search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண் சிகிச்சை முகாம்"

    • காரிமங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி வைத்தார்.

    .தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    ஸ்ரீ பி.சி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த முகாமிற்கு நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில துணை தலைவர் சூட்டப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் சிறப்பு மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை களை வழங்கி அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் சிவகுரு, துணை அமைப்பா ளர்கள் ஹரிபிரசாத், மகேஷ்குமார், கவுன்சிலர்கள் சக்திரமேஷ், மாதப்பன், கீதா முத்துசெல்வம், ரமேஷ், சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் குட்டி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், பள்ளி முதல்வர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • முகாம் ஏற்பாடுகளை சக்கராஜா கோட்டை சத்திரிய ராஜுக்கள் மகாசபை தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சக்கராஜா கோட்டை பூசப்பாடி தாயார் பி.ஏ.சி ராமசாமி ராஜா பண்ணை மாளிகையில் விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சக்கராஜாகோட்டை மகாசபை மற்றும் தேசிங்கு ராஜா நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை சக்கராஜா கோட்டை ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா தொடங்கி வைத்தார்.

    கண் சிகிச்சை சக்தி கண் மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் குழுவினர் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கண்புரை, கண்ணீர் அழுத்தம், நீர் வடிதல், மாலை கண், மாறு கண், கண்களில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். முகாமில் கண்புரை உள்ளவர்களை அன்றே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச லென்ஸ் பொருத்தப்பட்டனர் மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் லென்ஸ் பொருத்துபவர்களுக்கும் இலவசமாக மருந்துவம் மற்றும் கண் கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சக்கராஜா கோட்டை சத்திரிய ராஜுக்கள் மகாசபை தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.

    • ராஜபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரெங்க பாளையம் சீட்டு அழகுராஜா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சக்கராஜா கோட்டை முதனூர் தாயாதியார் சாவடியில் ஸ்ரீரெங்கபாளையம் சீட்டு அழகுராஜா நினைவாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சக்கராஜாகோட்டை சத்திரிய ராஜுக்கள் பொதுமகாசபை, விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுத்துச் சங்கம் நிதி உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. சக்கராஜாகோட்டை ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட்டராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அறுவை சிகிச் சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உடனடியாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு விழிலென்ஸ் பொருத்துதல், உணவு, தங்கும் இடம், மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இலவச பல் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீரெங்க பாளையம் சீட்டு அழகுராஜா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • கண் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
    • குறைந்த விலையில் கண்ணாடி கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் கோபி கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில், மத்தூர் மாநகர அரிமா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் கோபி கிருஷ்ணா பள்ளி தலைவர் எம்.கே.எஸ் மாதன் முன்னிலை வகித்தார். எம்.கே.எஸ் பள்ளியின் தாளாளர் புஷ்பக் தலைமை யேற்று, குத்துவிளக்கு ஏற்றி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். பள்ளி துணைத் தலைவர் எம்.கே.எஸ் பிரசன்ன குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    இம்முகாமில் கண்ணில் புரை, கண்ணில் நீர் வடிதல், உள்ளிட்ட அனைவருக்கும் விரிவான கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் மருத்துவர் கலந்து ஆலோசனை வழங்கினார்.

    மேலும் கண்ணாடி அணிபவர்களின் கண்ணாடி பரிசோதித்து மிக குறைந்த விலையில் ஓரிரு நாட்களில் கண்ணாடி கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும் இப்பள்ளியில் படித்த மாணவி ரம்யா அரசு மருத்துவக் கல்லூரியில் பயில தேர்வாகியுள்ளார் என கோபி கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் புஷ்பக் தெரிவித்தார். இதனை யடுத்து அந்த மாணவியை அனைவரும் பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்தூர் மாநகர அரிமா சங்க உறுப்பினர்கள் பள்ளியின் முதல்வர் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முதியோர் ஏராளமானோர் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • கோபிசெட்டிபாளையத்தில் போலீசார்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் கண்கள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையத்தில் போலீசார்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் போலீசாருக்கு கிட்ட ப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்கள் சம்பந்த மான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    முகாமில் கோபி உட்கோட்டத்துக்கு உட்பட்ட கோபி, சிறுவலூர், கவுந்தப்பாடி,நம்பியூர்,கடத்தூர், வரப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்ட ர்கள். ஏட்டுகள், இரண்டாம் நிலை, முதல் நிலை போலீ சார், போக்குவரத்து போலீ சார் என ஏராளமனோர் கண்சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர்.

    இதில் ஈரோடு டாக்டர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • சிறிய குறைபாடு உள்ளவர்களுக்கு நேற்று கண் கண்ணாடி, மருந்துகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ரெகுநாதபுரம் மெயின் சாலையில் உள்ள வல்லபை அய்யப்பன் கோவிலில் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வல்லபை அய்யனார் சேவை நிலையம் அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நேற்று நடத்தியது.

