search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rainfed crops"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • மானாவாரி பயிர்களை விதைக்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு:-, கள்ளக்குறிச்சி 68, தியாகதுருகம் 80, விருகாவூர் 65, சின்னசேலம் 43, அரியலூர் 56, கடுவனூர் 62, கலையநல்லூர் 86, கீழ்பாடி 44, மூரார்பாளையம் 68, மூங்கில்துறைப்பட்டு 133, ரிஷிவந்தியம் 40, சூளாங்குறிச்சி 85, வடசிறுவலூர் 84, மாடாம்பூணடி 53, மணலூர்பேடடை 27, திருக்கோவிலூர் 22, திருப்பாலபந்தல் 47, வேங்கூர் 25, ஆதூர் 36, எறையூர் 50, ஊ.கீரனூர் 120, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மூங்கில்துறைப்பட்டில் 133 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக திருக்கோவிலூரில் 22 மி.மீட்டரும் மழையும் பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 1094 மி.மீட்டராகவும், சராசரி 52.09 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது. இந்த மழையால் கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் நெல், கரும்பு, மக்கா ச்சோளம் உள்ளிட்ட பயிர்க ளை சாகுபடி செய்து ள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆடி மாதத்தில் கம்பு, எள் ஆகிய மானாவாரி பயிர்களை விதைக்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ×