search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரைப்புதூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    கரைப்புதூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது

    • காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உப்பிலிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.
    • முகாமிற்கு வருபவர்கள் ஆதார் அட்டை, குடும்பஅட்டை, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.

    இந்த முகாமில் அனைத்து கண் நோய்களுக்கும் சிகிச்சை ஆலோசனையும் கண் ஆபரேசனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அன்றே திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, போக்குவரத்து மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், மேலும் முகாமிற்கு வருபவர்கள் ஆதார் அட்டை, குடும்பஅட்டை, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×