    முகாமில் ரெகுநாதபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கண் குறைபாடு உள்ளவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர் வீரஜா தலைமையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி குழுவினர்களால் பரிசோதனை செய்யப் பட்டது.

    சிறிய குறைபாடு உள்ளவர்களுக்கு நேற்று கண் கண்ணாடி, மருந்துகள் வழங்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்டோர் கண் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். முன்னதாக வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குரு சுவாமி மோகன் வரவேற்றார். சந்தனகுமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் ரகுநாதபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஜெகத்ரட்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.
    • முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சோம்பட்டு ஊராட்சியில் சங்கர நேத்ராலயா ஆக்குபேஷனல் ஆட்டோமெட்ரி சர்வீஸ் மற்றும் ஜான் டி நுல் ட்ரேடஜிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்தியசிறு மற்றும் ஒரு தொழிலாளர்களுக்கான நிறுவனம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.

    இதில் துணை தலைவர் விஜயலட்சுமி ஒன்றிய கவுன்சிலர் வெற்றி (எ) ராஜேஷ் தொண்டு நிறுவனம் பத்மநாபன் ரகுநாத், வரதன், சசிபாபு, சோம்பட்டு ஊராட்சி மன்ற செயலாளர் தமிழரசன், தனியார் கண் மருத்துவமனை டாக்டர் ராஷிமா உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    • டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி வட்டார போக்குவரத்து கழகம், வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் பையாஸ் கமால் மருத்துவமனை ஆகியோர் இணைந்து ஓட்டுனர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி.குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.வி.பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். மோடார் வாகன ஆய்வாளர் வெங்கட் ராகவன் அனைவரையும் வரவேற்றார்.

    வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் கண் மருத்துவர் பரஹான் சவூத் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி பஸ், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டார்.

    மேலும் கண்பார்வை குறைபாடு உள்ள டிரைவர்களுக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    இதில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, இஸ்லாமிய கல்லூரி தமிழ் துறை தலைவர் ப.சிவராஜி, என். வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் ஏ.அருண்குமார் நன்றி கூறினார்.

    • விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • கண்புரை நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டப் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் விவேகானந்தா சேவா அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பூர் தாராபுரம் சாலை கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் 28ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    முகாமில் கண்புரை நோய், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுகண்நோய்,சீழ் நீர்வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்களுக்களுக்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. முகாமுக்கு வருபவர்கள் தெளிவான வீட்டு முகவரியையும், போன் நம்பரையும் எழுதிக்கொண்டு வர வேண்டும். கண்புரை நோயாளிகளுக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும். கிட்டப்பார்வை, தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை முகாமிலேயே குறைந்த விலையில் கண்ணாடிகள் வழங்கப்படும். இந்த முகாமில் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 96552 39828 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உப்பிலிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.
    • முகாமிற்கு வருபவர்கள் ஆதார் அட்டை, குடும்பஅட்டை, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.

    இந்த முகாமில் அனைத்து கண் நோய்களுக்கும் சிகிச்சை ஆலோசனையும் கண் ஆபரேசனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அன்றே திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, போக்குவரத்து மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், மேலும் முகாமிற்கு வருபவர்கள் ஆதார் அட்டை, குடும்பஅட்டை, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

    • அரசு மருத்துவமனையில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர் சின்ன இளைஞன் ஆலோசனைகளை வழங்கினார்.

    மேலூர்

    மேலூர் அரசு மருத்துவ மனையில் கண் நீர் அழுத்த நோய் சிறப்பு கண் மருத்துவ முகாம் மேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த முகாமை மேலூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண் மருத்துவர் தீபா வரவேற்றார். மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர் சின்ன இளைஞன் ஆலோ சனைகளை வழங்கினார்.

    இந்த முகாமில் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கண் பற்றி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து கண்ணில் உள்ள புறை உள்ளவர் களுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆபரே ஷன் செய்வதற்கு பரிந்துரை செய்தனர். நிகழ்ச்சியில் மருத்து வர்களும், முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவிகளும், செவிலியர் கண்காணிப்பா ளர், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் கலாமணி நன்றி கூறினார்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் கண் மருத்துவ மனை இனைந்து கொழுந்துரை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

    கொழுந்துரை ஒன்றிய கவுன்சிலர் சரண்யா செல்வராஜ் வரவேற்று கண்சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் இலவச உணவு வழங்கினார். இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் முகாமை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இலவச கண்ணாடிகளை அணிவித்தார். முதுகு ளத்தூர் வட்டா வளர்ச்சி அலுவலர் ஜானகி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெய பால், மணலூர் ராமர், சத்தியேந்திரன், ரஞ்சித், கொழுந்துரை ஊராடசி மன்ற தலைவர் நஸ் ரீன்பானு, வாகைக் குளம் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×