்தையே பயிரிட்டுள்ளனர்.

    விதைத்த நேரத்தில் நல்ல மழை பெய்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்து பூப்பூக்கும் தருவாயில் உள்ளன. தற்போது மழை பெய்தால் தான் பயிர்கள் செழித்து வளர்ந்து பலன் தரும் நிலை இங்கு உள்ளது.

    ஆனால் மழை பெய்யும் சூழ்நிலை இல்லை. 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்து இருந்தது.

    எனவே எப்படியும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, நேற்று குறுக்குச்சாலை, மேல மீனாட்சிபுரம், முரம்மன், சங்கம்பட்டி, சரவணபுரம், ஒட்டநத்தம் போன்ற கிராமங்களில் பயிர்களுக்கு தேவைப்படும் அளவிற்கு மழை பெய்தது.

    மற்ற பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளோம்.நாங்கள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றாம் என்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • மானாவாரி பயிர்களை விதைக்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு:-, கள்ளக்குறிச்சி 68, தியாகதுருகம் 80, விருகாவூர் 65, சின்னசேலம் 43, அரியலூர் 56, கடுவனூர் 62, கலையநல்லூர் 86, கீழ்பாடி 44, மூரார்பாளையம் 68, மூங்கில்துறைப்பட்டு 133, ரிஷிவந்தியம் 40, சூளாங்குறிச்சி 85, வடசிறுவலூர் 84, மாடாம்பூணடி 53, மணலூர்பேடடை 27, திருக்கோவிலூர் 22, திருப்பாலபந்தல் 47, வேங்கூர் 25, ஆதூர் 36, எறையூர் 50, ஊ.கீரனூர் 120, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மூங்கில்துறைப்பட்டில் 133 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக திருக்கோவிலூரில் 22 மி.மீட்டரும் மழையும் பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 1094 மி.மீட்டராகவும், சராசரி 52.09 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது. இந்த மழையால் கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் நெல், கரும்பு, மக்கா ச்சோளம் உள்ளிட்ட பயிர்க ளை சாகுபடி செய்து ள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆடி மாதத்தில் கம்பு, எள் ஆகிய மானாவாரி பயிர்களை விதைக்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ×